இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஒரு வழிப்பாதை

எதிர்வரும் என்னைப் பார்த்து
முகம் திருப்பிக் கொண்டாய்
கம்பளிப் புழுவைக் காலால்
நசுக்கியது போல
காலடியில் துடித்தடங்கும் மனசு

பொறுக்குத் தட்டிய புண்ணில்
கை நகம் பட்டதும்
பொங்கிவரும் குருதியாய்
மேலெழும் நினைவுகள்

வாஷ்பேஷினில்
வடியாது வழியடைக்கும்
வாந்தியைப் போல
அழியாது நின்று போனதுன்
உதாசீனங்கள்

பின்தொடரும் முகம் பிடிக்காமல்
நீ எறிந்த விஷம் தடவிய
அம்புகளால்
தெரு நாய்களிடம் கடிபடும்
வீட்டுநாயாய்
கடித்துக் குதறப்பட்டு
ஓலமிட்டு அலறியபடி
அங்குமிங்கும் ஓடியதென் மனசு

நின்முகம் காணாத நாட்களெல்லாம்
கல்யாண வீட்டில்
எச்சிலைக்குக் காத்திருக்கும்
பிச்சைக்காரன்
வெறும் வயிற்றோடு திரும்பும்
தினங்கள்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button