இணைய இதழ்இணைய இதழ் 67கவிதைகள்

சுஷ்மா கவிதைகள் 

கவிதைகள் | வாசகசாலை

ஏன் எழுதுகிறாள்?
ஏன் எழுத வேண்டும்?
என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள்.

ஊர் கூடுமிடத்தில்
இருக்கும் ஒற்றைப்
புளியமரம் எனக்கது!

அதன்

வேர் பிடித்துத் துயில்வேன்,

கிளை எண்ணிச் சுகிப்பேன்,

ஏதேனுமொரு பொந்திடை

ஜீவன் ஒளித்துத் தேடுவேன்,

பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,

ஞானம் பெற புத்தர்கள் வேண்டுவேன்.

வேறென்ன செய்ய நான்?!

*** 

உறங்கச் செல்ல
எப்போதும் போலவே
ஆயத்தமாகிறோம்.
ஆயினும் கிடந்ததும்,
எனை இழுத்துக்
கைக்குள் வைத்துக்கொள்ள
ஒரு நொடியேனும்
தாமதமாகி விடுகிறது
இன்று வரை!

என்னை
முழுதாய்க் காதலிக்கத்
தெரிவதே இல்லை
உனக்கு!

*** 

நீ
சொன்னபடியே
முதல் சந்திப்பின்
நகல் போல்
கை குலுக்கிப்
பிரிந்திருக்கலாம்

நீள் நினைவு
நெஞ்சரிக்கிறது!

********

sushkrish7@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. மிகவும் கவனத்துடன் உள்ள கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button