இணைய இதழ் 106கவிதைகள்

கி.கவியரசன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மின்னலொன்று உன் முகத்தை
வரைந்து செல்கிறது

இன்னும் வேகமாய்த் துடிக்கிறது இதயம்
அடுத்த மின்னலுக்கு
உன்னிடம் வந்து சேர்ந்திட…

இந்த மழை
உன் நினைவுகளைப் பொழியத் தொடங்குகிறது

உன் நினைவுகள் விழ விழ
இன்னும் வெகு நேரம் பிடிக்கிறது
இந்தப் பயணம்.

***

ஒவ்வொரு முறையும் வந்து செல்லும்
காட்டாற்று‌ வெள்ளத்தைப் பற்றி
எண்ணற்ற
அபாயக் கதைகளைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்
இறுதிவரை
தன் மெளனத்தை
இறுகப் பிடித்திருக்கிறது
எல்லாம் தெரிந்த ஒரு பாறை.

***

குளத்தின் மேலெழுந்த சலனம் போல்
ஆழ்ந்த மெளனத்தின்
கரையை முட்டித் ததும்புகிறது
எங்கிருந்தோ ஒரு பறவை எழுப்பிய ஒலி.

kaviyarasu1411@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button