கவிதைகள்

  • Mar- 2023 -
    1 March

    சுஷ்மா கவிதைகள் 

    ஏன் எழுதுகிறாள்? ஏன் எழுத வேண்டும்? என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள். ஊர் கூடுமிடத்தில் இருக்கும் ஒற்றைப் புளியமரம் எனக்கது! அதன் வேர் பிடித்துத் துயில்வேன், கிளை எண்ணிச் சுகிப்பேன், ஏதேனுமொரு பொந்திடை ஜீவன் ஒளித்துத் தேடுவேன், பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சபேஷா கண்ணதாசன் கவிதைகள்

    மரியாதை கிடைக்காத இடத்தில் கால் கடுக்க நிற்கும்போது மூளைக்குத் தெரிகிறது இது அவமானமென இது புறக்கணிப்பென இங்கிருந்து சென்று விட வேண்டுமென்று ! நகரத் தயங்கும் கால்களுக்கோ கடமையின் குணம்..! அன்பின் மனம்..! **** மரம் சரிந்து வீழும்போதெல்லாம் சேர்ந்தே வீழ்ந்திடும்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சத்யா சொக்கலிங்கம் கவிதைகள்

    மௌனத்தின் சத்தம் என்னை எப்போதாவது நிசப்தத்தின் வழியே கேட்டதுண்டா? நான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் உன் ஒலியை… *** உனக்கெனக் கூறுவதற்கென்றே ஓரிரு வார்த்தைகளை வைத்துள்ளேன் கூறாமலே நெடுநாள் கழிகிறது அவ்வார்த்தைகளின் கணம் கூடிக்கொண்டே போகிறது நிறைகொள்கலனை தாண்டிப் பெருகும்போது என்றாவது…

    மேலும் வாசிக்க
  • Feb- 2023 -
    16 February

    செல்வசங்கரன் கவிதைகள்

    குரலின் உடம்பு இளவம் பஞ்சினை அதன் கூடு பிடித்திருந்ததைப் போல என்னுடைய குரலை உடல் பிடித்திருந்தது எது எங்கிருந்து கொண்டு பிடிக்கிறது என்றுதான் எனக்கு நாள் முழுவதும் யோசனை குரல்தான் இவ்வுடம்பில் உயிரோ என்று கூட நம்பிய காலங்கள் உண்டு மௌனத்தை…

    மேலும் வாசிக்க
  • 16 February

    மரக்கா கவிதைகள்

    அன்றொரு நாள் பாதி இருள் சூழ்ந்த அகலத் தெருவில் என் நிழலோடு நானும் நடக்க ஆயிரம் ஓட்டங்கள் மனதில் பசி வேலை குடும்பம் அடடா ! புளித்த தயிருக்குத்தான் எத்தனை தாளிப்பு வாயில் போட்டு காரி உமிழ்வதற்குள் குப்பைக்குப் போக சமயம்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    அக்னி பிரதீப் கவிதைகள்

    உன் உள்ளங்கையில் முகம் புதைத்து நான் உறங்கியதில் என் பின்னங்காலில் விரல் பதித்து நீ அழுத்தியதில் விடுபட்டது தேகத்தில் தேங்கியிருந்த வேதனை உஷ்ணம் அதன் தடயங்களே தோலின் மீது சிவப்பு! *** அவன் எல்லாவற்றையும் அழகற்றதாக மாற்றினான் உலக அழகுகளனைத்தையும் குவளைக்குள்…

    மேலும் வாசிக்க
  • 1 February

    ம. கண்ணம்மாள் கவிதைகள்

    முன்னிரவுப் பேச்சு…. அது ஒரு நவீன கேளிக்கைக் கூடம் பலரும் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் குழைந்த மண் பல உருக்களை வனைவதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் போல ஒவ்வொருவரிடமும் ஒரு சொல் தொங்கி அசைந்துக்கொண்டிருந்தது அருள் வந்த சாமியாடி…

    மேலும் வாசிக்க
  • 1 February

    சபேஷா கண்ணதாசன் கவிதைகள்

    கடக்க வேண்டும் என முடிவான பின் தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை நிலங்களில் தூரமென்றால் நடந்திடலாம் நீரினில் தூரமென்றால் நீந்திடலாம் காற்றிடைத் தூரமென்றால் பறந்திடலாம் மனங்களில் தூரமென்றால் பேசிடலாம் ஏனோ எல்லாத் தொலைவுகளையும் கடப்பதற்கு வழி கண்ட…

    மேலும் வாசிக்க
  • 1 February

    கார்த்திக் திலகன் கவிதைகள்

    ஜீலுங் அந்தக் கல் எனக்கொரு பெயர் வைத்திருக்கிறது அந்த வழியாக எப்போது போனாலும் அந்தப் பெயர் சொல்லித்தான் என்னை அழைக்கும் நான் கூட வீதியில் செல்லும் யாரோவுக்கு அழகான தமிழ் பெயரை வைத்துவிடுவேன் நானழைக்கையில் யாரையோ அழைப்பது போல் என்னைத் திரும்பித்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2023 -
    20 January

    ச. ஆனந்தகுமார் கவிதைகள்

    வேற்றுமையில் ஒற்றுமை நம் இருவரின் திணைகளும் வேறு வேறு நெய்தல் எனக்கு பாலை நீ! தண்ணீரில் குதிக்கிற ஓங்கில் என் மகிழ்ச்சி.. நிஷாகந்திப் பூவென தற்காலிக வாழ்வியல் உனக்கு அருவி கண்டால் சிலிர்த்து புணர்வது எனக்கு சுகம் ஆரவாரமற்று புகைப்படத்தில் அடக்கி…

    மேலும் வாசிக்க
Back to top button