சிறுகதைகள்

  • Feb- 2026 -
    9 February

    கேர்டேக்கர்[ஸ்] – சக மனிதர்

    இன்று உறுத்தலில்லாமல் சிரிக்க முடிவது அவனுக்கு சட்டென உரைத்தது. அவனை அறியாமல் கண்களில் நீர் திரண்டது. அது ஒரு பெருந்துளியாய் உருவெடுத்து ஆக்ரோஷமாய் அவன் இடது கன்னத்தில் தன்னைப் பதித்துக்கொண்டு ஓடிக் கரைந்தது. அவனுடைய விரல்கள் அவசரமாய் அதைத் துடைத்துவிட எத்தனிக்கவில்லை.…

    மேலும் வாசிக்க
  • 9 February

    கல்யாணத்துல மழை பெய்யும்! – மஞ்சுளா சுவாமிநாதன்

    சுமதி அத்தை என்றால் நினைவில் வருவது அவரது அழகு. சுண்டினால் இரத்தம் வரும் நிறம். நீண்ட கரும் கூந்தல். சதா சர்வகாலமும் வெற்றிலையால் சிவந்து இருக்கும் அவரது உதடு. ‘மூணு பொட்டுக்காரி’ என்று உறவுகள் எல்லாம் அவரை அழைக்கும் நேர்த்தியான மூன்று…

    மேலும் வாசிக்க
  • 9 February

    ஒரு வழிப் பாவம் – கா.ரபீக் ராஜா

    எனக்கு முதலாளியாக அறியப்பட்ட இந்தோனேசியாக்காரன் பெரும் கொண்டாட்டங்களை தனக்குள் நிறைத்தவன். கடற்கரை உள்ள எல்லா பெரிய நாடுகளிலும் இவனுக்கு ஹோட்டல் உண்டு. ஊர் பொறுக்கி போல உடையணிந்து கையில் எப்பொழுதும் குழல் சுருட்டு வைத்திருப்பான். அது கொள்ளி போல விரலுக்கிடையே புகைந்து…

    மேலும் வாசிக்க
  • 9 February

    அம்மாப் பனை – ராஜேஷ் வைரபாண்டியன்

    அப்பா இறந்து அடக்கம் செய்த நாளின் பின்னிரவில் பாயில் சுருண்டு கிடந்த அம்மா எழுந்து வளவிலிருக்கும் ஒற்றைப் பனையின் அருகில் சென்றாள். இரவுப்பூச்சிகளின் சப்தத்தில் திளைத்துக்கொண்டிருந்த வளவு மரங்கள் அம்மாவை வினோதமாகப் பார்த்தன. பனைமரத்தடியில் நின்றபடி அண்ணார்ந்து பார்த்து ஏதேதோ பேசத்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2026 -
    8 January

    பழிப்பொலிவு – கா.சிவா

     “இங்கே இல்லையே” எனக் கூறிய அப்பா சாமிநாதனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் வள்ளி. அவர் முகம் இதுவரை இவள் கண்டிராத இறுக்கத்துடன் இருந்தது.   எதிரில் நின்ற கருப்பையா முகத்திலும் ஆச்சர்யம் தெரிந்தது. அவனோடு வந்த ஆரோக்கியமும் நிமிர்ந்து பார்த்தான்.  “அய்யா… இன்னைக்கும்…

    மேலும் வாசிக்க
  • 8 January

    ராஜகோபுரம் – றின்னோஸா

    கும்பகோணத்தின் அந்திப் பொழுது, ஒரு மெல்லிய சந்தனப் பூச்சாக ஊர் முழுவதும் பரவியிருந்தது. அகல்யாவின் வீட்டு ஜன்னல் வழியே, ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வானளாவிய ராஜகோபுரம் கம்பீரமாகத் தெரிந்தது. அந்திச் சூரியனின் தங்கக் கதிர்கள் கோபுரத்தின் கலசங்களில் பட்டுத் தெறிக்க, ஜன்னல்…

    மேலும் வாசிக்க
  • 8 January

    புரியுது மேடம் – மனுஷி

    மதிய உணவு சமைப்பதற்காகக் கண்கள் கசிய வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தேன். எனது பூனைக்குட்டிகள் இருவரும் கண்கள் பனிக்க நான் வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது…’…

    மேலும் வாசிக்க
  • 8 January

    விட்டில் பூச்சிகள் – லாவண்யா சுந்தர்ராஜன்

    வீட்டு வெளிவாசலில் காம்பவுண்ட் கேட் ஓட்டி ஒரு ஜோடி செருப்பிருப்பதைப் பார்த்ததும், “வேணு வந்துட்டா போல” என்றார் பெரியவர். குலதெய்வ கோவிலுக்குப் பெரியவரும், அவர் மகன் விஷ்ணுவும் மருமகள் கனகாவும் போய்விட்டுத் திரும்பியிருந்தனர். பெரியவர் அப்படிச் சொல்லும் முன்னரே, வண்டியை விட்டு இறங்கியதுமே,…

    மேலும் வாசிக்க
  • 8 January

    அஸீர் – இத்ரீஸ் யாக்கூப்

    இன்றும் பணி நிமித்தமாக இரு வேறு எல்லைகளுக்குச் சென்றிருந்தேன். இது கொஞ்சம் குறைவுதான். பெரும்பாலும் ஒரே நாளில் நான்கைந்து இடங்களுக்குக் கூட எந்திரம் போலச் சுழன்று வர நேரிடும்! பாலிடெக்னிக் முடித்து விட்டு இரண்டாண்டுகள் உள்ளூர் அனுபவத்தோடு ஒரு மெக்கானிக்காக இருபத்தி…

    மேலும் வாசிக்க
  • 8 January

    காலாதீதம் – அருணா சிற்றரசு

    சரியாக மாலை ஆறு மணிக்கு கோவிலின் கிழக்கு வாசல் முன் கார் நின்றது. தென்காசிக்குச் செல்வது என்பது என் திட்டத்தில் இல்லை. ‘காசி விஸ்வநாதரைப் பார்க்கிறாயா?’ என்று அவன் கேட்டதுமே மனம் ஒப்புக்கொண்டது. அவனுக்கு என் மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது…

    மேலும் வாசிக்க
Back to top button