கவிதைகள்
-
Mar- 2021 -17 March
வருணன் கவிதைகள்
மழை ஓயாத இரவின் குரலென்றே உருக்கொள்கிறது தவளைகளின் கரகரப்பொலி தூவிய கங்குத் துண்டங்களென சிதறிக் கிடக்கின்ற நட்சத்திரங்களத்தனையையும் தன் பெருநாவின் ஒன்றை வழிப்பில் சுருட்டிச் செறித்திருக்கிறது கார் நா கரிய விண்ணுக்கும் மணத்துக் கொண்டிருக்கும் மண்ணுக்குமிடையே அந்தரத்தில் உருவாகிறதொரு ஒளிரும் கயிற்றுப்…
மேலும் வாசிக்க -
17 March
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
உன் மீதான காதலை துதிப்பாடல்களை இசைக்கின்றோம். 1. பிரகாசிக்கும் நிலவையும், மின்னுகின்ற நட்சத்திரத்தையும் காணும் போதெல்லாம் என் மெய்விதிர்த்து தன்னிலை மறந்து போகிறேன். மாருதமாய் என்னைத் தழுவிச் செல்கிறாய். ப்ரக்ஞையற்றிருக்கும் என்னை சுழன்றாடச் செய்கிறாய். இப்போது நான் முணுமுணுக்கின்ற பாடல் நிலவைப்…
மேலும் வாசிக்க -
17 March
கா.சிவா கவிதைகள்
கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு மையத்தில் மிளிர்கிறது கனிவின் பசும் நிறம் பக்கவாட்டினில் தெறிக்கிறது சினத்தின் செந்நிறம் ஊடாகக் கசிந்து நெளிகிறது காதலின் நீலவண்ணம் .. அவ்வப்போது உள்ளிருந்து ஒளிர்கின்றன… வெறுப்பு அன்பு கருணையின் வெவ்வேறு வண்ணங்கள் இவற்றினிடையே நிலைத்திருக்கிறது கருமைத் துயர்….…
மேலும் வாசிக்க -
17 March
தாட்சாயணி கவிதைகள்
கற்சிலை ஓராயிரம் நாட்கள் கடந்தன… இன்னும் அந்தக் கற்சிலை கல்லாகவே கிடக்கிறது ஓராயிரம் இலைகள் பழுத்து உதிர்ந்து அந்தக் கல்லைத் தழுவிச் சுரந்தன எந்த மாற்றமும் இல்லை ஓராயிரம் சொற்கள் அந்தக் கல்லுக்கு இரங்கற்பா எழுதின, எதுவும் நடக்கவில்லை ஓராயிரம், ஈராயிரம்……
மேலும் வாசிக்க -
17 March
தினகரன் கவிதைகள்
பேச்சுலர்ஸை ப்ளார் என்று அறையும் பெருநகரம் ஒரு வழியாக நேற்றே வீட்டை சுத்தம் செய்தாயிற்று இன்னும் ஊறவைத்த துணிகளை மட்டும் துவைத்தால் போதுமானது அன்பு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வருவதேற்கே இதோ 9.13 ஆகிவிட்டது நேரமிருந்தால் ஏதாவது படம் பார்க்கலாம் அல்லது காமெடி…
மேலும் வாசிக்க -
14 March
ப.காளிமுத்து கவிதைகள்
1. திருமண அழைப்பாக வெற்றிலை பாக்கு பூத்தட்டில் அமர்ந்திருக்கிறது வெற்றிலையின் சிவப்பை உடலில் பாய்ச்சிப் பின் காரத்தை மணிக்கட்டில் திலகமிடுகிறேன் காம்பைக் கிள்ளித் திண்ணும் அச்சிறுவனிடமிருந்து உன் நெற்றிவகிடைக் காத்திட வேண்டும் மொடாக்கிழவிக்கு நுனிகூட பார்வைக்கு கிட்டிடக்கூடாது வீட்டிலுள்ள எல்லா பாக்குகளுக்கும்…
மேலும் வாசிக்க -
14 March
கவிதை – கமலதேவி
என்ற ஒருவன் கூச்சம்…தயக்கம் திடுக்கிடல்… அவனை ஏற்பதில். இதுவரை பகிராத அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்… துயிலெழுந்து குஞ்சாமணி ஆட்டி ஓடிவரும் அதிகாலை அவன். அன்பின் அவசரத்தில் அவள் கண்ணாடியை சுழற்றி வீசி முகத்தில் அடிக்கும் மயூரன். புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்…
மேலும் வாசிக்க -
Feb- 2021 -9 February
நிழலி கவிதைகள்
குப்பைகளை சுமக்கிறேன் —————————————– புற்களை மேய்ந்து கொண்டிருந்த சிறுவன் தோற்பை நிரம்பிய திருப்தியில் பூங்காவை விட்டு வெளியேறிய போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை உறிஞ்சித் தூக்கி எறிகிறேன்… வேகமாக ஓடிவந்தவன் அதையெடுத்து நசுக்கப்பட்ட அடிபாகத்தில் ஆரஞ்சுச் சாற்றை ரசித்து உறிகிறான்…. அருவறுப்பாக …
மேலும் வாசிக்க -
9 February
ஜீவன் பென்னி கவிதைகள்
உலகத்தைக் கைவிடுதல் – 1 * தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது அதை நீ அணிந்து கொள்வதை விட அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது. * தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது அதை நீ எதிர்பார்த்திருப்பதை…
மேலும் வாசிக்க -
9 February
பிருந்தா இளங்கோவன் கவிதைகள்
சுவை நிறைந்த வீடு ———————————– யாருமறியாமல் நானும் நீயும் முத்தமிட்டுக் கொண்ட அந்தக் கிராமத்து வீட்டிற்கு நான் போக நேர்ந்தது மாடியறைக்கெதற்குப் போகிறாய் தூசும் தும்புமாய்க் கிடக்கிறது என்று அரற்றினாள் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு கிடந்த அங்கம்மாள் கிழவி முன்பு கோடைப்…
மேலும் வாசிக்க