குறுங்கதைகள்
-
குறுங்கதைகள்
குறுங்கதை – காந்தி முருகன்
சுவருக்கப்பால் நான் இங்கமர்ந்து சில மணி நேரங்கள் ஆகின்றன. என் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. என் சிந்தனைகள் எங்குதான் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த நான்கு சுவர்களையே சுற்றிமுற்றிப் பார்க்கிறேன். அவை வெறுமையான சுவர்கள் அல்ல; நகரக் கூடியவை. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவை இருக்கும் இடத்தை விட்டு ஓரடி நகரும். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாப் பக்கச் சுவர்களும் ஒரே நேரத்தில்தான் நகரும். என் பின் பக்கச் சுவர் சிக்கல்களால் ஆனவை. என்னைப் பின்னிருந்து அதிவேகமாகத் தள்ளிவிடும் ஆற்றல்மிக்கது. என் முதுகைக் கொண்டு நகரவிடாமல் ஓரளவுதான் முயல முடிகிறது. முன் பக்கச் சுவர் “அருகில் வா” என்று அழைத்துக்கொண்டே மெதுவாகத்தான் நகர்கிறது. நான்தான் செல்ல மறுப்பு தெரிவிக்கிறேன். வலது இடது பக்கச் சுவர்கள் என்னை நசுக்கிவிடவே துடிக்கின்றன. சுவர்கள் நகர நகர இருள் சூழ ஆரம்பிக்கின்றன. நீண்டிருந்த என் கால்களின் பாதங்களைச் சுவர்கள் நகர்த்திக் கொண்டு வருகின்றன. யார்தான் இந்தச் சுவர்களை இயக்குகின்றனரோ. சங்கிலிகளின் பூட்டை இவ்வளவு நேரம் நான் தேடவே இல்லை. நசுங்கிவிடுவேன் என்கிற பயவுணர்வில் தேடுகிறேன். கையில் சிக்கவில்லை. கால்களை மடக்கி அமர வேண்டிய நிலை உருவாகிவிட்டது. உடல் இறுகத் தொடங்குகின்றது. விரிந்திருந்த தேகம் வளையத் தொடங்குகிறது. என் தோள் பட்டைகள் கன்னங்களை உரச ஆரம்பித்துள்ளன. சதைகள் பிதுங்கி கண்கள் மயங்குகின்றன. இப்போதுதான் உணர்கிறேன், என் கைகள் எந்த இரும்புகளாலும் கட்டப்படவேயில்லை.
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
குறுங்கதைகள் – காந்தி முருகன்
அவள் கவனிக்கப்படுகிறாள் தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்புதான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கிவிடுவாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
இரு குறுங்கதைகள் – மணி ராமு – மலேசியா
அதீதம் இருட்டுவதற்குள் வீட்டில் விளக்கேற்றி விடுவார் வைதேகி. பூஜை மேடையில் பூச்சரங்கள் சருகாவதற்குள் மாற்றி விடுவார். அகர்பத்தியின் நறுமணமும் சாம்பிராணியின் வெண்புகையும் வீட்டைக் கடந்து வீதிவரை தத்தம் இருப்பை நிலைநாட்ட மறவாது. வைதேகியின் வீட்டைக் கடந்து போவது ஆலயத்தை கடந்து போகும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
அவளின் அவன் – ஹிதாயத்
மெய்யழகிக்கு கனலியின் இந்த இறுக்கம் பழகிப் போனதுதான். ஆனாலும் வெகு சமீபமாய் கனத்த வலி ஒன்றை கனலியின் செயல்பாடுகளில் மெய்யழகியால் காண முடிந்தது. கனலி அப்படியானவளல்ல. மத்தாப்பு பொறியும் புன்னகைக்குச் சொந்தக்காரி. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாய் இருக்கும். சிரித்த முகத்தோடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
ரோஜாச் செடிகளில் தாமரைகள் மற்றும் இரு நுண்கதைகள் – ஷாராஜ்
மூலகங்களில் யார் பெரியவர்? பூமியின் நால்பெரும் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றுக்குள் ஒரு வாக்குவாதம். தம்முள் யார் பெரியவர், யார் முக்கியமானவர் என்பதே பேசுபொருள்.முதலில் நிலம் கம்பீரமாக மொழிந்தது. “நான்தான் பூமியில் அனைத்திற்கும் ஆதாரம். நான் இல்லையென்றால், எந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
மழைக்கதைகள் – நிஜந்தன் தோழன்
1 மழை பேஞ்சு ஓஞ்ச இரவில் வழக்கத்திற்கு முன்னரே இருட்டிவிட்டதால் இனிமேலா வந்து இந்த பின்னூசிகள வாங்கப் போறாங்க என்ற நினைப்பில் மொத்தமாக அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு பஸ் ஸ்டேண்ட்லருந்து ஜி.எச்ச நோக்கி மெல்லமா நடக்க ஆரம்பித்தான். இந்த மேம்பாலங்கள இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
குறுங்கதைகள் – தயாஜி
பொம்மியும் பொம்மையும் சில நாட்களாகவே ஒற்றைத்தலைவலி. மைக்ரீன்தான். என்னைச் சந்திப்பவர்களின் இவர்தான் முதன்மையானவர். மாதம் ஒரு முறை வந்துவிட்டு போவார். சில சமங்களில் ஒரே நாளில் கிளம்பிவிடுவார்; சில சமயங்களில் ஒருவாரம்வரை இருந்துவிட்டு, என்னைப் படுத்தியெடுத்துவிட்டு போவார். ரொம்பவும் பழகிவிட்டதால், அவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
குறுங்கதைகள் – தயாஜி
பழைய குற்றவாளி இன்று ராஜாவிற்கு திருமணம். நல்ல பழக்கவழக்கம். நல்ல வேலை. நல்ல சம்பளம். நல்ல அழகு. நல்ல உயரம். நல்ல வாட்டசாட்டம். நல்ல கருகரு தலைமுடி, நல்ல குடும்பம்; என இப்படி பல நல்லவற்றை வைத்திருக்கும் இளைஞனுக்கு திருமணம் என்பதே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
குறுங்கதைகள் – நித்வி
இறகு எப்போதும் போலத்தான் இந்த பார்க்கில் ஒற்றைக் குரங்காய் ஆகாயத்தையும்,பூமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் மனிதர்கள்தான் ஆன போதிலும் யாருடனாவது இரண்டு வார்த்தைகள் பேசலாம் என்ற எண்ணம் இதுவரை எனக்கும் வந்ததில்லை; என்னைப் பார்க்கும் எவருக்கும் வந்ததில்லை… ஹா,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
தீ – ச.வி சங்கரநாராயணன்
“ராம், என்னடா ஆச்சு? எப்படி இருக்கா இப்போ?” கதவோரம் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் வெளியே வந்தாள். துண்டோடு சேர்த்துக் கொண்டை போட்டுக்கொண்டாள். கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு எப்போது வெளியே வந்தாலும் பாரதியின் அம்மா வாசலில்தான் நின்றுகொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க