இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

சுகன்யா ஞானசூரி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

காதலும் காதல் நிமித்தமும்

நம்
பிரிவு தாளாது
வெக்கையேறிக் கிடக்கிறது
நிலம்
வசந்தத்தின் பெருவாழ்வினை
சூனியமாக்கிய சொற்கள்
உதிர்ந்துக் கொண்டிருக்கின்றன
மதர்த்துப் பொங்குகிறது கடல்
கயலினங்களின் கூடுகைக்காலம்
மலை மேவும் முகிலாய்
விரைந்து வா
கோடை மழையொன்றைத் தருவிப்போம்
முத்தங்களைச் சொரிந்து.

ஏக்கத்தின் பெருமூச்சு
வெப்பத்தின் தகிப்பு
நினைவின் தாழ்வாரங்களில்
சொரியும் கண்ணீர்
தணிக்க முயற்சிக்கிறது
நினைவழுத்தும் தழும்புகளை
வருடிப்பார்த்துக் கொள்கிறேன்
சேர்ந்து கொண்டதைவிடவும்
சேராத காதல்களில்
யுகங்கள் கனதியாய்
நீ என்னையும்
நான் உன்னையும்
நாம்
நம் காதலையும்
சுமந்தவண்ணம் நினைவுகளில்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button