கட்டுரை

  • இணைய இதழ் 125

    ஹொய்சாளக் கலைப்பயணம்; 1 – செந்தில் ஆர் அமுதன்

    அறிமுகம்  வாழ்வின் ஆகப்பெரிய மற்றும் சிறந்த திருப்புமுனை என்பது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உலகத்தில் நுழைந்தது. தற்செயலாக நிகழ்ந்ததுதான் எனினும் அது இறைவன் என்னைத் தக்க தருணத்தில் ஆற்றுப்படுத்தி அருளியது என்றே நினைக்கிறேன். தமிழகத்தின் பொதுப் போற்றுதலுக்குரிய சட்டகமான, “பள்ளிக்கல்வி, கல்லூரி,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    நான்-ஒரு போஹேமியன் பயணி; 12 – காயத்ரி சுவாமிநாதன்

    மகாபோதியின் ஆலயத்தை நோக்கி நான் எடுத்த அந்த முதல் நடைபாதை, என் வாழ்க்கையின் வழக்கமான ஒரு பயணமாகத் தோன்றவில்லை. அது ஒரு அழைப்பாக இருந்தது. எங்கேயோ தொலைவில் இருந்து, ஆனால் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மௌன அழைப்பு. அந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    கே.பாலமுருகனின் தலேஜூ : மொழியின் களியாட்டம் – தமிழ் ஐயப்பன், சிங்கப்பூர்

    முதல் காதலைத் தொலைத்துவிட்டுத் தேடுபவர்களுக்குச் சமர்ப்பணம் என நாவல் தொடங்குகிறது. மிக எளிதான கட்டமைப்பு கொண்ட அழகியல் நாவல் என்பதை முதல் அத்தியாயம் தகர்த்து எறிகிறது. எழுத்தை இவ்வளவு வளைக்க முடியுமா என ஒவ்வொரு அத்தியாயமும் மூச்சடைக்க வைக்கின்றது. இந்த நாவலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    புத்தகக் குவியலில் புயலின் தாக்கம் – இளையவன் சிவா

