இணைய இதழ் 126
August 27, 2026
விஜி ராஜ்குமார் கவிதை
மெய்வம் நிகரில்லா மெய் ஒன்றுநிகழும் பொழுதுகளில்அறிதலில் உள்ளது அனைத்தும்.நிகழும் அனைத்திலும்நிகழ்ந்து கொண்டிருக்கும்தெய்வம் வேறு.இரண்டிற்கும்உள்ள தொலைவில்நடுவே அலையாடும்பாழ்மனத்தின் கூவல்கள்கேட்கும் நதி தீரங்கள்வழிந்தோடும்…
இணைய இதழ்
August 27, 2026
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
கிருஷ்ண பட்சம் இட்லியுடன் பாலைவிரும்பி உண்ணும்அப்பத்தா‘ஜெலுசில்லைத்’ தவிரவேறு மருந்து மாத்திரையைகடைசி காலம் வரைஉண்டதில்லை அப்பத்தா ஒரு‘டொரினோ’ பிரியைஅவள் தினந்தோறும்ஒரு கிங்…
இணைய இதழ் 126
August 27, 2026
ரேகா வசந்த் கவிதைகள்
மனம் அடர்பனி இரவில்இளவெயிலைகனவு காண்கிற மனதுசுட்டெரிக்கும் கோடையில்மழை வேண்டுமெனயாசிக்கிறது “இருப்பதில் திருப்தி கொள்” என்றுதனக்குத்தானேஅறிவுரை கூறிக்கொள்ளும் மனது அடுத்த நொடியே“அடுத்து…
இணைய இதழ் 126
August 27, 2026
கே.பி தோழர்! – ராம் சங்கர்
“ஹலோ… பஷீர் எங்க இருக்க?” “ரூம்லதான் இருக்கேன்…” “இன்னைக்கு சாயங்காலம் ஃப்ரீயா?” “ஆமா… எங்க வரணும்!” “கொஞ்சம் தூரமா போகணும்போல இருக்கு!” “எங்க போகணும்?” “அட்டப்பாடி சத்-தர்ஷன் போலாமா? திங்கள்கிழமை திரும்பி வந்துடலாம்!” “சரி…” பஷீரும் சம்யுக்தாவும் சென்னையிலேயே இருந்தாலும், சந்திப்பு எப்பையாவதுதான் நிகழும். அதுவும் சம்யுக்தா…
இணைய இதழ் 126
August 26, 2026
மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்
தூரம் பரந்த கூரைக்கடியில்நட்சத்திரங்கள் மின்னும்இருளில் இருந்துவிளக்கெரியும் அவள் வீட்டைபார்த்துக் கொண்டிருக்கிறேன் இதே வீட்டை இதே மாதிரிஒரு இரவில் பார்த்தபோதுஅவ்வீட்டில் என்…
இணைய இதழ் 126
August 26, 2026
செளமியா ஸ்ரீ கவிதைகள்
வார்த்தையைப் பிடித்துஉயிராடும் கவிதையைப் போலநானும் உயிராடுகிறேன்உனது நினைவுகளால் மறத்தல் நியதிதன்னையே மறந்துமாமருந்தானதுஅதுதான் காதலானது! * தனிமையின் கோல் எடுத்துஉலகத்தை வரையசுயம்…
இணைய இதழ் 126
August 26, 2026
ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0 – ர. முகமது இல்யாஸ் ; நூல் அறிமுகம்: பீட்டர் துரைராஜ்
நடிகர் விஜய், அரசியல்வாதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைநட்சத்திரங்கள் முதலமைச்சர்களாக அதிகாரத்திற்கு வந்துள்ளனர். விஜயும் முதலமைச்சர் ஆசையில் இருக்கிறார். கரூரில், கடந்த செப்டம்பரில் ஏழு குழந்தைகள் உட்பட 41 பேர், அவரைக் காண வந்த நெரிசலில் மரித்துப் போனார்கள். விஜயைச் சுற்றி எத்தகைய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் அரசியல் என்ன என்று இந்த நூலில் விவாதிக்கிறார் திரை ஆய்வாளரான ர. முகமது இல்யாஸ். விகடனில் பத்திரிகையாளராக இருந்த ர.