இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

அம்முராகவ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

முலைகளில்
கண்ணீர்
கருப்பையில்
துயரம்

கூதிர்காலம்
மூங்கிலின்
வயிற்றில்
சிசுவென புரண்டு அலைகிறது
தழல்
காடு வெயில்பூச
மூங்கில் அடிவயிற்றை உரசுகிறது

தழல்
உண்கிறது
தாயின் கருவறையை

மௌனத்தை
உடைத்துத்திறக்கும்
பெருமூச்சு
வலியை உண்கிறது
அடிவயிற்றில்
அர்த்தம் அறைகிறது
சொற்கள்
உன்மத்தத்தை அருந்த
இதயம்
உதட்டுத்தசை ஆகிறது

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button