நான்
என்னும்
உண்மை அறிவு
மிகுதலுமில்லை
குறைதலுமில்லை.
***
கடலுள் மூழ்குபவன்
உயர்த்திய
ஒரு கை மட்டும்
வெளியே
காப்பாற்றக்
கேட்கிறதா?
விடைபெறும்
சமிக்ஞையா?
அபய
முத்திரையா?
***
எழுபிறப்பின் முன்
உயிரும் மோனம்
மெய்யும் மோனம்
மோனம்
இரண்டன்று.
***
நெஞ்சொடு கிளர்த்தல்
ஒரு கணம்
நெஞ்சொடு கிளத்தல்
ஓராயுள்!
***
சட்டியாய்
இருப்பாய் எனில்
தழல் தாங்கியாகணும்;
நெஞ்சே!
சட்டுவமாய் இரு.
***
எரவாணத்துக்கு மேலே
இருக்கிறது வானம்
வானத்துக்கு அப்பால்
இருக்கிறது வெளி
உத்தரமே
உயரமென்று
நினைக்கிறது ஈ.
***
முன்பெல்லாம்
மழை
நல்லதொரு சாக்கு
கவிதை எழுத
இப்போதெல்லாம்,
எழுதாமலிருக்க.
*********