முகமது இல்யாஸ் ஓர் ஆய்வு மாணவர். பெயரை மாற்றி கட்டுரை எழுத மறுத்து குரல் எழுப்பியவர். அவர் எழுதிய ‘ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0’ என்ற நூல் புத்தகக் கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. உடனே வாசித்தும் விட்டேன். சுவாரசியமாக உள்ளது. உணர்ச்சி கடந்து, அறிவுத்தளத்தில் விவாதிக்க வேண்டிய பல புள்ளிகளை இந்த நூல் காட்டுகிறது. மறைந்த ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ‘ பிம்பச்சிறை எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தில், இந்த நூலுக்கான பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்களோடு, தொடர்புள்ள பல சம்பவங்களுக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் இல்யாஸ். நமக்கு வரும் செய்திகளை ஒரு குடிமகனாக எப்படிப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளைத் தருகிறார். புகழ்பெற்ற ஒருவரின் நடவடிக்கைகளில் மறைபொருளாக இருக்கும் செய்திகளை நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். விஜய் நடித்த படங்கள், ரஜினி, அமிதாப், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஊடாக தன்னுடைய வாதங்களை நம் முன் வைக்கிறார். இந்த நூல் விஜயை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஊடகப் பிரதியாகவும் அணுகுகிறது. ‘எம்ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலம்’ என்பதை நினைவுபடுத்தும் இந்த நூல், விஜயிடமும் இத்தகைய கூறுகள் உள்ளன என்று சொல்லுகிறது. ‘விஜயிடம் எந்த விவகாரம் குறித்தும் தெளிவாக வெளிப்படாத நிலைப்பாடுகளின் வழியாக, தொண்டர்கள் அவர்மீதான கற்பனையைத் தங்கள் உணர்ச்சியின் வழியாக தாங்களே கட்டமைத்துக்கொள்கின்றனர்’, என்கிறார். ‘குடிமக்களின் இறையாண்மை மக்களின் கனவாகவே இருந்துவிட்ட நிலையில், மொழி, அடையாளம், அதிகாரம் முதலானவற்றின் ஊடாக தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதில் வெற்றிபெறுவதும் இயல்பானது’ என்று திரை ஆய்வாளர் மாதவ பிரசாத் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார். நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜயை, சென்னை வரவழைத்து 24 மணிநேரம் வருமானவரித்துறை விசாரணை நடத்தியபிறகு, அவர் வெளியிட்ட செல்ஃபி அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்ட படமாகும். எனவே விஜயைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஊழலை எதிர்ப்பதைத் தவிர அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒன்றில்லை என்பதை ரஜினியின் திரைப்படங்கள் முன்வைத்தன. வெகுமக்களிடம் ரஜினியின் இந்து தேசிய ஆதரவு செல்லுபடியாகவில்லை. திராவிட அரசியலை ‘அம்மா’ என்ற உருவகத்தால் நீர்த்துப்போகச் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் அவரைப்பற்றி வெகுமக்களிடம் உருவாகியுள்ள ‘அனுதாபமான’ பிம்பத்தை விமர்சனம் செய்யாமல் திமுக இருக்கிறது என்கிறார் இல்யாஸ். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி போன்றோர் பயணித்தவாறே விஜயின் பயணமும் உள்ளது என்கிறார் ஆசிரியர். விஜயின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ‘பாதுகாவலன், சகோதரன், தலைவன்’ முதலான பிம்பங்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. இந்திப்படங்களில் கோபக்கார இளைஞனாக ‘விஜய்’ என்ற பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்தப் பெயரையே, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குச் சூட்டியிருக்கக்கூடும். நடிகர் விஜயகாந்தின் படங்களில் அவரது தம்பியாக, சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். ஊடகங்கள் செய்தியைத் தருவதைத் தாண்டி, அவற்றை உருவாக்கவும் செய்கின்றன.