கவிதைகள்
-
Apr- 2023 -2 April
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் அளவுகள் கேட்கிறாய் காரணங்கள் கேட்கிறாய் சில சமயங்களில் திடீரென்று வெறுக்கும் அளவிற்கு கோபம் உண்டாக்கி இருக்கிறேனா என்றும் கேட்டுக்கொள்கிறாய் கேள் கண்ணே! அடித்துப் பெய்தாலும் ஆசையாய்த் தூறினாலும் மழை ஏற்காத கடல் உண்டா?!…
மேலும் வாசிக்க -
2 April
உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதைகள்
கூடுபின்ன எளிதாக இருக்கவில்லை ஆயிரம் நரம்புகளின் வலி பொறுத்து அலகு குத்தி கிளையமர்ந்தேன் பசி மறுத்துக் கடும் புயலையும் கோடையையும் சூறாவளியும் சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம் நம்பிக்கையின் ஆணிவேரை மட்டும் மரத்தின் அடியில் புதைத்தேன் புரிந்து கொண்டது மரம் உந்தியெழுந்து…
மேலும் வாசிக்க -
2 April
மணிமீ கவிதைகள்
பாய்மரப் பயணம் நாளைய விதை நெற்களை மனதிற்கொண்டு இன்றைய நெல்மணிகளை மண்ணில் பூட்டிய மாமனிதர்களை வணங்கிய என் பிறப்பு ஒற்றை நெடிய வரலாற்றை ஒன்றிரண்டு கவிதைகளில் படித்துப் பார்த்துவிட்டு உச்சுக் கொட்டுகிற என் பயணம் பன்னாட்டு வீதிகளை அலங்கரித்துக் கிடந்த கண்ணாடிக்…
மேலும் வாசிக்க -
2 April
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யாரோவாகி.. நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற காலத்தைத் தொலைத்துவிட்டேன் கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும் நீலநிறத்திலான காகித மடிப்புகளுக்கு முன்பொரு பெயர் இருந்தது இன்லேன்ட் லெட்டர் என்பதாக இப்போதெல்லாம் எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க…
மேலும் வாசிக்க -
2 April
கிருத்திகா கவிதைகள்
கரைதலறியாது கூவிய கணத்தில் கூடிழந்த குயிலொன்றின் கதையினைப் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு கனவுகளின் வாசம் தொலைத்து கண்ணீரின் வாசம் சுமந்து உயிரொன்று தொலைந்த அவ்வீட்டு மலர்களின் மௌனக் கதைகள் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு வற்றிப் போய்விட்ட தன் மார்பைப்…
மேலும் வாசிக்க -
Mar- 2023 -16 March
நலங்கிள்ளி கவிதைகள்
போலி உன் வளம் நிலம் வீடு உறவுகள் நீ தூய்மையானதென ஊற்றியதனைத்தையும் நெருங்க நெருங்க பழக பழக அசுத்ததிலும் அசுத்தமாய் இருக்கிறது . *** கடன் நாளை நீ தராமல் போவதற்கு என்னென்ன காரணம் சொல்லலாம் என்று தந்துவிடுகிறேனென உறுதியளித்த பின்பு…
மேலும் வாசிக்க -
16 March
ரமீஸ் பிலாலி கவிதைகள்
மலர்நுழை உலகு பூவாளியால் நீர் வார்க்கும் சிறுவனுக்கு உரமாகி அவனை வளர்க்கிறது அவன் வளர்க்கும் சிறிய ரோஜாச் செடி நூறாயிரம் ரோஜாக்களின் ஆவி திரண்டு பனித்த அத்தரைப் பூசிக்கொண்ட பேரரசனின் மனக்காயம் போல் முகம் காட்டுகிறது ரோஜா வாழ்வளிக்கும் புனித நீரின்…
மேலும் வாசிக்க -
16 March
தேன்மொழி அசோக் கவிதைகள்
ஒரேயொரு ஆறுதல் உன் நினைவலைகள் வரும்போதெல்லாம் கடல் அலைக்குப் பயந்தோடும் பறவைகளாய்ப் பதறும் என் மனம் மணல் வரிகளைப் போல நீ விதைத்த வார்த்தை வரிகள் நெளிந்தோடும் என்னுள் காதலியின் பாதச் சுவடில்லாது தனியாய்ப் பதியும் காதலனின் பாதத்திற்கு எவ்வளவு வலியோ…
மேலும் வாசிக்க -
1 March
ரேவா கவிதைகள்
இலையுமில்லை காயுமில்லை பழுக்கத் தெரிந்த காத்திருப்பை காலங்காலமாக கையில் வைத்திருக்கிறது மனமுறிந்து கீழ் விழுந்த சருகுடைய ஓர் நாள் ஒட்டிப்பார்க்கும் பதற்றத்தைக் கொடுத்து விடுவதில்லை பச்சையம் நழுவி பூமி பார்த்த சொல்லொன்று அசைத்து அசைத்து அது நிகழ்த்தும் நாடகத்தில் காற்றுண்டு கட்டுக்கடங்காத…
மேலும் வாசிக்க -
1 March
லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்
எலுமிச்சம் பழங்களுக்கு வயதாவதில்லை 1. எலுமிச்சம் பழமொன்றைக் கையில் எடுத்தேன் நான் சின்னஞ்சிறு வயதில் பார்த்து வியந்தது போலவே சீரான உருண்டை வடிவத்தில் இருந்தது சாறு பிழியும் முன்னர் மெல்ல உருட்டினேன் பால்யத்தில் நான் கண்ட அதே மினுமினுப்புடன் என் முன்னே கண் சிமிட்டியது இரக்கமின்றி இரண்டாய் வகுந்தேன் பதின் வயதில் ரசித்த அதே மணத்தை விரித்தது அதே ஆறு பிரிவான அறைகள் மிக மென்மையாக உள்சதை அல்லிகள் எல்லாமே எல்லாமே அப்படியே இருந்தன முதல் சாறு பிழிய மென்மையாய் அதக்கினேன் அப்போது வடியும் சாற்றின் நிறம் என் முதல் தூமையின் தினத்தில் பிழியப்பட்ட சாற்றின் வண்ணத்தைப் பிரதிபலித்தது கசப்பு கலக்காமல் சாற்றைப் பிழிந்தெடுக்க அரைவட்டத் துண்டங்களை மெல்லத் திருப்பி அல்லிகளை உடைத்துடைத்து சாற்றை ஒட்டப் பிழிந்தேன் கன்னிப் பருவத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கை முன் ஏற்றி வைத்த எலுமிச்சை அகல்களாய் இருந்தன இவ்விரு கிண்ணங்கள் எத்தனை முயன்றாலும் அவை கன்னி பருவத்திற்கு மேல் வளர்வதேயில்லை. *** என் பதின் வயத்தில் சாறு முற்றிலும் பிழிந்த பின்னர் அம்மாவிடம் நான் சொல்வேன் “எலுமிச்சைத் தோலை முகத்தில் தேய்க்கிறேன் முகப்பரு குறையுமாம்…
மேலும் வாசிக்க