இணைய இதழ் 100
-
Oct- 2024 -5 October
பாலை மழை – அன்பாதவன்
பாலை மழை – அன்பாதவன் மழை! இரவிலிருந்தே மழை! இடைவிடாப்பெருமழை! பேய்மழை கனமழை என்பார்களே அதுபோல நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது. வானத்தை யாரோ பெரியதொரு கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கிழித்தாற்போல கொட்டோ கொட்டெ’ன்று மேகம் தொடங்கி பூமி தொடும் நீர்க்கம்பிகளின்…
மேலும் வாசிக்க -
5 October
பிறர்மனை – கா. ரபீக் ராஜா
அதிகாலை அலைபேசி அழைப்புகள் கொண்டு வரும் செய்திகள் நிச்சயம் நல்லவற்றுக்கு நெருக்கமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த அழைப்பும் அப்படித்தான் இருந்தது. நான் மனைவியின் ஊருக்கு வந்திருந்தேன். இது என் ஊரிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமம். அழைத்தது அப்பா. எப்போதும் பேசிக்கொள்ளாத…
மேலும் வாசிக்க -
5 October
பிரம்ம முகூர்த்தம் – பாலைவன லாந்தர்
நான்கு நாட்களாக மழை நசநசத்துக் கொண்டிருந்தது. மொத்தமாக தெருக்களில் நீர்வரத்துப் பெருகி தாழ்வான இடங்களை நிரப்பியும் அடங்காமல் ஓடிக் கொண்டும் இருந்தது. நெகிழிக் குப்பைகள் குழிகளையும் மடைகளையும் அடைத்துக் கொள்ள சாலைகள் தெப்பக் குளமாக காட்சியளித்தது. மரக்கிளைகளில் ஒண்டிக் கொள்ள வாகில்லாமல்…
மேலும் வாசிக்க -
5 October
ரோஜா – பாவண்ணன்
மாற்று பாவாடை தாவணியை தோள்மீது போட்டுக்கொண்டு குளிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீற்றுப்படலை நோக்கிச் செல்லும்போது, “தேவிகா, ஒரு நிமிஷம், இங்க வந்துட்டு போம்மா” என்று அடுப்பங்கரையிலிருந்து அம்மா அழைத்தாள். நின்ற இடத்திலிருந்தே முகத்தைத் திருப்பி, “என்ன விஷயம்? சீக்கிரமா சொல்லும்மா.…
மேலும் வாசிக்க -
5 October
ரூட்டு தல – பிரவின் குமார்
நீதிமன்றத்திற்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் மனம் வழக்கின் இறுதி நாளை எண்ணிதான் ஏங்குகிறது. காலத்தை பின்னோக்கி சுழலவிட்டால் இன்று அலைக்கழித்துக் கொண்டிருப்பதற்கான தேவையை நிச்சயம் தடுத்திருப்பேன். அதுபோன்ற சந்தர்பம் இனி எப்போதும் வாய்க்கப்போவதில்லை. எல்லாம் உணரும் போதுதான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது.…
மேலும் வாசிக்க -
5 October
ரட்சகன் – ஜீவ கரிகாலன்
இன்வெர்ட்டர் இல்லாத நடுத்தர வீடுகளுக்கேயான கோடை மாத வெப்பம் தகிக்குமாறு பாவ்லா செய்யும் சாளரத்தில் காற்றுக்கு பதிலாக ஊடுருவும் இன்வெர்ட்டர் ஒளி விளக்குகளில் என் தோளில் படர்ந்திருக்கும் ஊடல் முடித்த அவளது தேகம்.. தூக்கத்தில்தான் இருந்தாள். நான் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன்.…
மேலும் வாசிக்க -
5 October
வேட்டை – உமாதேவி வீராசாமி
சில நாள்களாகப் பக்கத்து வீட்டுச் சிவகாமி அக்கா வீட்டுக்குப் போகவே பயமாக இருக்கிறது. அந்தப் பெரிய அண்ணன் என்னைப் பார்க்கிற பார்வையும், யாருமில்லாதபோது என்னிடம் பேசும் பேச்சும் அச்சமூட்டுகிறது. அவரது வெறித்தனமான செயல்கள் பயமுறுத்துகின்றன. அம்மாவிடம் சொல்லிவிட மனம் துடிக்கிறது. பலமுறை…
மேலும் வாசிக்க -
5 October
வெங்கிட்டம்மா – சுந்து & ஜாஜா
நீண்ட கல் திண்ணை குளிர்ந்து கிடந்தது. கல் திண்டில் தலை வைத்துக் கொண்டால் தூக்கமும் மயக்கமும் கலந்தது போல நினைவுகள் குழம்பி உடல் ஓய்ந்து கிடந்தது. மெல்லிய கதம்ப மணமும் பருப்பு வேகும் மணமும் கலந்த வாசனையாக அம்மா நாசி வழியே…
மேலும் வாசிக்க -
5 October
வடிவமற்ற தாரைகள் – சுபி
சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் தனியார் பேருந்து அது. செங்கல்பட்டு நிறுத்தத்தில் நான் ஏறிக் கொண்டேன். போனில் சொன்னபடியே சரியாக காலை ஒன்பது மணிக்கு வந்து நிறுத்தினார் டிரைவர். வேறு யாரும் செங்கல்பட்டு நிறுத்தத்தில் ஏறவில்லை போலும். நான் ஏறியவுடன் வண்டியைக்…
மேலும் வாசிக்க -
5 October
விக்ரமாதித்தனும் வேதாளமும் – கமலதேவி
கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன். அதன் கீழே பெரிய வலை. அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப் பிடிக்கிறேன். அந்தரத்திலிருந்து ஒரு முகம் என்னைக் குனிந்து பார்க்கிறது. அதன் கண்களில் எத்தனை குளுமை. ‘கமலா..’ என்று அழைக்க நினைக்கிறேன். குரல்…
மேலும் வாசிக்க