டேனியல் டயான் சொல்லும் News Event என்பதை, கரூர் சம்பவங்களைக் கொண்டு விவரிக்கிறார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டுவதைக் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல் வெளியில் இருந்து விலக்கிக் கொண்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால் அவருடைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இல்யாஸ் விஜயை, அனுதாபத்தோடு பார்க்கிறார்.…
இணைய இதழ் 126
August 26, 2026
லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் – ஆர் பட்டாபிராமன்; நூலறிமுகம்: அக்களூர் இரவி
ஜெயபிரகாஷ் நாராயண் குறித்த முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் ஒன்றிரண்டுதான். இல்லை எனவும் கூறலாம். தமிழறிஞர், காந்தியவாதி தமிழருவி…
இணைய இதழ் 126
August 26, 2026
குறுங்கதை- இத்ரீஸ் யாக்கூப்
அவர் என் அப்பா அந்திக் குன்றாய் அவள் உடலிலும் உடையிலும் செம்மை அப்பியிருந்தது. இந்த வீட்டிற்கு மாறிய பின்னும் புதிதாக எதுவும் உண்டா…
குறுங்கதைகள்
August 26, 2026
குறுங்கதை – காந்தி முருகன்
நொறுங்குண்ட சதை அகலம் குறைவில் நீளமான கண்ணாடியது. இந்த உயர் ரகக் குடியிருப்பில் மிகச் சிறிய அறையில் கண்ணாடியும் ஒரு மேஜையும் மட்டுமே உள்ளன. மேஜையில் கூர்மையான ஒரு பொருள், முனை மட்டும் துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. கண்ணாடி முன் நிற்கிறாள் அர்ஷா, நிர்வாணமாக. சில நிமிடங்கள் அல்ல. சில மணி நேரங்கள். அவளது முகத்தில் சோர்வுக்கான தடயங்கள் இல்லை. தன் வெற்றுடலை வெறிச்சோடிப் பார்க்கிறாள். இந்த உடல் அருவருக்கத்தக்க ஒன்றாக இருப்பதாக உணர்கிறாள். நாற்பத்து ஐந்திலும் கட்டுக்கோப்பான உடலது. கூடுதலற்ற சதைகள் இல்லை. வயிறு தட்டையாகக் கொழுப்பின்றி உள்ளது. தோள் பட்டை கம்பீரமாக உள்ளது. தன்னை முழுவதுமாகப் பார்க்கிறாள், பல கோணங்களில். அவளுக்குச் சலிப்பு ஏற்படவே இல்லை. கண்களில் ஓரம் வழிந்த நீர்த்துளிகளைத் துடைத்திட முனையவில்லை. அவை சிறு கோடுகளாய் மார்பைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அழகான இந்த உடலை எதனோடு ஒப்பிட்டு வர்ணித்தாலும் அனைத்துக் காட்சிப் பிழைகளாகவே கடந்து விடுகின்றன. கூர்மையான அந்தப் பொருளைக் கையில் எடுக்கிறாள். இந்த உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் திருமணப் பந்தத்தில் இணைய வாய்ப்பில்லாமல் போகும் வேளையில் உடலுக்கான பந்தத்தை மட்டும் நிகழ்த்திக்கொள்ள உறவுகளின் பெயரில் உரிமைகள் நிகழ்கின்றன. சில உரிமைகள் தடுக்கப்பட முடிகின்றன. சில உரிமைகள் தவிர்த்தல் என்பதனை சாகடித்துவிடுகின்றன. உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து வளர்ந்துவிட்டன. எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்கிறபோது உடலுக்கான தேவையை மட்டும் எளிதில் பூர்த்தி செய்ய முடிவதில்லை, தனிமையில்.






