கவிதைகள்

நிலாகண்ணன் கவிதைகள்

நிலாகண்ணன்

இனி மண்ணின் சுகந்தமுணர்வேன்
நீங்கள் எதற்காக அழுகிறீர்கள்.

எல்லாம் கைவிட்டுப் போனதால்
கால்விட்டுப் போனது
நாற்காலி.

வெய்யில் நுழைய
தரையுலர்கிறது
ஈரம் மறைய மறைய ஒரே நடனம்.

என்ன உணர்ந்தது
எதை மறந்தது
எதற்காக திரும்புகிறது
இந்த எறும்பு.

பித்தேறியலைகிறேன்
காலி பீர் போத்தலுக்குள் நிரம்பியிருக்கிறது
நிலவொளி

நிழலில் குளிர்
பழமையான மடாலயம் வருகிறது
புதிய தூக்கம்.

துருப்பிடித்த பயணம்
சைக்கிள் ஏறுகிறது
படரும்கொடி

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button