கவிதைகள்
கவிதை -தமிழ்மணி
மீட்பர்
தேங்கியிருக்கும் குட்டையில்
துடித்துக் கொண்டிருக்கின்றன
நீந்தத் தெரியாத
தூறல்கள்
காக்கையின் அலகும்
தெருநாயின் நாவும்
அதன் மீட்பர்
இச்சையின் கூட்டில்
விறைத்து தனித்திருக்கும்
சிசினத்தின்
நரம்பு சொல்கிறது
“உனக்கான மீட்பர்
இன்னும் வரவில்லை”
பிரம்மச்சாரியத்தின்
குட்டை பல்கி
குளமாகி நதியாகி
சமுத்திரமானது
அலைகளின் ஆர்ப்பரிப்பில்
கணுக்கால்களை கூட
நனைக்க முடியாதபடி
ஆட்டுக்குட்டியோடு
கரையில் அமர்ந்திருந்தார்
ஒரு “மீட்பர்”