இணைய இதழ் 123கவிதைகள்

ஒளியன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

விடியலுக்கு
மிக அருகில்தான்
ஓர் இரவும் இருந்தது.

*

வெறுமையைத் துழாவித் துழாவி
ஓர் உருவம் சமைத்தேன்
அது அருவமாய் உருவாகி
வெறுமையினும் வெறுமையாய்
என்னை வாட்டுகிறது.

*

நீரைத்
தேக்கித் தேக்கி
சிறு பள்ளம்
குளமாக முயற்சிக்கிறது
குளமோ
பள்ளங்களில் தேங்கி
பந்தாடும் மைதானமாகிறது.

*

பிய்ந்து போன செருப்புகளைத்
தூக்கி எறியாதிரு
தைத்து தைத்தாவது
வாழட்டும்
செருப்பும்
செருப்பு தைப்பவரும்.

*

சரசரவெனப் புரள்கின்றன
சருகுகள்
மலமலவென
வளர்ந்ததைப் போலவே!

*

kadaivazhi612005@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button