சிறுகதைகள்
-
May- 2024 -1 May
தோற்றப்போலிகள் – சாய்
அப்படி ஒரு மலரை தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததேயில்லை என்பதைப் போல இதழ் விரித்து மேசையை அலங்கரித்திருந்த காகித அந்தூரியப் பூக்களை மனதால் மொய்த்துக்கொண்டிருந்தான் ராகவ். உண்மையில் அவன் கண்கள் மட்டுமே பூக்களில் நிலைத்திருந்தன. மனம் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் எங்கோ…
மேலும் வாசிக்க -
1 May
பொருண்மை – மணிராமு
வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் இருக்கைப் பட்டையை அணிகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக வானொலியின் காதைப் பிடித்து திருகிவிடுபவர்கள் அநேகர். அவர்களில் பிரபாகரனும் ஒருவன். மனசுக்குள் எத்தனை குழப்பங்கள் குத்தவைத்து உட்கார்ந்திருந்தாலும் தன்னைச் சுற்றி ஓசையெழுப்பிக் குழப்பங்களை மறந்துவிடும் மனநிலையென்பது மாயநிலையை ஒத்தது. …
மேலும் வாசிக்க -
1 May
மீள்வு – கா. சிவா
மணி பதினொன்று ஆனபோதும் ஈஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. கட்டிலில் வினோத் தூங்கிக்கொண்டிருக்க அவன் மார்பின் மேல் தலைவைத்து ரக்சன் தூங்கிக் கொண்டிருந்தான். இவர்கள் இப்படி ஆழ்ந்து தூங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈஸ்வரி கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். பக்கத்து வீட்டிற்கு…
மேலும் வாசிக்க -
1 May
ஊற்றுக்கண் – ந.சிவநேசன்
மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. என்னமோ தப்பாகவே படுகிறது அவனுக்கு. இதற்கு முன்பும் நிறைய தடவை இப்படித் தோன்றியிருக்கிறது. தனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடப்பதாகவும் தான் மட்டுமே தரித்திரம் சூழ வாழ்கிறோமென்றும் ஒரு எண்ணம் அடிக்கடி வந்து போகிறது. யாரிடமாவது சொல்லி…
மேலும் வாசிக்க -
1 May
கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்
“வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’ வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க -
Apr- 2024 -16 April
ஆல்பம் – ரம்யா அருண் ராயன்
அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல்…
மேலும் வாசிக்க -
16 April
திரை – ப்ரிம்யா கிராஸ்வின்
“கேமரா ரோலிங்… டேக் ஃபைவ்… ஆக்சன்!” இயக்குநரின் கரகரத்த குரல் உரத்து முழங்க, சூழல் மொத்தமும் அசைவின்றி உரைந்தது. “வெரம் வயத்தோடே போவாமே, ஒரு வாய் கஞ்சிய குஷ்ட்டு போ மாம்மா…” உதட்டின் இயற்கை நிறத்திலேயே பூசப்பட்டிருந்த சாயம் கலைந்துவிடாமல் மிழற்றினாள்…
மேலும் வாசிக்க -
16 April
கணங்கள் – ஹேமா ஜெய்
அன்று அதிகாலை வெகு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது கண்மணிக்கு. நன்கு உறங்கவேண்டுமென்றுதான் கணவனுக்கும் மகளுக்கும் நேற்றிரவே உணவு சமைத்து கட்டியும் வைத்திருந்தாள். எனினும் இப்போது சுணக்கம் சற்றுமில்லாத, மஞ்சள் வெளிச்சம் படிந்த வானம் போல உறக்கம் சுத்தமாகத் துலங்கியிருந்தது. இது வழக்கம்தான்.…
மேலும் வாசிக்க -
16 April
இளன் – பெருமாள்முருகன்
பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.…
மேலும் வாசிக்க -
16 April
கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்
‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு…
மேலும் வாசிக்க