இணைய இதழ்
-
Apr- 2026 -13 April
பரந்து கெடுக – பாக்கியராஜ் கோதை
“எழுத்தாளரா மட்டும் ஆயிடாத, கிறுக்குப் புடிச்சிடும்” “ஏன்?” “உலகத்துல பாக்குறதெல்லாம் கதையாத் தெரிய ஆரம்பிச்சு, சாதாரண வாழ்க்கை வாழ முடியாம போய்டும். ஒருத்தன் செத்தாலும், ஒருத்தன் என்ன ஒருத்தன், உன்னப் பெத்த அம்மாவே செத்தாலும் அதுவே கதையாத்தான் தெரியும். வர்ற கண்ணீருக்கு முன்னாடி இது கதையா மாறுனா எப்படியிருக்கும்னுதான் தோணும், அம்மா செத்ததுக்கு அழுவாம அதுல கதையத் தேடுறவன் கிறுக்கனாத்தான இருக்க முடியும்” கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அந்த எழுத்தாளருடனான இந்த உரையாடலை என்னால் …
மேலும் வாசிக்க -
Mar- 2026 -12 March
நான் – ஒரு போஹேமியன் பயணி;10 – காயத்ரி சுவாமிநாதன்
இருட்டிலிருந்து வெளிச்சம் – புத்தருக்குள் நுழைந்த இரவு இந்த அத்தியாயம் ஒரு சம்பவத்தை விவரிப்பதற்காக எழுதப்படவில்லை, ஒரு மனநிலையைப் பதிவு செய்வதற்காக எழுதப்படுகிறது. ‘கயா’ பெயரை மட்டும் அறிந்திருந்த இடம், வரலாற்று புத்தகங்களில் படித்த பெயர். ஆனாலும்…
மேலும் வாசிக்க -
11 March
தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
தற்கொலைகளின் துரத்தல்களில் தன்மானத்தைக் காப்பதற்காக தமது வாழ்வையே தொலைத்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பிடிக்கின்றனர். வாழும் வாழ்வை யாரும் குறை சொல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் குறையறியா மாந்தர்களாக வாழ்வதே அவர்களின் எழுதப்படாத விதியாகிறது. ஆனால் வாழ்வெனும் நதியின் போக்கு…
மேலும் வாசிக்க -
11 March
கம்யூனிசப் பூச்சாண்டி (Communist spectre) – லிவி
முன்குறிப்பு – தன்னலம் இல்லாமல் மக்களுக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கும், உயிர் நீத்த, தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த, அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் கம்யூனிசத் தலைவர்களையோ தொண்டர்களையோ போராளிகளையோ அவமதிக்கும் நோக்கம் மொழிபெயர்ப்பாளனாக எனக்கு இல்லை. அவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளுக்கு என்றும் கடமைப்பட்டவனாக…
மேலும் வாசிக்க -
11 March
ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு, மனித மனத்தின் ஆழங்களை, சமூக உறவுகளை, பாலியல் உணர்வுகளை விரிவாக ஆராய்கிறது. எழுத்தாளர் சுபி, பெண் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு,…
மேலும் வாசிக்க -
11 March
அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள்,…
மேலும் வாசிக்க -
11 March
அந்தரங்க உரையாடலின் அழைப்பு – தயாஜி
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க…
மேலும் வாசிக்க -
11 March
நம்பிக்கைகள் பொய்க்கும்போது… – தேவவிரதன்
சமீப காலங்களில், நான் அடிக்கடி கேட்டு, படித்துத் திடுக்கிடும் செய்தியாக இருப்பது இளம் வயதினரின் தற்கொலைகள். தற்கொலை என்பது ஓர் அசாத்தியமான, விபரீதமான, மனமும் அறிவும் இணைந்து எடுக்கும் ஓர் அதிர்ச்சி தரும் சோகமான முடிவு. ஒவ்வொரு மணித்துளியையும் வாழவேண்டும் என்ற…
மேலும் வாசிக்க -
11 March
நூல் விமர்சனம் : தாழ்வரை -கமலா முரளி
வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம். (முதற்பதிப்பு ஜனவரி 2026, 168 பக்கங்கள், விலை 200ரூ ) தனியார் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் கவிதைகள்,…
மேலும் வாசிக்க -
11 March
இரவு விட்டில்கள் – சிறுகதை
தெலுங்கில் நாகேந்திர காசி; தமிழில் ஸ்ரீநிவாஸ் தெப்பல. பைப்லைன் சாலையின் அருகில் பஸ்தி. அதனை மூன்று பக்கமும் சுற்றி வளைத்து, இருபத்து நான்கு அடிகள் அகலமுள்ள குழாய் இருட்டில் அச்சு அசல் மலைப்பாம்பு போல் காட்சியளிக்கிறது. தொலைவில் தொழிற்சாலை பகுதியில் இரண்டாவது…
மேலும் வாசிக்க