கவிதைகள்
Trending

கவிதைகள்- கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்

தனிமைக்குள் தாழிட்டமர்ந்து

வெறுமையின் கரங்களில் ஒப்புவித்து

இயலாமை கசியும் இருவிழி துடைத்து

துயிலா நினைவுகளைத் துகிலுரித்து

விமோசனமற்ற சாபங்களோடு சல்லாபித்து

துக்கித்துத் துவண்டு வெளியேறியதும்

ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்

உதட்டு வளைவிலிருக்கிறது

வாகாய் வாழ்வு நகர்த்தும் சூட்சுமம்.

**********

கற்பனை உலையில் வெந்த

கனவின் பருக்கைகள் புசித்தும்

காலமெல்லாம் தீராப்பசியோடலையும்

காமசண்டிகைக்கு

எந்த அட்சயப்பாத்திரம்

பிச்சையிட்டு இச்சையடக்கக்கூடும்?

**********

கூடு வீழ்ந்த குருவிக்குஞ்சென

படபடக்கும் இதயத்தின் துடிப்படக்கி

பொருத்திக்கொள்கிறது மற்றொன்று.

மென்னுடற்சூட்டின் ஆதுர அணைப்பினின்று

மெல்லக் கனல்கிறது வெதுவெதுப்பு.

பிடிவிலகாது பெருங்கருணை கொண்டு

பரவெளியெங்கும் பற்றியெரிகிறது பாரிய நெருப்பு.

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button