கவிதைகள்

  • Dec- 2023 -
    19 December

    ரேவா கவிதைகள்

    வட்டப் பாதை நிகழ்ந்துவிட்ட தருணங்களி்ன் மேல்இனியும் பொழிய மழை இல்லை பொய்க் காரணங்கள்புடம் செய்யும் தந்திரங்களின் உவப்பில்நீர்க்குமிழிகளை உடையச் செய்கிறதுகடந்து வந்த காற்று வண்ணத் துகள் பார்க்கத் தந்தஅக்கண நேரப் பிரிகைபட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்யும்வளைவில் சந்திப்போம் மழை புரியமனம் அறிந்து சிலிர்க்கிறதுநடை…

    மேலும் வாசிக்க
  • 19 December

    குமரகுரு கவிதைகள்

    பூங்காவின் கடைசி பெஞ்ச்சில்எப்போதும் யாரும் அமர்வதில்லைநானும்தான்பறவைகளின் எச்சத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததந்த பெஞ்ச்.பெஞ்ச்சின் அருகில் வாழும் மரங்கள் உதிர்த்த இலைகள் சூழபூங்காவில் அமர்ந்திருந்தது அந்த பெஞ்ச்.கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால்சிமெண்ட் உதிர்ந்துபெஞ்ச்சுக்கு உள்ளேயிருந்த துருப்பிடித்த கம்பிகள் தெரியும்.அவ்வளவு வயசான பெஞ்ச்சால் நம்மைத் தாங்க…

    மேலும் வாசிக்க
  • 1 December

    பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்

    உடல் எனும் நெளிவுகள் கொண்டநேர்கோட்டில்ஒழுங்கற்ற பாறையைப் போல்சில ஓவியங்கள் தீட்டுகிறாய் கால் நூற்றாண்டுகள் கடந்தஓர் பின்னிரவில்வெடித்துச் சிதறுகிறது பாறை சிதிலமடைந்த ஓவியங்கள்தொடையிடுக்கில் வழிகின்றன முதிர்ந்த மரக்கட்டை போலான பாறைகரையான்கள் சூழ நிலத்தில் கிடக்கிறது எங்கோ கேட்கும் சங்கொலியில்சுருதி விலகாத ராகம் இசைக்கிறார்கள்.…

    மேலும் வாசிக்க
  • 1 December

    ராணி கணேஷ் கவிதைகள்

    “ம்” என்ற ஒற்றைச் சொல்லில்இருத்தலை உறுதி செய்யும் உன்னிடம்இனிமேற்கொண்டு என்ன பேசுவேன்?இலகுவாக்க எதையாவது எழுதியும்இல்லை என அழித்தும்இருந்த பொழுதினில் யோசனையோடுஇன்னொரு, “ம்” மை அனுப்பி வைக்கிறேன்நீயுமொரு, “ம்” ஐ அனுப்பிஇந்த விளையாட்டு பிடித்திருக்கிறதென்கிறாய்இறுகிய பொழுதுகள்இயல்பாய் அவிழத் தொடங்கியிருந்தன. **** என் வானின்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    எண்ணும் எழுத்தும்இரண்டு கண்கள்தொழிநுட்ப வளர்ச்சியால்பலருக்கும் இங்கேபார்வைக் கோளாறு. **** Re-search பார்வையிற்படும்பொருளைக்கண்ணுள்ளவன்தேடுவானேன்?அங்கதன்தேடுகிறான்மீண்டும்தேடுகிறான். **** கற்றுத்துறை போகியஅறிவுஎன்று ஒன்று உண்டு.துறை கற்றுப்போகிய அறிவுஎன்றும் ஒன்றுண்டு.உள்ளச்சம்வையும் பிள்ளாய்! **** பா_திதாசன்பகர்கிறார்:பிள்ளாய்!கசடறக்கல்லாய் எனில்தமிழ் உன்இளமைக்குப் பாழ்! **** தீந்தமிழ்த்துறை புக்குஇன்று கற்ற பாடம்:யானே தருமியும்யானே சிவனும்யானே…

    மேலும் வாசிக்க
  • 1 December

    ச.சக்தி கவிதைகள்

    சோற்றுக்கடவுள்..! அந்தக் கடவுளைகாலையில்தான்கண்ணாரக் கண்டேன்கரடு முரடாகிப் போனஎன் காணிநிலத்தைஉழுது கொண்டிருந்தான்அரைஞாண் கயிற்றுகோவணத்தோடுதூரத்து ஏரிகண்மாயின் மீதுவீற்றிருந்த‌கடவுளின் கோவணம்காற்றில் மெல்லப் ‌பறந்து கொண்டிருந்ததுகுருவிகளை விரட்டும்பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக. **** தூக்கம் என்னை நெருங்கிவர மறுக்கிறது தூக்கம்திறந்து கிடந்தஎன் வீட்டு ஜன்னலையே நோட்டமிடுகிறேன்என் வானத்திற்கு கீழேமழை…

    மேலும் வாசிக்க
  • Nov- 2023 -
    2 November

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    வெள்ளிக்கிழமையென்றாலே அம்மையின் கால்களுக்கு ஓய்வு என்பதில்லை விரிசல் விட்ட கால்களில் அப்பிக் கிடக்கின்றன சகதிகளும் திடமான நம்பிக்கையும் வெடவெடுத்துப் போய் கூடையை இறக்கி கூவும் அவளுக்கு அவ்வப்போது கூறுக் காய்களுக்கிடையில் நீந்திப் பாய்கிறது மெல்லிய குரலின் மௌன‌ ரீங்காரம் ஒவ்வொரு வாரச்சந்தையிலும்……

    மேலும் வாசிக்க
  • 2 November

    ந.சிவநேசன் கவிதைகள்

    மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…

    மேலும் வாசிக்க
  • 2 November

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…

    மேலும் வாசிக்க
  • 2 November

    கார்த்திக் பிரகாசம் கவிதைகள்

    அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…

    மேலும் வாசிக்க
Back to top button