கவிதைகள்
-
Jul- 2020 -17 July
கவிதைகள் – ப.மதியழகன்
சபிக்கப்பட்டவனின் இரவு கடிகாரத்தின் நொடி முட்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது சுவர்க்கோழிகள் சத்தம் கபாலத்தைப் பிளக்கிறது குளியலறை குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது உச்சந்தலையில் கடப்பாரையால் தாக்குவது போலிருந்தது இரவு சர்ப்பம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது நகரமே…
மேலும் வாசிக்க -
4 July
கவிதைகள் – அனாமிகா
துர்கனவின் பகுதியில் மிகுதிப்பட்டு வெளிநீள்கிற மூன்றுவிரல்களுள்ள ஒற்றைக்கையின் கோரசைவு பலகனவுக்குமுன் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து சாம்பல்நிற மூளையின் சீழ்பிசுபிசுப்புடன் வெளியேறுகின்றது ஒரு அரூபரூபம் அறையெங்கும் ரத்தவாடை உறங்கிக்கிடந்தவனின் ஆன்மாவரை நீட்சித்தது அதனினும் விகாரபாவம் ஒருகணம் சலனித்தடங்கியது இரண்டு நாவுள்ள அழுகிய அம்மிருகத்தின் முன்…
மேலும் வாசிக்க -
4 July
மொழிபெயர்ப்புக் கவிதை – கு.அ.தமிழ்மொழி
காணாமற்போன நாடு சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல் ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் : கு.அ. தமிழ்மொழி காணாமற்போனது புதிரான நாடு தெளிவற்ற கடவுச்சொல்லைவிட தேவதையைவிட இலகுவானது இறந்த பாசியின் நிறம் மூடுபனியின் வண்ணமது முடிவிலா நேரம்குறைந்த பேரின்பம்போல் மாதுளை…
மேலும் வாசிக்க -
4 July
கவிதைகள் – முரளிகண்ணன்
யவ்வனம் கருணையற்றது காலம். யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம் இப்போது வயோதிகத்தின் வனாந்திரத்தில் தனித்தலைகிறார்கள். ***** புலரும் காலை தரை துடைக்கும் சப்தத்தில் கண் விழிக்கிறார்கள் ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள் “எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்” என்றதோடு ஓய்ந்து போனான்…
மேலும் வாசிக்க -
3 July
கவிதைகள் – சோ.விஜயக்குமார்
கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மாடோ, ஆடோ, யாதாயினும் வெட்டும்போது அதன் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மதம் கொண்ட யானையோ, மதில் அமரும் பூனையோ எதுவாயினும் மின்னும் அவற்றின் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! நிலவோ,விளக்கோ ஒளிர்வதை அடர்ந்த இருளின்…
மேலும் வாசிக்க -
3 July
கவிதைகள் – சௌவி
அடையாளமற்ற நிழல் இன்று என் நிழலை நான் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன் நிழல் தலை வலிக்கிறதென்று சொன்னதால் இரண்டு பேருந்து நிலையங்களில் காத்திருந்து மூன்று பேருந்துகள் மாறிப் பயணித்து அலுவலகம் வந்தாயிற்று பயணிக்கையிலோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கையிலோ யாரும் என்னிடம்…
மேலும் வாசிக்க -
3 July
கவிதைகள் – ப்ரிம்யா
அவளும் அருவியும்! அவனுக்கு அந்த அருவியின் படம் மிகவும் பிடித்திருந்தது…. அவனுக்குப் பிடித்ததால் அவளுக்கும் பிடித்தது… அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் வாகான சுவற்றில் அருவியை வழிய விட்டார்கள்… இரண்டொரு நாளில் படுக்கையறைக்கு இடம் பெயர்ந்தது அருவி.. பின்னர் ஓர் நாள் பார்த்து…
மேலும் வாசிக்க -
3 July
கவிதைகள் – இரா.கவியரசு
யாரும் பார்க்காத சொல் அவிழ்த்தெறிய முடியாமல் சுற்றிச் சுழல்கிறது இரவாடை நீண்ட கொடியென பறக்கும் நெடுஞ்சாலைகள் தோள்களைப் புதைக்கின்றன உதறிவிட்டுப் பறக்க நினைக்கிறேன் முடிவற்ற பழைய ஒளியில் எனக்கானதை மிகப்புதிதாக வாங்க வேண்டும் எலும்புகளில் கனக்கும் மைல் கற்கள் புடைத்து உடையும்…
மேலும் வாசிக்க -
3 July
கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்
எனது கனவுகளுக்குள் வருவதற்கும் போவதற்குமாய் பாதைகள் இருக்கின்றன பேசிப்பழக விருப்பமானவர்கள் தங்கள் கவிதைகளின் சிறகுகளில் ஏறியமர்ந்து வாருங்கள் பேசலாம் பழகலாம் மிடறு மிடறாய் கவிதை அருந்தலாம் வாருங்கள் காற்றின் அசைவில் கனவின் கதவு திறந்து கிடக்கிறது காற்றின் கைகள் தாழ்ப்பாள் இடுவதற்கு…
மேலும் வாசிக்க -
3 July
கவிதைகள் – ப.மதியழகன்
காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…
மேலும் வாசிக்க