கவிதைகள்
Trending

கவிதை- தமிழ்மணி

தமிழ்மணி

நெருப்பை நெய்பவன்

பவர்லூம் தறிகளின்
ஆதிக்கப் பகுதியில்
மின்சாரத்தடை நேரத்தில
கேட்கிறது
டட்டக் டட்டக் டட்டக்…
கைத்தறியோசை

அறுபத்தைந்து வயதொன்று
அறுபது ரக நூலை
நெய்துகொண்டிருக்கிறது

பாவுப்பிணைக்கும்
நாளொன்றில்
பிணமாய் போனது
அந்த அறுபத்தைந்து

மயான எரியூட்டலில்
எந்திரிக்கும் அப்பிணத்தின்
கைக்கு இழுவைக்கயிறும்
காலிற்கு மிதிப்பலகையும்
கொடு வெட்டியானே!

நெருப்பை நெய்து
சாம்பல் சேலைப்
படைக்கட்டும்!

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button