
முதல்மழை
தீ வெயிலில் காய்ந்த குன்றுகள்
மேகங்கள் சூழ நிற்கின்றன…
இனி மெல்ல எழுவாள்
பச்சை மாமலை போல் மேனியனின்
மார்பில் உறையும் தேவி.
*** *** ***
உலகமீன்றாள்
தீ விழியனின்
வெம்மையில் பொழிகிறாள்,
அவன் பாறைகளில் வழிகிறாள்,
மண்ணில் கலந்து தானுமாகிறாள்…
புல்லாய் எழுகிறாள்,
பூவாய் மலரும் சக்தி.