கவிதைகள்

  • இணைய இதழ் 100

    மலர்விழி இளங்கோவன் கவிதைகள்

    தவளையை வரைகிறவன் வீட்டுப்பாடத்திற்குத்தவளையொன்றை வரைய வேண்டுமெனஅம்மாவிடம் சொல்லியபடிஇரு கைகளையும் தரையூன்றித்தவ்விக் கொண்டிருக்கும்அச்சிறுவனைப் பிடித்துஇடம் அமர்த்துவதற்குள்வீட்டை நிறைக்கிறதுஅம்மாத்தவளையின் சத்தம் சிறுவன் சுவற்றில் தேய்த்த சோடா மூடியில்ஒற்றை வரள் தவளையின் தொண்டை.பிதுங்கியுருளும் அம்மாவின் பார்வையில்அதனை அடக்கியவன்பின்னொரு தனிமைப்பொழுதின் உரையாடலுக்கெனஅந்தக் ‘கொர்ர்ரக்’குகளைத்தன் கால்சட்டைப் பையிலிட்டுப்பத்திரப்படுத்திக் கொள்கிறான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

    கொல்லப்புறத்து மாவிலைகளில்பச்சை கூடியிருந்தது இரு வாரத்திற்குமுன்வாசலில் முறைத்து நிற்கும்வேம்பிலைகளிலும்அப்படியே வசந்தகாலத்தின் வருகைஒவ்வொரு உயிருக்குமாகஒரு கணக்கைமுன் குறித்திருக்கிறது போல எங்கள்வீட்டில் மட்டும்தான் அப்படிஎன்றாள் மனைவிஅவளதுவசந்தத்தின்காலயெல்லை புரியாமல்தான்நான்ஆண்டுகளைக் கணக்கிடுவதையேநிறுத்திக்கொண்டேன். • இயல்பாகக்கையாட்டிப் பேசுபவர்களதுஉடலும்கூடமின்சாரம் பாய்ந்ததுபோல்ஆடத்தான் செய்கிறது அமர்கையில்படுக்கையில்நடக்கையில்என எப்பொழுதும்அசைந்துகொண்டேஇருக்கிறார்கள் அசையாமலிருந்துகடவுளாவதைத்தவிர்க்கிறார்கள்போல. • எனக்கு கிட்சனைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    ஷினோலா கவிதைகள்

    விரலிடை மணற்துகள்கள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்ற விரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும் நழுவினவிரலிடை மணற்துகள்கள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும்தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவு போய் விடுகின்றன நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    மீ.மணிகண்டன் கவிதைகள்

    அதிகம்இன்று ஒரு நட்சத்திரம் அதிகம்உதிரவில்லை வானம்இன்று ஒரு நெல்மணி அதிகம்சீட்டை மாற்றிஎடுக்கவில்லை கிளிஇன்று ஒரு துளி அதிகம்நின்று விடவில்லை ஓடைஇன்று கூலி ஒரு ரூபாய் அதிகம்இரண்டாய்க் குதிக்கிறது மனம். கார்பன் மனசுமையுறைந்த பேனாவின்உணர்ச்சிகளையும்கார்பன் பேப்பர்கள்படம்பிடித்துக் காட்டிவிடுகிறதுநீ வாயால் சொல்ல மறுக்கும்உன் உள்ளத்தைஎன்…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    வருணன் கவிதைகள்

    முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்

    பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…

    மேலும் வாசிக்க
  • மொழிபெயர்ப்புகள்

    ஜார்ஜ் வாலஸ் கவிதைகள்; தமிழில் – ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

    ஜன்னல்கள் உன்னை ஜன்னல் கண்ணாடியின் வழியேநான் பார்க்கவில்லை,சமீபத்திய புரட்சிகள் மற்றும் கைப்பற்றுதல்கள் பற்றிய செய்திகளுக்காகவானொலியைத் திருகியபடியேநீ இதழ் வாசிப்பதையும்நான் காணவில்லை;தலை மேல் விமானம் பறக்கையிலும்உன் கணவனின் மாலை உணவிற்காக நீதீயை மூட்டுகிறாய்,இருவரும் பகிர்ந்து உண்ணுகையில்மேகங்களைக் கடந்து சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சமானதுபாத்திரங்களைப் பளிச்சிடச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 67

    ரேகா வசந்த் கவிதைகள்

    உன்னால்வாசிக்கவேமுடியாதஒற்றைக் கவிதைஎன்னிடம் உண்டு! காலந்தோறும்அதன் வாசிப்பனுவம்தேடிஎன்னைத்தொடர்ந்துகொண்டே இருப்பாய்நீ! ஒவ்வொருயுகத்தின்முடிவில்என் ஒற்றைக்கவிதையின்நீளம் கூட்டிடுவேன்நான! சுழன்றுகொண்டேஇருக்கப் பிறந்தவர்கள்நாமும் பிரபஞ்சமும். • அவளுக்கும் எனக்கும்தான்எத்தனை இடைவெளிகள் !!! ஒருமுறைநானும் அவளும்ஒரே மாதிரி புடவையில்கல்லூரி நிகழ்வொன்றில்! என்னைக் கவர்ந்திருந்தநகையைஎனக்கு முன்பேவாங்கி இருந்தாள் எனக்கு பிடித்த ஆசிரியர்அவளிடம் சிரித்துப்பேசியதுபோல்தோன்றியதுஒருநாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    புதியமாதவி கவிதைகள்

    இளமையின் ஆன்மா அந்த வீட்டில்அவள் இளமையின் ஆன்மாநடமாடிக் கொண்டிருக்கிறதுஇரட்டைப் பின்னல்காதில் வளையம்ஊறுகாய் மணம் வீசும்தூக்குப் போனிமருதாணி அப்பியஉள்ளங்கை வாசனைஅந்த வீட்டின் மூலையில்இப்போதும் பாய் விரிக்காமல்படுத்திருந்த தரையில்அவள் கனவுகள்புதைந்திருக்கின்றனவீடு கட்டும்போதுஒவ்வொரு செங்கலாகதொட்டுத் தொட்டுவளர்ந்தவள்குடம் குடமாக நீருற்றிஅதைக் குளிர வைத்தவள்குப்பை மேட்டில்வளர்ந்திருந்ததக்காளிச் செடிகளைப்பிடுங்கி வந்துநட்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    மஞ்சுளா கவிதைகள்

    சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப்  பூனை.   அழகு என்னும் பிரபஞ்ச…

    மேலும் வாசிக்க
Back to top button