கவிதைகள்
-
இணைய இதழ்
நலங்கிள்ளி கவிதைகள்
நில நிலவரம் ஏற்கனவேயிருந்த இடத்தை விற்று மெயின் ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்டலாம் என்பது திட்டம் தரகர் காட்டிய இடம் சதுர வடிவம் அவ்விடத்தை பொறியாளர் ப்ளூ பிரின்டில் முக்கோணமென உறுதியளித்தார் இரண்டாம் தரகரிடம் விசாரிக்கச் சொன்ன பொழுது அந்த இடம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குமரகுரு கவிதைகள்
கடினமான காலங்களில் இளைப்பாறுதல் தந்த மலர்களாய்ப் பூத்துக் குலுங்கிய செடி! நான் மகிழ்ச்சியில் ஆடிய அன்று வாடிப் போயிருந்தது. நான் எப்படி அதற்கு ஆறுதல் சொல்வேன்? என் துக்கத்தில் அதற்கு நீரூற்ற மறந்தவனல்லவா நான்? **** என்னிடம் ஒரு உவமை உள்ளது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
கழிவறை கவிதைகள் கழிவறையில் மலர்ந்த மலர் கழிவறை பீங்கானின் விளிம்பில் கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து கோலம் இடுவது போல கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன் தொடர்பற்ற துளிகள் விழ விழ புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய் அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை வெறும் வெள்ளை இல்லை அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன நீலம் இணைந்த புள்ளிகள் மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர். ***** நிறங்களின் அரசி கழிவறையில் நீல திரவம் பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம் நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ நீலம் என்பது நிறங்களின் அரசி அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது இல்லையில்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேவதேவன் கவிதைகள்
கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இந்திரலேகா கவிதைகள்
யாருமற்ற சிலுவை இயேசுவை சிலுவைச்சாவுக்கு தீர்வையிடுகிறார்கள் நான் உன்னிடம் காதலைச் சொல்கிறேன் இயேசு சிலுவை சுமக்கிறார் நீ மறுமொழியற்று திரும்பிப் பார்க்கிறாய் இயேசு முதல் முறை கீழே விழுகிறார் நீ முதல் முறையாய் கை கோர்க்கிறாய் இயேசு இரண்டாம் முறை கீழே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்
வீட்டில் அவர் யாரோடும் அதிகமாகப் பேசினதில்லை. கேட்டால் பதில் சொல்லுவார் அவ்வளவுதான். வெளியே யாரோடும் பேசுவார். அவரை அங்கே இங்கே யாரோடோ பேசிக் கொண்டிருந்ததை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சாப்பிட சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். முன்பெலாம் மூன்று நேரம் சாப்பிடுவார். ரொம்ப…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குகை மா.புகழேந்தி கவிதைகள்
வாழ்க்கை நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து எல்லாத் திசைகளுக்குமாய் எண்ணற்ற பாதைகள் நீளுகின்றன ஒன்று கடலை நோக்கி மற்றொன்று மலையுச்சிக்கு ஒன்று கலைக்கூடத்திற்கு மற்றொன்று மாபெரும் பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கு ஒன்று விசாலத்தை முன்னிறுத்தி மற்றொன்று குறுகலான முட்டுச்சந்திற்கு ஒன்று அமைதியின் மையப்புள்ளிக்கு மற்றொன்று கொலைவிழும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செந்தி கவிதைகள்
ஒரு ரயில் காட்சி ரயிலடியில் வழியனுப்ப வந்தவர்களும் வண்டியில் ஏறப்போகிறவர்களும் தங்கள் காதுகளில் ஏதோவொன்றை மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தபடி யாருடனோ பேசியபடியே இருக்கிறார்கள் கடைசி நிமிடத்தில் தட்டுத்தடுமாறியொருவன் ஏறுகிறான் காபி காபி என்று கூவுகிறான் ஒருவன் உட்கார்ந்த கணத்தில் இட்லியைப் பிரிக்கிறார்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நெகிழன் கவிதைகள்
அம்மா வீட்டிலிருக்கும் மனைவி போன் செய்து கேட்டாள் என் செல்லப் பூனை என்ன பண்ணுகிறது சுவரெல்லாம் ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும் ஆறாமல் தன் நகங்களைத் தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு பெருங் கோபத்தில் இருக்கிறது. *** துயரலகு இரவுப் பறவை என் வீட்டின் மூலையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…
மேலும் வாசிக்க