சுப்புராஜ்
-
கணக்கும் பிணக்கும் – சுப்புராஜ்
“நீங்க தேர்தலுக்கெல்லாம் ஊருக்கு வரவேண்டாம். பேரு தெரியாத கட்சிக்கு இல்லைன்னா வேட்பாளருக்குத் தான் ஓட்டுப் போடப் போறீங்க. அந்த ஓட்டுக்கு ஒரு பிரயோசனமும் இருக்கப் போறதில்ல. அதனால நீங்க உங்க சைட்டையே கட்டிக்கிட்டு அழுங்க…..” என்றாள் சரோஜினி. “அதெல்லாம் என்னோட ஜனநாயகக் கடமையிலருந்து ஒருநாளும் தவற மாட்டேன். ஊருக்கு வந்து என்னோட ஓட்டப்போட்டே தீருவேன்….” என்று சிரித்தான் கன்னியப்பன். “உங்கள பாப்புக்குட்டியப் பார்த்துக்கிடச் சொன்னா அவளுக்கு ஓவரா செல்லங்குடுத்து அவள் கைநீட்டுறதை எல்லாம் வாங்கிக் குடுத்து அடுத்த நாள் அவளுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடும்….”…
மேலும் வாசிக்க