சிறுகதை

  • இணைய இதழ்

    நெஞ்சுக்கு நீதி – உஷாதீபன்

    ஞானசேகரன், எல்லாவற்றையும் என்னிடம் அன்று கொட்டிவிட வேண்டும் என்றுதான்  வந்திருக்கிறாரோ என்று தோன்றியது. அவர் மூஞ்சியே சரியில்லை. பயங்கரக் குழப்பத்தில், தாங்க முடியாத எரிச்சலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். படபடப்பாய் இருந்தார். பின் கழுத்து, முன் கழுத்து என்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வெளியேற்றம் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    காலையிலேயே வெயில் சூடாக இருந்தது. வெயில் கூச்சத்துக்கு கண்களுக்கு மறைப்பாக கையை கண் முன்னாடி வைத்து மறைத்துக்கொண்டு சிலர் கிழக்குப் பக்கம் பார்த்தார்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பேருந்து தென்படவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? பேருந்து இன்னும் வந்தபாடில்லை! தினமும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சினிங் சினிங் ஆசை – மீ.மணிகண்டன்

    நேற்று திருவிழாக்கடைவீதி சென்று வீடு திரும்பியபோது அம்மாவின் மீது ஏற்பட்ட கோபம் இன்னும் சிட்டுவை ஆட்கொண்டிருந்தது. ஆசை நிறைவேறாமல் உறங்கச்சென்றவளின் ஏக்கம் காலைச்சூரியன் கண் விழித்தும், காக்கைக்கூட்டம் கூடுதாண்டிப் பறந்தும் இன்னும் தீரவில்லை. அம்மாவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, கண்விழித்து எழுந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ததாஸ்து – அசோக் குமார்

    ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கண்ணீர்  அஞ்சலி  –  சாமி கிரிஷ்

    துக்க  வீட்டில்  இருந்த  எல்லோரும்  பலவற்றைப்  பார்த்தபடியும்  யோசித்தபடியுமிருக்க  மீனாட்சி  மட்டும்  எதிரே  வைக்கப்பட்டிருந்த  கண்ணீர்  அஞ்சலி  பதாகையினையே  வெறித்தபடி  பார்த்திருந்தாள்.  இறந்து  கிடப்பவர்  பதாகையில்  சிரித்தபடியிருந்தது  மீனாட்சிக்கு  ஆச்சரியமாக  தெரிந்தது.  பக்கத்து  வீட்டுக்காரியான  அவள்,  அவர்  அப்படி  சிரித்துப்  பார்த்ததேயில்லை. …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நித்தியக்காதலி – விஜயகுமார் சம்மங்கரை

    “டேய் மச்சீ.. அவ உன்ன பாக்குறாடா..” என்று சொல்லித்தான் ஆரம்பித்து வைத்தான் கோபி. இன்னும் நின்றபாடில்லை. எட்டு ஆண்டுகள் கழித்து அவளை மீண்டும் இந்த உணவகத்தில் வைத்துப் பார்க்கிறேன். அவள்தானா? அவளேதான். உயர்தர அழகிகளுக்கு இருக்கும் சிறிய கோணல் அவளுக்கு இருந்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மாப்ள சம்முவன்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    மத்தியானம் மாப்ள சம்முவன் போன்ல கூப்புட்டுப் பேசுனப்பத்தான் நாவகம் வந்துச்சு ஊருக்குப் போயி மூனு மாசம் ஆச்சுன்னு. ஊருக்கு போறதப்பத்தி நெனச்ச ஒடனே எனக்கு மனசு குதியாட்டம் போட தொடங்கிருச்சு. பெருநகர வாழ்க்கையில கை நெறையக் காசு, வேற பல வசதிகளும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நம்மாட்டி – சிவசங்கர்.எஸ்.ஜே

    பப்பாவுக்கும் அம்மைக்கும் நானும் அண்ணனும் ஆக ரெண்டே பிள்ளைகள். அறுபதுகளில் ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் என்பது அபூர்வம். ஆனால், அம்மைக்கு ஒரு பிடிவாதம். பக்கத்து கண்டத்தை வாங்கி அதில் தென்னையும் வாழையும் வைக்க வேண்டும். இப்போதிருக்கும் ஓலை வீட்டை இடித்துவிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்
    M.K.Mani

    மாசற்ற சோதி! – மணி எம் கே மணி

    சிவதாசன் ஒரு சிறுகதை எழுத விரும்பினான். ஆனால், அவன் எண்ணத்துள் அது படிந்து அமரவில்லை. வந்தால் வருவேன், வாராமலும் போவேன் என்கிற நழுவலில், பல முறையும் திரண்டது போலவே சரிந்தது. முற்றிலும் அது வேண்டாம் என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டால்தான் என்ன?…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நன்னயம் செய்துவிடல் – இத்ரீஸ் யாக்கூப்

    “கணேஷ் பாய், ஸ்ட்ராபெர்ரி பிளாண்ட்ஸ் வந்துட்டுண்டு, இன்னும் ஒரு மணிக்கூரினுள்ளில் அவ்விட எத்தும் கேட்டோ! ஞான் விளிச்சப்போல் புள்ளி கோல் அட்டெண்ட் செய்தில்லா! நிங்களு அயாளோடு அறியுக்குக்கா ப்ளீஸ்!” லாஜிஸ்டிக்ஸ் கோஆர்டினேட்டர் சஜித் அப்படிச் சொன்னதும் இன்றும் லேட்டுதானா என்பதுபோல் ‘ஹ்ம்’…

    மேலும் வாசிக்க
Back to top button