
இடைவிடாத நினைவுத் துரத்தலில்
அயர்ந்து போய் அழைத்த அலைபேசியின்
திரைத் துளைத்து பாய்ந்து
கட்டிக் கொள்ளத் துடித்த காதல் ,
சமாதானம் செய்யேனென்று
இதயம் நோக்க
என்னிடம் வார்த்தைகள் இல்லை
என்பதாக மறுதலித்த இதயம்
உன் பெயர் ஜபிபபதைத் தொடங்குகிறது.
மண்டியிடும் மூளை மன்னிப்பே கேட்பதில்லை.
சாத்தானே வா..!