    இலக்கியத்தின் மேன்மை என்பது வாசிப்போரை மட்டுமல்லாது பிறரையும் வாசிக்கத் தூண்டும் எழுத்துக்களில் வாழ்வதாகும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட எத்தனையோ வரலாறுகளை அவை வெளிப்படுத்தும் மனித உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி இரத்தினச் சுருக்கமாக நூல்களின் வாசிப்பை அவை தரும் கருத்தாழமிக்க செயல்பாடுகளை நவில்தொறும் நூல் நயம் நூலின் வழியே நமக்குக் கடத்துகிறார் ஆசிரியர். இலக்கியக் கடலுக்குள் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டு அதிலிருந்து சிறந்த முத்துக்களை நமக்காக எடுத்துத் தரும் பாங்கு ஆசிரியரின் தொடர் வாசிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நூலின் வழியே 15 நாவல்களையும் இரண்டு சிறுகதைகளையும் ஒரு மனிதனின் வாழ்வையும் நமக்கு அறிமுகம் செய்கிறார் .வெறுமனே புத்தக அறிமுகத்தோடு நின்றுவிடாமல் புத்தகம் எழுதப்பட்ட காலச் சூழலையும் அந்த ஆசிரியர்களின் வாழ்வுச் செயல்பாடுகளையும் கட்டுரைகளுக்குள் புகுத்தி நூல் எழுதப்பட்டதன் அவசியத்தை நமக்கு உணர்த்துவதில் ஆசிரியரின் மெனக்கெடல் அபாரமானது. உலக நாடுகளின் வரலாறு என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதைக் கூறுபவரின் பக்கம் இருந்தும் உணர்ந்து கொள்ள முடியும். தாம் கண்டறிந்த செய்திகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும். நூல் வடிவிலான வரலாறுகள் பேசும் இலக்கியத்தைவிட வாய்வழியாகப் பேசப்படும் இலக்கியங்களைக் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தும் செயல்பாடுகளையும் இந்த நூலில் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர் பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்குக் கொணர வேண்டியதன் அவசியத்தை பாரதி தொடங்கி எத்தனையோ எழுத்தாளர்கள் வலியுறுத்தி வரும் சூழலில் இந்த நூல் மிக அருமையாக அதைச் செய்து காண்பித்திருக்கிறது.  அறிமுகம் செய்யப்பட்ட பல நூல்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லை அந்த வகையில் இவற்றைத் தமிழில் கொண்டு வர வேண்டும் என்கின்ற உந்துதலையும் இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது நூலில் இடம்பெறும் பெரும்பாலான நூல்கள் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரத்தையும் அதன் விளைவுகளையும் மனிதத் தன்மையும் கருணையும் இரக்கமும் தொலைந்து போய் மக்கள் விலங்குகளாக மாறிநின்ற அவலத்தையும் விளக்குபவையாக அமைகின்றன சமூகத்தின் மீது பேரன்பும் அக்கறையும் வைத்திருக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் யான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கனவே ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி. தான் தேடித் தேடி வாசித்த நூல்களையும் அதில் கொட்டிக் கிடக்கும் உண்மைகளையும் சுருக்கமாகச் சொல்லி நூலின் வழியே பல எழுத்தாளர்களின் அனுபவங்களை நமக்கு எளிமையாக கற்றுத் தருகிறார் ஆசிரியர் இந்தியப் பிரிவினை வட மாநில மக்களுக்கு எவ்வளவு துன்பகரமான வாழ்வியலை அறிமுகம் செய்தது என்பதை நூலில் உள்ள பல கதைகள் வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தான் செல்லும் ரயில் நள்ளிரவில் சுதந்திரம் அதன் வழியே இந்திய முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட கலவரச் சூழல் என ஒவ்வொரு கதையும் அன்றைய காலகட்டத்தை நம் முன்னே காட்சியாக விவரிக்கின்றன.. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமான பயணத்தின் வரலாறு சொல்லும்  கோல்கட்டா மாரு எனும் நாவல் பிஷம் சஹனியின் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கொடூரங்களையும் மதவெறியையும் சித்தரிக்கும் வரலாற்று நாவலான தமஸ் எனும் நாவல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கொடூரங்களைச் சித்தரிக்கும் பாப்சி சித்வா எழுதிய ஐஸ் கேண்டி மேன் என்னும் நாவல் மனோகர் மல்கோத்தர் எழுதிய இந்தியப் பிரிவினையின் பல பரிமாணங்களைக் குறிக்கும் எ பெண்டு இன் தி கேன் ஐஸ் என்னும் நாவல் ஆர்வெல்லின் பகடிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய பகடிகளுக்கு இணையாகப் போற்றப்படும் அனிமல் ஃபார்ம் ஓர் அரசியல் பகடி என்னும் நாவல் குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் துயர் மிகு வாழ்வைச் சித்தரிக்கும் வழக்கறிஞர் கரீம் எழுதிய முகாம் எனும் நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும்  தத்தா எழுதிய வரலாற்று நூல் ஜாலியன் வாலாபாக்  ஊர்வசி பட்டாலியா எழுதிய இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்காலக் கொடுமைகள் பற்றிய வரலாறாக தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ் குரல் வளமிக்க பெண்மணி தனது பேசும் திறனைத் திடீரென இழந்த அவலத்தைச் சித்தரிக்கும் கேரளச் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சந்தோஷ் குமார் எழுதிய வார்த்தைகள் எனும் நாவல் தாமஸ் ஹார்டி எழுதிய நிறைவேறக் காதலின் வலியைச் சொல்லும் தி ரிட்டர்ன் ஆப் தி நேட்டிவ எனப் பதினைந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைகளையும் பற்றி பேராசிரியர் விஜயகுமார் ஆராய்ந்து சிறப்பாக மதிப்பீடு செய்துள்ளார் இந்திய விடுதலையின் கடைசி காலகட்டத்தில் நடைபெற்ற பிரிவினையின் காரணமாக மக்கள் எப்படி எல்லாம் அவதிப்பட்டனர் என்பதை நிறைய நூல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர் அவற்றில் உள்ள வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையினருக்கு எளிதில் புரியும் படியாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வாசிக்கும் நமக்குப் புதுப்புது புதையல்களை அறிமுகம் செய்கின்றன ஒவ்வொரு செய்திகளிலிருந்தும் தொடர்ச்சியான வரலாற்றின் தேடல்களையும் இன்றைய காலச் சூழலில் போராட்டத்தின் மீது மனிதர்கள் வைத்திருக்கும் சிந்தனைகளையும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றன. நவில்தொறும் நூல் நயம் – விஜயகுமார் கட்டுரைத் தொகுப்பு பட்டறிவு பதிப்பகம் மதுரை முதல் பதிப்பு ஜனவரி 2026 பக்கம் 130 விலை ரூபாய் 120

