இணைய இதழ் 121கவிதைகள்

பத்மகுமாரி கவிதைகள்

ன்றும் அவசரமில்லை

பத்திரப்படுத்தியிருக்கிறேன்

யாருக்கும்

கையளிக்க விரும்பாத ஒரு சொல்லை

தொலைக்கவும் மனமில்லை

அத்தனை சுலபமில்லை

அறிந்தே தொலைதல்

சத்தமில்லாமல் வெளியேறிட

அவசியமாக இருக்கிறது

நான் மட்டுமே அறிந்து வைத்திருக்கும்

பெருமழையின் வருகை

காத்திருக்கிறேன்

சொல்லப்படாத அவகாசத்தை நம்பி

○○○

பொய்த்துப்போன விரல் நுனிகள்

சுற்றிலும் சிதறியிருந்த

வாக்குறுதிகளின்

அழுகிய வாசனையிலிருந்து

கடைந்தெடுத்த திரவியத்தை

புட்டியிலடைத்து சுமந்தலைகிறேன்

அன்பின் மடியில்

தலைசாய்க்க எத்தனிக்கும்

முந்தைய நொடியில்

சப்தமின்றி

திறந்துக் கொள்ளும் புட்டி

ரகசியமாய் எச்சரிக்கிறது

டேக் டைவர்ஷன்

-npadmakumari1993@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button