கவிதைகள்

  • Jul- 2020 -
    17 July
    anandhi

    கவிதைகள் – ஆனந்தி ராமகிருஷ்ணன்

    இப்பொழுதுகள்! இயற்கை பேருருக் கொண்டு வஞ்சித்த இப்பொழுதுகளில் உடல் முழுவதும் தீண்டும் பசியால் வெளிக்காட்டாத ஊற்றுக்கண்களாய் துயருரும் ஓடையில் மிதக்கின்றன விழிகள் நிதம் காற்றைத் தின்று, பசியாற மனதிற்குள் நடக்கும் யுத்தத்தை மதகடைத்தப்பின் வீசும் வாளாய் உயிர் ஆவியைக் கொண்டு நுகர்ந்திருக்கிறோம்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    sami krish

    கவிதைகள் – சாமி கிரிஷ்

    காரம் தூக்கலான நாட்குறிப்பு மிளகாய் நெடி பறக்கும் அந்தச் சந்தினை தும்மல் இல்லாமல் கடப்பதென்பது ஆபூர்வம். மிளகாய் அரைக்க வருபவர்கள் நாசி துளைக்கும் கலப்படமற்ற காரத்தை சமைக்கும் குழம்பின் சுவையெண்ணி ஊறும் நாவெச்சிலால் தணித்துக்கொள்கிறார்கள் ‘காரமே கண் கண்ட தெய்வமென்கிறார்’ கல்லாப்பெட்டியில் கம்பீரமாய்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Mithra Alaguvel

    கவிதைகள் – மித்ரா அழகுவேல்

    பாஸ்வேர்ட் திடீரென அனைத்துக் கடவுச்சொற்களையும் மறந்து போகிறான் துர்பாக்கியவாதி ஒருவன் முகநூல் இன்ஸ்டாக்ராம் ட்விட்டர் டின்டர் ஓலா ஊபர் ஸ்விகி ஜொமேட்டோ ஃபோன்பே ஜிபே அனைத்தும் ஒற்றைக் கடவுச் சொல்லுக்காக இறைஞ்சுகின்றன அலுவலக மடிகணினியும் சொந்த மடிகணினியும் ஆளுக்கொரு புறம் திருப்பிக்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    jeevan benny

    கவிதைகள் – ஜீவன் பென்னி

    தேவகுமாரனுக்குள்ளிறங்கிக் கொண்டிருக்கும் ஆணிகள் பரிசுத்தமான ஆன்மா தன் அப்பத்தைப் பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு ஜெபிக்கிறது. காட்டிக்கொடுக்கும் மனது அந்த இடைவெளியில் தான் வளர்ந்து நிற்கிறது. ***** தேவகுமாரன் தனக்குள்ளிறங்கிக் கொண்டிருந்த ஆணிகளை ஒரு முறை நன்றாகப் பார்த்து சிரித்துக் கொண்டார், அவை ஏற்படுத்தப்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    varavara_rao

    வரவர ராவ் கவிதைகள் : தமிழில் – சௌம்யா ராமன்

    தெலுங்கு : வரவர ராவ்  தமிழில் : சௌம்யா ராமன் பிரதிபலிப்பு நான் வெடிமருந்து வாங்கிக் கொடுக்கவில்லை வாங்கிக் கொடுக்கும் யோசனையும் எனக்கில்லை எறும்ப்புற்றை உதைத்தழித்தது உங்கள் வலுத்த கால்கள்தான் மிதித்த புற்றினில் விதைக்கப்பட்ட வேட்கைக்கும் நீங்களே காரணம் உங்கள் தடித்த…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Kamaladevi

    கவிதைகள் – கமலதேவி

    அகம் சாரல் தூரல் பெருமழை அடைமழை.. மேகங்களை முப்பொழுதும் சூடி நிற்கின்றன சிகரங்கள்… எழும் இடியோசைகள் எதிரொலித்து முடிகின்றன. மின்னல் ஔியில் மழைநில்லா குறுஞ்சியின் பேரழகைக் கண்டு நிற்கிறது வெளி. ***** ஏழு கடல்களுக்கு அப்பால் காணக்கிடைக்காவிட்டால் என்னசெய்வது தேடிக் கண்டடையும்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    chandhira Thangaraj

    கவிதைகள் – சந்திரா தங்கராஜ்

    மரையா! பவளமல்லி கமழும் யாமத்தில் ஒவ்வொரு கூடலின் பின்னும் சிறுகச்சிறுக உதடுகளில் நீயிட்ட பனிநீர் முத்தங்களை ஏந்தினேன். அவ்வமைதியில் மனம் நிறைந்து சுந்தர ஒளி மேகத்தைத் தழுவி வெண்ணிலவை மறைக்கும் போது, எங்கிருந்தோ பனிக்கத்தியொன்று பாய்ந்துவந்து என் நெஞ்சினில் இறங்குகிறது. தலை…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Na.Periyasami

    கவிதைகள் – ந.பெரியசாமி

    இருளடைந்த வெளி உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு. சீக்குண்ட கோழியாக சுருண்டு கிடக்காதேயென சுற்றித் திரிபவர் வீடே உலகமென முடங்கிப்போனார். வலப்பக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல் இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு மேல்பக்கக் கலவையின் கணம் ஒரு டன் இருக்கக் கூடுமென…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Mounan Yathrika

    கவிதைகள் – மௌனன் யாத்ரிகா

    முதலைகளின் கொடூரப் பாடல்கள்   குருவிகள் ஏமாற்றப்படும் நிலத்தில் இந்தப் பருவத்தின் மகசூல் பரவாயில்லை ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் அறுவடை முடிந்து தோகைகள் காற்றில் அலைகின்றன தட்டைகளைக் கொளுத்திவிட வேண்டும் நுண் பூச்சிகளின் சத்தம் வணிகத்துக்கு தூர்க்குறியாக இருக்கிறது. ***** பனி பெய்து…

    மேலும் வாசிக்க
  • 17 July
    devaseema

    கவிதைகள் – தேவசீமா

    அனாமதேய சூட்டப்பட்ட ஒருவனின் செயல்களுக்காக நித்தமும் வதைபடும் பெயர் ஒன்றுண்டு ஒரே அலைபேசியில் பல காலங்களில் ‘அன்பன்’ ‘அழகன்’ ‘புற அழகன்’ ‘புறணி பேசுபவன்’ ‘பித்தன்’ ‘சனியன்’ இவ்விநாடியில் ‘அந்நியன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அவன் சிக்கினால் வகையாக வெளுத்தெடுப்பது எவ்விதம் எனச்…

    மேலும் வாசிக்க
Back to top button