இணைய இதழ்
-
Apr- 2026 -13 April
குறுங்கதை – காந்தி முருகன்
சுவருக்கப்பால் நான் இங்கமர்ந்து சில மணி நேரங்கள் ஆகின்றன. என் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. என் சிந்தனைகள் எங்குதான் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த நான்கு சுவர்களையே சுற்றிமுற்றிப் பார்க்கிறேன். அவை வெறுமையான சுவர்கள் அல்ல; நகரக் கூடியவை. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவை இருக்கும் இடத்தை விட்டு ஓரடி நகரும். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாப் பக்கச் சுவர்களும் ஒரே நேரத்தில்தான் நகரும். என் பின் பக்கச் சுவர் சிக்கல்களால் ஆனவை. என்னைப் பின்னிருந்து அதிவேகமாகத் தள்ளிவிடும் ஆற்றல்மிக்கது. என் முதுகைக் கொண்டு நகரவிடாமல் ஓரளவுதான் முயல முடிகிறது. முன் பக்கச் சுவர் “அருகில் வா” என்று அழைத்துக்கொண்டே மெதுவாகத்தான் நகர்கிறது. நான்தான் செல்ல மறுப்பு தெரிவிக்கிறேன். வலது இடது பக்கச் சுவர்கள் என்னை நசுக்கிவிடவே துடிக்கின்றன. சுவர்கள் நகர நகர இருள் சூழ ஆரம்பிக்கின்றன. நீண்டிருந்த என் கால்களின் பாதங்களைச் சுவர்கள் நகர்த்திக் கொண்டு வருகின்றன. யார்தான் இந்தச் சுவர்களை இயக்குகின்றனரோ. சங்கிலிகளின் பூட்டை இவ்வளவு நேரம் நான் தேடவே இல்லை. நசுங்கிவிடுவேன் என்கிற பயவுணர்வில் தேடுகிறேன். கையில் சிக்கவில்லை. கால்களை மடக்கி அமர வேண்டிய நிலை உருவாகிவிட்டது. உடல் இறுகத் தொடங்குகின்றது. விரிந்திருந்த தேகம் வளையத் தொடங்குகிறது. என் தோள் பட்டைகள் கன்னங்களை உரச ஆரம்பித்துள்ளன. சதைகள் பிதுங்கி கண்கள் மயங்குகின்றன. இப்போதுதான் உணர்கிறேன், என் கைகள் எந்த இரும்புகளாலும் கட்டப்படவேயில்லை.
மேலும் வாசிக்க -
13 April
வெளிச்சம் – நிர்மல்
சாயங்காலம், இருளில் மூழ்கிக்கொண்டிருந்தது. டார்கெட் ஸ்டோரின் வண்டி நிறுத்துமிடத்தில் நான் இருந்தேன். ஹென்னா, அடுத்த வாரம் எந்தக் கடையில் நண்பர்களுடன் சாப்பிட வேண்டும், ஏன் அங்கே சாப்பிட வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளது இனிய உதடுகள் அசைகின்றன. ஆனால், எனக்குக் கேட்கவில்லை. என் மனமும்…
மேலும் வாசிக்க -
13 April
வின்கா ரோசியா – சேவியர் ராஜதுரை
வின்கா ரோசியாவிடம் பேசி குறைந்தது பத்து வருடங்களிருக்கும். இதுநாள் வரையில் அவள் எப்படியிருக்கிறாள் – என்ன செய்கிறாள் என எதற்காகவும் பேசாமல் தற்போது பணத்தேவைக்காக அழைப்பது சரவணனுக்கே அசிங்கமாகவிருந்தது. அவளிடம் கேட்டுப்பார்க்கச் சொல்லி அவனது நண்பன் மனோகர் அவளது எண்ணைக் கொடுத்தான். அவளுக்கு போன் செய்து…
மேலும் வாசிக்க -
13 April
யுவான் சுவாங்கின் மீசை – தருணாதித்தன்
குமார் இரண்டு வரிகள்தான் எழுதி இருந்தான். “அப்பா உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.” குமார் என்னுடைய மாமா சுப்பிரமணியின் மகன். அவன் இப்போதெல்லாம் பேசுவது எழுதுவது எல்லாமே சுருக்கமாகத்தான். இளம் வயதில் அப்படி இல்லை, எங்களுடன் நன்றாகத்தான் பழகுவான்; நிறையப் பேசுவான். இரவு பதினொன்றுக்குக் குடும்ப வாட்சப் குழுமத்தில் போட்டிருந்தான். நான் வழக்கம்போல ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமலேயே எழுந்து, பச்சைத்…
மேலும் வாசிக்க -
13 April
மவுஸ் – கே.எஸ்.சுதாகர்
காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை…
மேலும் வாசிக்க -
13 April
நீராட்டம் – கெளதம் நாராயணன்
