சிறுகதைகள்

  • Jun- 2023 -
    17 June

    கறையான் – தேஜூசிவன்

    கித்தாரின் E ஸ்ட்ரிங்கின் மென் அதிர்வு. தீபுவின் காலர் ட்யூன். ”சொல் தீபு” மெலிதாக விசும்பினாள். “என்னடா செல்லம்” “அப்பா…” “என்ன?” “அப்பா எனக்கு ஒரு மெய்ல் அனுப்பிருக்கார்.” “எப்ப?” தயங்கினாள். “அன்னக்கு ராத்திரியே.. நான் அப்பவே பாத்திருந்துருக்கலாம்.” விசும்பினாள். “இப்பத்தான்…

    மேலும் வாசிக்க
  • 17 June

    கொல்லை  கிணறு – பாஸ்கர் ஆறுமுகம்

    “ஏய்…சொந்தரம்…எலேய்…சொந்தரம்” கேணி மதிலில் மார்பு அழுந்த கவிழ்ந்தபடி நீரின் அசைவுக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்த சுந்தரம், முருகுவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அப்படி என்ன தான் இருக்கோ தெரியாது, சுந்தரத்துக்கு அந்த கொல்லையும் கேணியும்தான் போக்கிடம். அவன் சோட்டு…

    மேலும் வாசிக்க
  • 2 June

    ஒப்புதல் – கா. ரபீக் ராஜா

    அதிகாலை நேரம். இவனுக்கு மட்டுமல்ல ஏனைய மனிதர்களுக்கும் கொஞ்சம் அசாதாரணமானது. சற்று தளர்வாக நடந்து கொண்டிருந்தான். அந்த நடையில் ஒரு நோக்கமும் இல்லை. அந்த அதிகாலை நேரத்தில் உலகம் இவ்வாறு இயங்குவதே இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறந்து  வளர்ந்த நகரத்தில் அன்று…

    மேலும் வாசிக்க
  • May- 2023 -
    16 May

    சகாப்தம் – காந்தி முருகன்

    இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக உள்ளுணர்வுகள் உரைத்துக் கொண்டே இருந்தன. பல உயிர்கள் துச்சமாக எண்ணிக் கொல்லப்ப்படுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒரு துளி விந்துவினால் உயிர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது கருவாகி உருவெடுத்து உலகத்தை வியந்து பார்க்கையில்,…

    மேலும் வாசிக்க
  • 16 May

    செந்நிற இரவுகள் – லட்சுமிஹர் . 

    என்ன பேசுவது என்று தெரியாமல்தான் இதை ஆரம்பித்தேன் அவளிடம். ஆம் எவ்வளவு முறைதான் அப்புறம்.. அப்புறம் என்று பேசுவது. ஆனால், முதல் தொடக்கமே பலமான அடியாக இருந்தது. ‘எங்க வீட்டு பக்கத்துல ஒரு லூசு இருக்கும் அது நைட்டிக்குள்ள பேண்ட்டு போட்டு…

    மேலும் வாசிக்க
  • 16 May

    மரணப்படுக்கை – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

    ஐப்பசிக் கூதலும் இருளும் கொஞ்சம் கொஞ்சமாய் சன்னல் வழி நுழைந்து என் உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. திட உணவுகள் தொண்டையிலிறங்கி வாரங்களாகிப்போனது. நீராகரம்தான் வலித்தும் வலிந்தும் இறங்கிக் கொண்டுள்ளது. அதுவும் இரண்டு நாட்களாய் உதட்டில் இடும் மிடறுகளை உடல் தயங்கித் தயங்கித்தான்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    தென்றல் கேசட் கடை – ந.சிவநேசன் 

    நான் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இருட்டத் தொடங்கியிருந்தது. சுராஜுக்கு போன் அடித்தேன். வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். சுராஜ் என் முகநூல் நண்பன். அவனுடனான பழக்கத்தினால் மீண்டும் பதினெட்டு வருடங்கள் கழித்து ஆத்தூர் மண்ணில் கால் வைப்பதை நினைத்தால் புல்லரிப்பாக இருந்தது. இரயில்வேயில்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    அனுராதா பசு,  ஈமுக்கோழிகள் மற்றும் பீற்றர் பன்றிகள் – மோனிகா மாறன்

    ஒரு சின்ன மட்டடார் வேனில் அந்த பெரிய பறவைங்க ரெண்டும் அற்புதராஜ் ஐயா வீட்டுக்கு வந்து இறங்கிய போது ஊரே வேடிக்கை பார்த்தது.  “ஐயோ..நெருப்புக்கோளியா?” “இது இன்னாடி இத்தா தண்டி இருக்கு. எம்மாம் ஒசரம்” – நாலடி ஒயரமான பிடுகு தாத்தன்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    சங்கிலி பூதத்தார் – உத்தமன் ராஜா 

    ‘நாட்டிலேயும் நல்ல நாடு, நல்ல நாடு… நாவலர்கள் வாழும் நாடு, வாழும் நாடு…’ என்றவாறு தூரத்தில் சங்கிலி பூதத்தார் கோவிலில் வில்லிசைப் பாடல் ஆரம்பித்தது.  செங்கோடன் ஊருக்குப் பொதுவாக கேட்குமாறு பரமனிடம் சுத்திவளைச்சு கேட்டான், ‘சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி…

    மேலும் வாசிக்க
  • 5 May

    துணை – பாஸ்கர் ஆறுமுகம் 

    உங்களுக்கு நம்பிக்கை வராது. இருந்தாலும் சொல்கிறேன். இப்படிதான் அந்த உரையாடலில் தொடங்கிற்று.  “சார்..எனக்கு வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. என் வாழ்நாளில் இதுவரையில் யாருக்கும் முத்தம் கொடுத்ததேயில்லை”. தினசரிகளை சுரத்தையின்றி புரட்டி கொண்டிருந்த நான் நிமிர்ந்து குரல் வந்த திசையில் பார்த்தேன். வெள்ளை…

    மேலும் வாசிக்க
Back to top button