கவிதைகள்
-
கவிதைகள்
ஜே.பிரோஸ்கான் கவிதைகள்
என்னைக் கடத்திய சொல் நெடிய உடலெங்கும் பரவி நிரப்புகிறது காயம் அதன் வலியை. ஒரு மூங்கிலின் வீசலைப் போல் வலியுண்டாக்கும் அந்த சொல்லை பல தடவை நான் கேட்டிருக்கிறேன். அழகிய உதட்டிலிருந்து வெளிப்படும் அந்த சொல்லின் அடர்த்தி பிரம்மிடுக்களைப் போல் பிரம்மிப்பைத்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
நஞ்சேறிய முகங்கள் என் நடையில் தெரியும் பிட்டசைவுகளில் குத்தின ஓராயிரம் கண்ணீட்டிகள். இழுத்துச் சென்ற பாதையோரம் ஊளையிட்ட நாயின் தொண்டையில் சிக்கியிருப்பது என் குரல். ஒடிந்த தண்டுவடத்தின் துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது ஆதிமிருகத்தின் கோரைப் பல். உடைந்து திரும்பிவிட்ட கால்கள் கோடிழுத்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ப.மதியழகன் கவிதைகள்
அரூபம் எனது துயரப் பாடலின் உண்மையான அர்த்தத்தை நீ மட்டுமே அறிவாய்செத்துவிட்ட நேற்றுடன்தான் எனக்கு பிணக்குகளெல்லாம் வற்றாத துயரநதி எனக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் பேரலைக்குக் காரணம் அந்த ஆழ்கடல்தான் என்று எவரும் அறிவதில்லை எத்தனை யுகங்களாக கிழக்கும் மேற்குமாக நாம் இருந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
பியானோவில் விளைந்த பசுமை தேர்ந்த பியானோவின் இசைக்கு தனது துதிக்கரங்களை ஆட்டி நடனமாடுகிறது யானை. முன்பு எப்போதும் அது கேட்டதில்லை ஏறி இறங்கி வளைந்தோடும் உவப்பின் ஒலியை. இசையின் வழியே தனது காட்டின் எல்லைக்குள் புகுந்து ஏறுகிறது.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
சுஜாதா செல்வராஜ் கவிதைகள்
பேயாட்டம் கொடுமைக்கு வாக்கப்பட்டவள் நெருப்பை பொங்கித்தின்பவள் மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள் பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட பாதம் பழுக்கும் உச்சி வெயில் பொழுதொன்றில் குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள் கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள் தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள் நெஞ்சை நசுக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – குமாரநந்தன்
பிஞ்சுக் கண்ணீர் துளிகள் தனிமையின் இருண்ட அடர் வனத்தில் நினைவுகளின் கல் இடுக்குகளில் ஓயாமல் சலசலக்கிறது என் கண்ணீர்த் துளிகள் ஒளிர்வும் குளிர்மையும் கொண்ட அத்துளிகள் திரண்டு மேலெழுகின்றன ஒரு நிலவாய் அதில் இன்னும் ஒளியேற்ற வேண்டும் அது சூரியனாய் தகிக்க…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – விபீஷணன்
பிராட்டி வயிற்று செல்களைக் கொத்தித் தின்னும் பட்டாம்பூச்சிகளை மட்டும் மேய்க்கத் தெரிந்தவளாக இருக்கிறாய் சிலம்பணிந்து ஆதிகாலத்து ஆப்பிளைக் கவ்வியபடி ஒரு மாயமான் வரக்கூடும் தயவுசெய்து பிடித்துவரப் பணிக்காதே! அட்லஸ் ல் இல்லாததொரு தேசத்திற்கு காலம் கடத்திவிட்டால் கனவுகளிலும் துப்பாக்கியில் வெண்புறாக்களைக் குண்டுகளாக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ஆனந்தி ராமகிருஷ்ணன்
இப்பொழுதுகள்! இயற்கை பேருருக் கொண்டு வஞ்சித்த இப்பொழுதுகளில் உடல் முழுவதும் தீண்டும் பசியால் வெளிக்காட்டாத ஊற்றுக்கண்களாய் துயருரும் ஓடையில் மிதக்கின்றன விழிகள் நிதம் காற்றைத் தின்று, பசியாற மனதிற்குள் நடக்கும் யுத்தத்தை மதகடைத்தப்பின் வீசும் வாளாய் உயிர் ஆவியைக் கொண்டு நுகர்ந்திருக்கிறோம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – சாமி கிரிஷ்
காரம் தூக்கலான நாட்குறிப்பு மிளகாய் நெடி பறக்கும் அந்தச் சந்தினை தும்மல் இல்லாமல் கடப்பதென்பது ஆபூர்வம். மிளகாய் அரைக்க வருபவர்கள் நாசி துளைக்கும் கலப்படமற்ற காரத்தை சமைக்கும் குழம்பின் சுவையெண்ணி ஊறும் நாவெச்சிலால் தணித்துக்கொள்கிறார்கள் ‘காரமே கண் கண்ட தெய்வமென்கிறார்’ கல்லாப்பெட்டியில் கம்பீரமாய்…
மேலும் வாசிக்க
