கவிதைகள்

  • Jan- 2023 -
    19 January

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    அணில்மயிர்த் தூரிகை ஜன்னலருகில் கொய்யாக் கிளைகளில் பால் செசானின் பழங்கள் பீன்ஸ் நறுக்குகையில் லேசாகக் கழுத்தைச் சாய்த்திருக்கிறாள் சகதர்மினி சான்றோ பாட்டிசெல்லியின் மகுடம் சூடும் மேரியைப் போல். சுற்றுச்சுவரண்டையில் குறுஞ்செடிகளில் வான்காவின் ஐரிஸ்களைப் பழிக்கும் தும்பைப் பூக்கள் உணர்வுப் பதிவிய ஓவியம்…

    மேலும் வாசிக்க
  • 1 January

    பூவிதழ் உமேஷ் கவிதைகள்

    பறவைகளின் மூன்று வேலைகள் பள்ளி நண்பர்களைப் போல தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு அவை நாள்தோறும் மூன்று வேலைகளைச் செய்கின்றன துல்லியமான தருணத்தில் மரத்தின் ஓர் உறுப்பாக இருப்பது பறக்கும்போது மேகங்களைப் போல நடித்துக் காட்டுவது அப்பறவைகளின் பெயரிலேயே மீதம் வாழ்வது…

    மேலும் வாசிக்க
  • 1 January

    தீபிகா நடராஜன் கவிதைகள்

    எல்லைகளற்ற வெளிகளில் பறந்தலைகின்றன என் பறவைகள் கதவுகளற்ற கூடு அவற்றுக்கு மயிலும் குயிலும் வாத்தும் நாரையும் ஒன்றாகத்தான் வளர்கின்றன அவசியம் தவிர்த்து அவை ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பட்டப்பகலிலும் வீட்டைப் பூட்டி தலையணையடியில் சாவியை வைத்து தூங்குவதில்லை அதன் தாய்…

    மேலும் வாசிக்க
  • 1 January

    விக்னேஷ்வரன் கவிதைகள்

    மிஸ் யூ பொதுவெளியில் தவிர்க்கப்படுகிறது காலவெளியில் காணாமல் போகிறது காதலர்களால் கைவிடப்படுகிறது. ஒரு உறவின் ஆதியில் அது உதிப்பதே இல்லை உறவென்று சொல்ல எதிர்பிம்பம் இல்லாமலாகும்போது மிக மிக அவசரமாக அது தேடப்படுகிறது துர்க்கனவுகளின் முடிவில் ஒரு நிழல் போல அதை…

    மேலும் வாசிக்க
  • 1 January

    நிழலி கவிதைகள்

    இனிப்புக் கறை துவண்டு ஓடும் நரம்புகளை இழுத்துப் பிடித்துக் கைடிப்பிடிக்குள் திணித்து தாத்தாவின் வெள்ளை வேட்டியை வெளுத்து இன்னும் கொஞ்சம் வெண்ணிறம் படற உலர்த்தி மடித்து வைக்கிறாள் பாட்டி வேட்டியை உடுத்திக்கொண்டு வீதி வரும் தாத்தாவைப் பார்த்த பேரக்குழந்தை மிட்டாய் வேண்டுமென…

    மேலும் வாசிக்க
  • 1 January

    ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்

    பெருங்கருணை பறவை விதைத்த விதை முளைவிட ஒரு மழைநாளில் சிறிது நெகிழ்கிறது பாறை சிசுவின் பசி சிணுங்கலில் கண்ணீரைச் சுரக்கின்றன தாயின் முலைக்கண்கள் கரு முதல் கண்கள் அற்ற கவிஞன் கனவில் எழுதுகிறான் கவிதையை நீ வளிமண்டலப் பிரவேசத்தில் எரியும் நட்சத்திரம்…

    மேலும் வாசிக்க
  • Dec- 2022 -
    16 December

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    சிறுமியின் குரலில் ஓர் ஆலத்தி கேட்டல் முல்லை ஆயன் குழல் இசைக்கிறான் ரூமியின் சபையில். நாணின் நாதத்தில் தன்னை இழந்த வேட்டுவன் பாணன் ஆகிறான் பாலை வெளியில் கவ்வாலி ஆகிறது பழங்குடிச் சிறுவனின். கைத்தட்டல். பூவரச இலைச்சுருள் சீவாளி ஆக நாதத்துளியில்…

    மேலும் வாசிக்க
  • 16 December

    சு.ராமதாஸ்காந்தி கவிதைகள்

    பருவம் பழைய பருவக்காரனின் எழவு சேதி காதுக்கு எட்டும் முன் புதுப் பருவகாரனிடம் அடுத்த போகத்திற்கான பருவத்துக் கூலியை “குழிக்கு இத்தனை சலகைதான்” என்று கறாராகப் பேசிவிடுகிறார் பண்ணாடி பொழுது சாய எழவு விசாரிக்க வருபவரின் காலில் விழுந்து அழும் பருவக்காரிச்சியின்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    காயத்ரி ராஜசேகர் கவிதைகள்

    ஒப்புக் கொள்கிறேன் உன்னோடிருந்த காலங்களில் நான் அத்தனை பால்யத்தையும் மீட்டெடுத்திருந்தேன் நில்லாமல் இரட்டிப்பாகிய எனக்கு பகல் நிழலாய் நீ தெரிய உன் முகம் கையேந்தி கண் நிறைத்துக் கொள்கிறேன் மீளுருவாக்க முடியாத நேற்று நம் பந்தம் உன் கண்படும் தூரத்தில் இருந்துமில்லாமல்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

    அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…

    மேலும் வாசிக்க
Back to top button