கவிதைகள்
-
இணைய இதழ்
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
புழு நான் இந்தப் பூமியின் வயிற்றில் நெளியும் புழு என் வயிற்றிலும் சில புழுக்கள் நெளிகின்றன அதன் வயிற்றிலும் மேலும் பல நெளியலாம் இச்சங்கிலி முடிவின்மை எனில் தொடக்கமும் அதுதான் பிரபஞ்சத்துகள் அண்டவெளி எனச் சொற்களில் அளவிடும் புழுவிற்குச் சிறுகுடல் –…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நிழலி கவிதைகள்
முத்தங்களைச் சேகரிப்பவர் காலை எழுகையில் காது பிடித்து கட்டியணைத்தபடி நெற்றி நிறைத்துவிட வேண்டும் அவசர அவசரமாக பள்ளி புறப்படுகையில் புத்தக மூட்டையை ஊடுருவியபடி கன்னத்தை நிரப்பிவிட வேண்டும் மாலை வீடு திரும்பும் வரை வறண்டு கிடக்கும் மறு கன்னத்திற்கு ஓர் அருவியின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பிறப்பு இவ்வளவு மௌனமான கவனத்திலோ காணும் வெளியிலோ இல்லை அவன் வாழ்க்கை அவன் பிறந்த கணத்தில் திறந்த புத்தகம் இறந்த கணத்தில் மூடப்பட்டு விட்டது அவனது பயணத்தின் பாதை திறந்தபடி இருக்கிறது அது அவனை ஆள்கின்றது அவனை மறுக்கின்றது அது ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கயூரி புவிராசா கவிதைகள்
சூரியக்கணங்கள் கடக்கும் ஒரு காலையின் சுவடுகளில் நீரல்லியின் சாயலில் ஒருத்தி கடந்து போகிறாள் தவறவிடப்பட்ட கடைசிப் பேருந்தின் பாடல் திசைக்கொன்றாய் சிதறி நழுவுகிறது இமைமீதோ நுதலிலோ மீள்வருடும் முத்தங்களில் ஒரு இரவு பூர்த்தியாகிறது உதிரும் மஞ்சள் நுணா பூக்களின் மயக்கும் அனிச்சை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனாமிகா கவிதைகள்
பகடி மலையுச்சிக்கு ஏறுகிறேன் குனிந்து சிரமப்பட்டு ஏறுகிறேன் மேடும் பள்ளங்களும் கொண்ட நிறைந்த உயரிய நிலம் பிரமாதமான காட்சிகள் ஆங்காங்கே மேகங்கள் மலை முனையை முத்தமிடுகின்றன ஓவியனுக்கு வண்ணங்கள் கிடைத்ததுபோல் எனக்கு இந்த மலை நிறங்கள் பிடித்துவிட்டன கால்கள் வழுக்கிக்கொண்டிருந்தன உடல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
அந்த ஆட்டுக்குட்டி கருப்பும் வெள்ளையும் கலந்த அந்த ஆட்டுக்குட்டி காண்பதற்கு அது ஓர் அழகு அது ஒரு சுகம் ஒரு பிரியத்தின் வாசனையை உள்ளார்ந்த தவிப்பை அதனைவிட அந்த நொடிப்பொழுது யார் தந்து விடக்கூடும் என்பது போலிருந்தது அது என்னிடம் ஓடி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
கனங்கள் ஏன் இந்த கனங்கள் இருத்தலின் நிறைவில் கூடிப்போன கனங்களில் களித்துப் பழகிய பின் இல்லாது இருத்தலால் ஏற்பட்ட வெற்றிடத்தால் குறைந்த கனங்களை இலகுவாகச் சுமந்திருக்க வேண்டும் இருத்தலின் உச்சபட்ச கனத்தை இலகுவாகச் சுமந்துவிட்டு இல்லாது இருத்தலின் கனத்தை சுமக்க முடியாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜே. மஞ்சுளாதேவி கவிதைகள்
பாளையத்தூர் வெள்ளைச்சீலை அப்பத்தா – 1 மாலை நழுவிக் கொண்டிருந்த நேரத்தில்தான் மணிக்கா விசும்பிக் கொண்டிருந்தாள் பத்து நாளாய்க் காணாமல் போயிருந்த கணவன் வேறு ஒருத்தியை மலைக்கோவிலில் வைத்து திருட்டுத் தாலி கட்டிய விவரம் சொல்லித் தேம்பினாள். வெள்ளைச் சேலையை உதறிச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
சிறு தளிர் அலுவல் பணி உயரழுத்தம் பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில் தேநீரக மரநிழல் ஓரம்பார்த்து இருசக்கர வாகனம் நிறுத்தி ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தலைக்கவசத்தை கழற்றி அமிழ்ந்துபோன கேசம்கோதி உயிர்தடவுகையில் தொட்டிச்செடியில் எனக்காகவே துளிர்த்துக் கொள்கின்றது தினம் ஒரு சிறுதளிர். ***…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
அன்பின் அத்துமீறல்களை அடக்குமுறைகளைத் தாளாது அக்கினி வார்த்தை வீசி உன்னை விசிறியடிக்கிறேன் முகவரியின் தடங்களை நினைவுகளில் அகற்றாமல். உன்னைத் தொலைத்துவிட்டதாக பிதற்றிக்கொண்டிருக்கிறேன் ஓய்ந்திருக்கும் வேளையில் அனிச்சையாய் கால்கள் உந்தன் வாசலுக்கே என்னை இட்டுச் செல்கின்றன வலிய வந்ததால் கர்வத்தில் மயக்கும் சிரிப்புடன்…
மேலும் வாசிக்க