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    என். ஸ்ரீராம் கதைகளின் மாயாதீதம் – ராணி கணேஷ்

    நதிப்பிரவாகம் அமராவதியின் பெருஞ்சீற்றத்தை அருகிருந்து கண்ணுற வைக்கும் கதை. என்.ஸ்ரீராம் அவர்கள் எந்தக் கதைக் கருவாய் இருந்தாலும் அதில் தரவுகளைக் கண்டறிந்து தெளிவாக எழுதிச் செல்கிறார். இந்தக்கதையில்தான் எத்தனை வகையான சேவல்களின் பெயரை அடுக்கியுள்ளார். அவரின் கதைகளில் பூவாகட்டும், புல்லாகட்டும், பறவைகளாகட்டும்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    புதைமணல் : பெருநகர மனங்களின் அலைவுறும் கணத் திரட்சி – ஞா.குருசாமி

    எழுத்தாளர் அரவிந்தனின் ‘புதைமணல்’ நடப்புலகின் பெருநகர வெளிகளைக் களமாகக் கொண்ட வித்தியாசமான கதைகளின் தொகுப்பு. இதில் உள்ள பத்துக் கதைகளிலும் ‘அலைவுறும் மனித மனங்கள்’ பொதுவான அம்சமாக இருந்தாலும் ஒவ்வொரு மனங்களும் வாசகனைப் பார்த்து ‘நீதான் நான்’ என்று சொல்லும் படியான தொனியைச் சுமந்துகொண்டிருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் வாசகனை எதாவது ஓர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    நுணுகிப் பார்த்தல் – மணி மீனாட்சிசுந்தரம்

    “பார்க்கப்படும் நிலவைப் போன்றதல்ல    சொல்லப்படும் நிலவு” பா.வெங்கடேசன் நுணுகிப் பார்த்தல் என்பது எப்போதும் ஒரு சிறந்த கவிதையின் சிறந்த பண்பாக இருக்கிறது. நுணுகிப் பார்த்தல் என்பதில் யாரும் காணாததைக் கவிஞன் காண்பதும், யாரும் கண்டவற்றுள் கவிஞன் கண்டடையும் தனித்த ஒன்றும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    காலங்காலமான பெண்களின் கடுந்துயர் கதைகள் – அன்பாதவன் 

    கோணவாச்சி   சிறுகதைகள் – ஆங்கரை பைரவி ஒரு படைப்பாளி தன்னைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்விலும், எந்த இடத்திலும் தனக்கான படைப்புத்தளத்தை கண்டறிய முடியும். அந்த வகையில் ஆங்கரை பைரவி டெல்டா பிரதேசக் காவிரிக் கரையின் எளிய கிராமங்களிலிருந்து, தனக்கான கதைக்களத்தை, கதை மாந்தர்களைக் கண்டடைகிறார். கண்ட நிகழ்வுகளை, மனிதர்களைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    ச.ஆனந்தகுமாரின், ’நினைவு யாழ்’ வாசிப்பனுபவம் – யமக்குன்று

    பதினேழு கதைகள் அடங்கிய எளிய வாசகர்கள் வாசிக்க ஏதுவான அற்புதமான படைப்பு. இதில் இடம்பெறும் கதைமாந்தர்கள் கடைசியில் தன்னை அறத்தின் நோக்கத்தில் இருத்திக்கொண்டு நிற்கிற மீட்சி பெருவலிமை. ஒவ்வொரு முடிவிலும் மையக் கதாபாத்திரம் குறிப்பிட்ட செயலை, நினைவை, படிப்பினையைப் புதுப்பித்துக்கொள்கிறது. அறத்திற்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 124

    காடும் காடு சார்ந்த நகரமும் – கேபிஆர்

    ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி, காடுகள்அழிவதைத் தடுக்க ஒரு  முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக ஒரு காடு இயற்கையாக வளர 200 முதல் 300 ஆண்டுகள் ஆகும். ஆனால், மியாவாக்கி முறையைப் பயன்படுத்தினால், வெறும் 20 முதல் 30 ஆண்டுகளில் ஒரு முதிர்ந்த காட்டை உருவாக்கிட முடியும். சாதாரணக்…

    மேலும் வாசிக்க
Back to top button