இணைய இதழ் 121கவிதைகள்

செளமியா ஸ்ரீ கவிதைகள்

பறத்தல் எனது சுதந்திரம் எனில்

முடக்கும் சுதந்திரத்தை

யார் கொடுத்தார்?

*

கடக்க முடியாத பாலத்தின் மேல்

முளைத்த புற்கள் ஆடின

நடனம்

இது வாழ்தலின் விளிம்பு நிலையல்ல

தொடர்நிலை.

*

எழுதுகிறேன் யுகத்தின் சோகப் பாடல்

அதில் சோகமே இல்லை

என்னே அவலம்!

*

படர்ந்து வளர்ந்திருக்கும் 

தாழம் பூவில்

மணப்பது வாசமல்ல விஷம்

தேனீ வந்தது!

செத்தது!

*

பேசப்படாமல் கொல்லப்பட்ட

உணர்வுகளின் கல்லறை மேல்

பூக்கள் முளைக்காமல் சாகின்றன

வாசம் உண்மை சொல்லிவிட்டால்!

*

தேடித் தேடி சொற்கள் கோர்த்து

மாலை ஒன்று செய்திட்டேன்

அது மயானம் நோக்கிப் பயணிக்கையில்

எல்லா நூலையும் அறுத்திட்டேன்

சொற்கள் இருக்கின்றன

கோர்க்கத் தெரிகின்றது

மயானத்திலிருந்து விடைபெறுகிறேன்.

*

முரண்களின் நடுவே முடிச்சிடப்பட்டு

முடியாமல் நகரும் நாட்கள் தோறும்

மறக்காமல் எழுதிவிடுகிறேன்

வாழ்க்கையை.

*

E Mail : sowmiyashree00@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button