இணைய இதழ்

  • Oct- 2024 -
    5 October

    விக்ரமாதித்தனும் வேதாளமும் – கமலதேவி

    கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன். அதன் கீழே பெரிய வலை. அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப் பிடிக்கிறேன். அந்தரத்திலிருந்து ஒரு முகம் என்னைக்  குனிந்து பார்க்கிறது. அதன் கண்களில் எத்தனை குளுமை. ‘கமலா..’ என்று அழைக்க நினைக்கிறேன். குரல்…

    மேலும் வாசிக்க
  • 5 October

    வளர்பிறை – அகிப்ரியா

    இன்று வானிலை மிகவும் இரசிக்கும்படி இருந்தது. வட்ட நிலா மேகத்துக்குள் ஒளித்து கண்ணாபூச்சி விளையாடியது. நெல்மணிகளை யாரோ கைதவறி வானத்தில் விட்டெறிந்து விட்டனர் போலும். நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. தோட்டத்துத் தென்னை மரங்கள் உறங்காமல் காற்றோடு உரசி காதல் சில்மிஷம் புரிந்தன.…

    மேலும் வாசிக்க
  • 5 October

    முன்பனியும் பின் மறையும் – இத்ரீஸ் யாக்கூப்

    பட்டுக்கோட்டை பாப்புலர் ஆப்டிக்கல்ஸ்லிருந்து சிராஜ் வெளியேறியபோது மணி நண்பகல் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இனி மணிக்கூண்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சற்றும் அலுத்துக் கொள்ளவில்லை; ஏனென்றால் பழகிய உலகை புதிய கண்ணாடியின் வழியாக ரசித்தபடி நடப்பது அவனுக்கும் பிடித்திருந்தது. எதிர்பட்டவை யாவும்…

    மேலும் வாசிக்க
  • 5 October

    மொசல் – சரவணன் சந்திரன்

    குருமலையில் ஒன்றரையாள் உயரத்தில் நின்ற பனையடியான் சிலையை உற்றுப் பார்த்தான் கெஜி. சிலையின் தலைக்குப் பின்னே சூடு தணிந்த சூரியன், பிசிரில்லாமல் முழுமைகூடி வட்டமாகத் திரண்ட மஞ்சள் பூசணியைப் போல இறங்கி நின்றது. கண்களை அகல விரித்து, புருவங்களிரண்டும் படகின் வடிவினைப்…

    மேலும் வாசிக்க
  • 5 October

    மெலியார் – சௌம்யா

    “இன்னும் இந்த ரன்ஷீட்டை நீ முடிக்கலயா? என்னதான் பண்ணுவியோ மசமசன்னு…” நிரஞ்சனா விழித்தாள். இன்னும் முடிக்கவில்லையா என்று கேட்ட ரன்ஷீட்டுகள் வந்து இன்னும் கால் மணி நேரம் கூட ஆகவில்லை. கேட்ட புனிதா மேமுக்கும் அது தெரியும். டெலிவரி ஸ்டாஃப் ஆறுச்சாமி…

    மேலும் வாசிக்க
  • 5 October

    மணற்குன்று பெண் – வளன்

    பாஸ்டனில் இருக்கும் நார்த் எண்ட் எனக்கு விருப்பமான இடம். அதிலும் ஹேனோவர் வீதியில் இருக்கும் காஃபே விக்தோரியா என் வாழ்வின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். அங்கு பணி புரியும் அத்தனை அழகிகளுக்கும் என்னைத் தெரியும். எனக்கென்று ஓர் இடம் அந்தக்…

    மேலும் வாசிக்க
  • 5 October

    நூரே சஷ்மி – ஆர்னிகா நாசர்

    ரஷீத் அகமது கால் செருப்புகளை வெளிவாசலில் உதறிவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். அவரது வலது கையில் ஒரு பழுப்பு நிற பொதி இருந்தது. வரவேற்பறை மேஜையில் பொதியை வைத்து எதிரில் அமர்ந்தார். சமையலறையிலிருந்து ரஷீத் அகமதின் மனைவி காமிலா வெளிப்பட்டாள். “வாங்க ரியாஸத்தா……

    மேலும் வாசிக்க
  • 5 October

    க.மோகனரங்கன் கவிதைகள்

    மாய மலர் எனக்குஎனக்கு என்றுஎல்லோரும்ஓடியோடிசெடி கொடிகளில்பூத்திருந்தையெல்லாம்பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்தமலர்வனத்தின் நடுவேஒருத்தி மாத்திரம்ஒன்றும் நடவாதது போலதன் வசமிருந்தஒற்றையொரு மலரையும்ஒவ்வொருவருக்கும்ஒரோர் இதழெனபேதமேதுமின்றிபிய்த்து தந்துகொண்டிருந்தாள்.வரிசையில் நின்றுவாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்கலைபவர்களை,சிரித்துப் பழகியிராதகடுத்த முகத்தினன் ஒருவன்காட்சிக்கு வெளியேயிருந்துகவனித்துகொண்டிருந்தான்.கடைசியில் அவளதுகையில் எஞ்சப்போவது என்னவோவெறும் காம்பு மாத்திரமேஎன்றவன் எண்ணுகையில்,கவலைப்படாதே என்பதுபோலகரிசனத்தோடு அவனிருக்கும்திசைநோக்கி ஏறிட்டு…

    மேலும் வாசிக்க
  • 5 October

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    பொன்னந்திப் பூ தாமரை இலைமேல் உருண்டோடும் மனம்இலட்சியங்கள் மொட்டும் மலருமாய்த் தலையாட்டதடாகத்தில் விரியும் உணர்வலைகள்சகதிக்கும்..நீருக்கும்..தவளைக்கும்.. அஞ்சியஞ்சிஆடை நனையாதபடிகரையிலேயே தயங்கித் தயங்கி நின்றுலட்சியத் தண்டைத் தீண்டும் பேராவலோடுமலரின் மகரந்தத்தைவிரலில் பூசிக்கொள்ளும் நாள்எப்போதுதான் புலருமோ? • என்னோடிருத்தல் ஒரு செடியானதுஇன்னும் படரவில்லையென்பதைநினைவூட்டத் தங்கியிருக்கும்சிறு பச்சையமாய்;…

    மேலும் வாசிக்க
  • 5 October

    உமா ஷக்தி கவிதைகள்

    சிந்திய தேநீர்த்துளி ஒரு கோப்பைத் தேநீரும்மிகச் சில நண்பர்களும்இதமான காலையின்இனிமைகூட்ட முடியும்சிந்தப்படும் தேநீர்த்துளிகளில்சொல்லப்படாத கதைகளின்மிச்சத்தை ஈக்கள்மொய்த்துக் கொண்டிருக்கிறதுசுடச்சுட ஒரு சாக்லெட்டொனெட் வாங்கி இரண்டாக வெட்டிசுவையில் திளைக்கிறேன்ருசியில் பாதியேது?மலையேறும் நதிகள் குறித்துவியந்தோகி அவன் பேசியபோதுமூன்றாம் தேநீரை பருகிமுடித்திருந்தேன்எதிர் முகம் பார்க்காமல்மனதுக்குள் அதிரவைக்கும்பாலுவின் புன்னகையால்தான்முன்…

    மேலும் வாசிக்க
Back to top button