கவிதைகள்
-
Oct- 2023 -1 October
லக்ஷ்மி கவிதைகள்
என் ஆன்மாவைத் துடைத்து வைக்கிறேன் அழுக்குகள் இல்லை யாரிடமும் யாசிக்காதே என்கிறது இதயம் எனக்கான எதிர்பார்ப்புகளை அழித்துவிடுகிறேன் அன்பைப் பெருகச் செய்கிறேன் என் கணகளை அகல விரித்து இவ்வுலகைப் பார்க்கிறேன் வெண்மையும் கருமையும் நிறைந்துள்ளது எனக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கிறது…
மேலும் வாசிக்க -
Sep- 2023 -18 September
உமா செளந்தர்யா கவிதைகள்
யாருமற்ற பிரகாரத்தில் சுற்றி வருகிறாள் இறைவி கையிருப்பில் இருக்கும் வரங்களை எண்ணிக்கொண்டு. *** நினைவுகளை விழுங்க முடியாமல் புரையேற அருந்த வேண்டுகிறேன் கொஞ்சம் கண்ணீர். *** என் கன்னங்களை ஊதியது பலூன் வண்ணங்களாய் முகப்பருக்கள். *** உள்ளும் புறமும் எப்படி ஓயாமல்…
மேலும் வாசிக்க -
18 September
சவிதா கவிதைகள்
விடைபெற்ற பின் வாழ்வின் மொத்தங்களும் இச்சிறு திரியில் வழியும் ஒளிக்கெனவே ஒற்றை மலரின் ஈரத்துக்கெனவே இன்னும் பொருந்திய உதட்டில் ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு நெடுநேரம் வெளியில் நிறுத்திய பின் உள் அழைத்துக்கொண்ட கனிவுக்கு தெறித்த கடைசி பட்டனுக்கு விம்மும் இதயத்தின் ஆற்றாமைக்கு நீண்ட…
மேலும் வாசிக்க -
18 September
அய்யனார் ஈடாடி கவிதைகள்
கிருதுமாநதி இழுத்து வந்த மணல் முகடுகளில் ரீங்காரமிட்ட பெருங்கைகளிலிருந்து தப்பி வந்த கண்ணாடி வளையல்களின் பூவண்ணச் சிதறல்கள் நீரற்றுக் கிடந்த நதி நீர் திரளும் பூ நெருப்பாய் பூக்கையில் பூவரசமரத்திலிருந்து அலைக்கழிக்கிறது ஒற்றைக்கால் அக்காக்குருவி வளவிக்காரியாக. *** பூச்சட்டியில் பூத்து விழும்…
மேலும் வாசிக்க -
18 September
ராணி கணேஷ் கவிதைகள்
தேநீர் சுவை மழையினூடான பின்னிரவு பயணத்தின் நடுவில் சாரலைச் சுமந்தபடியே நான் பருகிய தேநீரின் சுவையை ஒரு அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்த இருளில் குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே சுவைத்திருக்கக் கூடும் நீயும் புகைப்படங்களில் தங்கிவிட்ட அந்தப் பொழுதும், குடிசைக்கடையும் இன்னும் அங்கேயே…
மேலும் வாசிக்க -
18 September
நந்தாகுமாரன் கவிதைகள்
குடுகுடுப்பையை இசைக்கும் வார்த்தைகள் இசையின், ‘மைக்ரேன்’ இசையின், ‘மைக்ரேன்’ தன் தாண்டவத்தைத் துவங்கிவிட்டது இரைச்சலுக்கும் இன்னிசைக்கும் இடையே போர் காதுகளின் கால்வாயில் மௌனத்தின் திரவம் தடம் புரண்டுவிட்டது வாதையின் குமிழ் உடையும் பாதையில் தலை தனக்கான போதையில் உடல் நீங்கி முண்டத்தின்…
மேலும் வாசிக்க -
4 September
பாலைவன லாந்தர் கவிதைகள்
துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல் உடைந்து தெறித்த பொம்மையின் கை தரையில் மோதி சுக்குநூறாகச் சிதறியபோது கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென அறைமுழுக்கப் பரவியது கை அற்ற பொம்மையை நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை. **** பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில் சணல்…
மேலும் வாசிக்க -
4 September
தாமரைபாரதி கவிதைகள்
வலியின் வண்ணங்கள் ஒளிரும் கோடி விழிகளால் நீர்மை பொங்கும் செந்திரவத்தைப் பொழிகிறது உடல் செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான் நனைந்துகொண்டிருக்க தோல் நனையா செம்மறியாக அது மட்டும் சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது எத்துனை சிறிய பொருளையும் விடுவதாயில்லை ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே காயத்தின் அளவே கடும் வலியின் அளவுமென்கின்றன மருந்தின் தாதுக்கள் வலியின் குணமறியாத விரிசல்களில் வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி உணர்வை ஓர் ஓவியமாய்ப் பார்க்கும் ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும் புலன்கள் மரிக்க தூர மலையின் வீழருவியில் நனைகிறேன் கசடைக் கழுவிச் …
மேலும் வாசிக்க -
4 September
ச. சக்தி கவிதைகள்
பட்டாம்பூச்சிகளை பிடிப்பதே வேலையாகக் கொண்ட தன் மகளிடம் ஒரு செடி இருக்கின்றது அதில் நிறைய பூ இருக்கின்றது அவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள் பூ பூத்துப் பூத்து குலுங்குகிறது படை சூழப் பறந்து வந்து அமர ஆரம்பிக்கின்றன பட்டாம்பூச்சிகள் அவள்…
மேலும் வாசிக்க -
4 September
தேன்மொழி அசோக் கவிதைகள்
சாயல் நதியில் புகுந்த அந்திகாவலனைத் தன் உள்ளங்கையில் சிறை பிடிக்க எண்ணுகிறாள் என் சேட்டைக்காரச் சிறுமி ரெட்டைச் ஜடை நனையாமலும் முழுக்கால் பாவாடையை அரைக்காலுக்காக்கி மெல்ல மெல்ல இறங்கி ஜடையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட கை நிரம்ப நதி நீரை அள்ளுகிறாள்…
மேலும் வாசிக்க