பேராத்துச் செல்வியம்மன் கோவில் அருகே சுழித்தோடும் நதியை வெறித்தாற்போல் அமர்ந்திருந்த அந்தக் கல் மண்டபத்திற்கு சுப்பையாவின் வாழ்வில் பெரிய பங்கேதும் இருந்திருக்கவில்லை. ஓட்டிவரும் ஹெர்குலஸ் சைக்கிளைச் சரித்து வைக்கவும், குளியல் முடித்து உடைமாற்றி, உள்ளாடை உலர்த்தவும், பள்ளம் விழுந்திருந்த அதன் விளிம்புகளில் கட்டைவிரல் பதித்து ஊன்றி ஏறி, அதன் உச்சியில் புத்தனைப்போல் அமர்ந்துகொண்டு, நீந்தி விளையாடும்…
மேலும் வாசிக்க -
13 April
நிழல் சுமக்கும் நதி – சாந்தி மாரியப்பன்
கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும் தூசியும் வாகனப் புகையும் ஓர் ஒவ்வாமையைத் தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான்,; குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான்.…
மேலும் வாசிக்க -
13 April
உணவுப் பொதி சுமக்கும் கடவுளின் தூதுவர்கள் – இலட்சுமணப் பிரகாசம்
வீட்டுப் படிப்பறையில் அலுவலக அதிகாரி நடத்திக்கொண்டிருந்த கூகுள் மீட்டிங்கில் இருந்த வேளையில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள், “உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?“ என்றாள். கூகுள் மீட்டிங் போய்க்கொண்டு இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடியும் தறுவாயில் இருப்பதையும் சைகையால் காட்டி மீண்டும் கவனத்தை அலுவலக அதிகாரியின் கட்டளையைச் செவிமடுக்கத் தொடங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் இணைய வழியிலான கூகுள் மீட்டிங் முடிந்தது. அதுவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காதுகளில் மாட்டியிருந்த கருவிகள் காதை சூடாக்கி இருந்தன. அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்த வேளையில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதற்கும் தோன்றாது. இப்போதோ தொண்டை வறண்டிருந்தது. காதுகளில் பரவியிருந்த சூடு உடல் முழுவதும் பரவி கொதிநிலைக்குச் செல்வது போலிருந்தது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தங்களுடைய ஊழியர்கள் மீது கருணையே வராது. கார்ப்பரேட் கம்பெனியில் பணிக்குச் சேர்கிற நாள்முதல் அவர்களுடைய விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் ஊழியர்கள் நவீன யுகத்தில் எளிதில் கிடைக்கிற அடிமைகள், சாசுவதமான சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பலியாடுகள் என்ற எண்ணம் ஐ.டி ஊழியர்களுக்குக் கல்வெட்டு போலப் பதிந்தாலும் நாளுக்கு நாள் அன்றாடப் பொருட்களின் விலைவாசி ஏறுகின்றன. மாதாமாதம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்துக்கொள்கிற வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த…
மேலும் வாசிக்க -
13 April
இடைப்பட்ட வாழ்க்கை – பாலமுருகன். லோ
“சார், உங்க கருத்தைச் சொல்ல முடியுமா?” “ஏம்ப்பா… கேள்வி கேக்குறீங்க? எதைப் பத்தி, இல்ல, யாரைப் பத்தின்னு தெரிஞ்சாதானே பதில் சொல்லச் சௌகரியமா இருக்கும்.” “அதான், தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டதே! உங்களைப் போல அவரும் ஒரு நடிகர்தானே.” இந்தக் கேள்வியைக் கேட்டவுடன், முகம் முழுக்கக் கோபம் பொங்க, ஏதோ ஒரு நாகம் அவரைத் தீண்டியதுபோல ஒரு படபடப்பு…
மேலும் வாசிக்க -
13 April
பெரியது – மழைக்குருவி
மாலை நான்கு மணிக்கு வர வேண்டிய பேருந்து இன்னமும் வரவில்லை. தட்டாம்பட்டியில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு கிளம்பி அரசமரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாயிற்று. முருகராசு, தன் சட்டைப்பையிலிருந்து நைந்து போன நெகிழியில் வதங்கிப் போயிருந்த வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார். பேச்சி…
மேலும் வாசிக்க