கவிதைகள்
-
Feb- 2020 -16 February
கவிதை- விஜயபாரதி
சுள்ளிகளென உடல்கள் எரிய ஆகுதிகளாகிய அவைகளின் ஓலமொழி புரியாமல் மயானத்தில் எதைத் தேடுகிறீர் அரசே சுவரென நின்ற தீண்டாமையையா? பேரிடருக்குள் சிதையுண்ட துகள்களில் ஒட்டிய குரூரத்தையா? உடைந்த கூடுகளில் நசுங்கிக் கிடக்கும் மனிதம் வெறித்த விழிகளில் தேங்கிய கனவுகள் ஒருபோதும் அகப்படாது…
மேலும் வாசிக்க -
16 February
கவிதை- பழனிக்குமார்
அப்படியான ஓவியத்தில் இருந்துகொள்ள அந்தப் பறவைக்கு விருப்பமில்லை தான்…. இந்த ஓவியத்தின் முதல் தீற்றலாய் விழுந்த பறவையின் அலகு வெகுக் கூராயிருப்பதில் அதற்கொரு கவலை… தான் ஒருபோதும் அடர் சிறகுகளுடன் பேடையுடன் களிப்பதில்லை என்பதறியாது தீட்டப்பட்ட ஓவியத்தில் இருந்துகொள்ள பறவைக்கு விருப்பமில்லாமல்…
மேலும் வாசிக்க -
16 February
கவிதைகள் – கட்டாரி
போத்தல்கள் நிரம்பிக் கிடக்கும் மதுபானக்கடையின் அதிகாலைப்பொழுது எத்தனைப் பேரழகோடு இருக்கிறது.. பச்சை நிறக்குப்பியில் லிப்ஸ்டிக் தீற்றல் யாருடையதோ… கழிந்த இரவில் எதைக்குறித்துப் பேசினாளோ… மிச்சமிருந்த கடைசித் துளியைப்போல சொட்டுச்சொட்டாய் இறைந்து கிடக்கிறது கவிதைகள்… இரண்டு ஹைஹீல்ஸ் செருப்புகள் ஒடிந்து கிடந்தன…..! இன்னுமா…
மேலும் வாசிக்க -
16 February
கவிதைகள்- ரேவா
1. இடுகுறியெனும் இயலாமைக் களஞ்சியம் * இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை குறீயீட்டு மௌனம் கொன்று குவிக்கிற ஓராயிரம் அர்த்தப் பிரேதத்தின் முன் மண்டியிடுகிற மனமாய் இருக்கிறது உன் தேவை காடள்ளி கனலள்ளி நீரற்று வெறும் வாய் நிறைக்கும் காற்றின் களமாகி நிலம்…
மேலும் வாசிக்க -
4 February
கவிதைகள்- செ.கார்த்திகா
சுப்புகுட்டி தாத்தனுக்கு தெரியாத வேலைனு ஏதுமே இருந்தது இல்லை யாருக்கும் அடங்காத மாட்டை அடக்கி ஒரே ஆளாய் மூக்கணம் குத்திப் போடும் எல்லாருக்கும் ஓடி ஓடி உழைக்கும் சுப்புக்குட்டிக்கு ஓய்வுநேர பொழுதுபோக்கு குழந்தைகள் தான் என் சோட்டு குழந்தைகளுக்கு பனை ஓலையில்…
மேலும் வாசிக்க -
3 February
கவிதை- விபீஷணன்
03-கருமை நிற ரத்தம் எலும்புகளாலான சிம்மாசனத்தில் நதிக்கரையில் அமர்ந்து அதனுள் உதிக்கும் சூரியன், பறக்கும் பறவைகளைக் கண்டேன். வெண்மேகங்கள் நுரைத்திருந்தன. என் பிம்பத்தின் மீது வட்டம் மற்றும் தாள் வடிவக் கற்களை எரிந்தேன் அதிலிருந்து வழிந்த கருமை நிற ரத்தம் மறுகரையில்…
மேலும் வாசிக்க -
Jan- 2020 -31 January
கவிதைகள்- மித்ரா
1. அதீதங்களுக்கு சமயங்களில் நீடித்த பித்தின் சாயலேறி விடுகிறது அதில் நூறாண்டுகளாய் புதைந்து கிடந்த சுண்டக்கஞ்சியின் நெடி அப்பைத்தியத்தின் ருசியை புறங்கையில் வழியும் வரை அள்ளிப்பருகத் துடிக்கும் ஒருத்தியைத் தெரியுமெனக்கு அவளுடலெல்லாம் கசிகிறது பழங்கால போதையொன்று 2. எப்போதும் அதீதங்களோடே புழங்கி…
மேலும் வாசிக்க -
27 January
கவிதைகள்- மதுரா
விடுமுறை கோட்டைக் கொத்தளங்கள் தூசு தட்டப்பட்டு ராஜா ராணிகள் நவீனத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.. பாரம்பரிய உணவுகளோடு பிட்ஸாவும் பர்கரும் இணைந்து கொள்கின்றன.. அழுகாச்சி தொடர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஆதித்யாவும் கார்ட்டூன்களும் களைகட்டுகின்றன.. முன்னூறு நாளாய் எந்த மருந்து மாத்திரைக்கும் கட்டுப்படாத மூச்சு பிடிப்பும் மூட்டுவலியும்…
மேலும் வாசிக்க -
27 January
கவிதைகள்- ஜீவன் பென்னி
ஞாபகம் – 1 சின்னக் காலங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதென்பது ஒரு நண்பனை கைவிடத்துணிவது மறந்திருந்த மனதொன்றை மிகத் தற்செயலாய் எதிர்கொள்வது இன்னும் மிகக்கச்சிதமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு முடிவற்றதை நோக்கி நகரத்துவங்குவது. இவ்வளவு பெரிய நதியில் மிதந்து கொண்டிருக்கும் போது வாழ்வின் எல்லைகள்…
மேலும் வாசிக்க -
27 January
கவிதைகள்- இரா.கவியரசு
1.வரைந்தவுடன் சிலையாக மாறுபவள் ??????????????? அம்மாவின் கைகள் சூம்பியிருக்கின்றன செவ்வக வயிற்றில் உறங்கும் சிறுவனை உதைத்துச் சுருட்டுகிறது குளிர் கதகதப்புக்காக முட்டும்போது மோதி நிறுத்துகிறது பெரும்பாறை. வானம் பார்த்த அவளது கண்கள் அசைவற்று நிற்கும் போது உடைந்துள்ள இதழ்கள் இறங்கி முத்தமிட…
மேலும் வாசிக்க