கவிதைகள்
-
கவிதைகள்
மித்ரா அழகுவேல் கவிதை
பெருநேசந் தகுவி சகா நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம் நீ கூசாமல் கழுவிலேற்றிக் கொல்கிறாய் குருதியொழுகும் அக்கழு கொண்டே என் குறி புணரப் பார்க்கிறாய் ஒவ்வொரு கூடலிலும் நீ அழித்துக் கொண்டிருப்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
தீபிகா நடராஜன் கவிதைகள்
1. வெகுதூரமில்லை என் வீடு பேருந்தோ தொடரியோ ஐந்தாறு மணிநேரம்தான் ஆனாலும் அவ்வளவு தனித்திருக்கிறேன். எப்போதோ நான் போட்ட விதை இன்று பூத்திருக்கிறது எப்போதோ அப்பா வைத்த கொய்யா இப்பொது காய்க்கிறது என் ஊஞ்சல் இடம் மாறியிருக்கிறது என் அறையின் வண்ணம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
1. விரும்பத்தக்க பொந்தொன்று கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில் ஓம் எனும் மந்திரம் கேட்பதால் ஊர் மாந்தர் பரப்பினர் அம்மருட்கையின் திருப்புகழை எப்படியென மீசையை வருடி வருடி மயிர்வேரின் வலியில் ஒரு வேலின் கூர்மை. விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க பொந்தில் காதைக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
விஷ்வக்சேனன் கவிதைகள்
1,முன்மதியப் பொழுதுகள் ****** இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை.. முன்மதியப் பொழுதுகளின் வெயில் பதட்டத்தையும் சோர்வையும் ஒருங்கே தருகிறது. பணி செல்லும் வாகன கூட்டம் வடிந்து நெரிசலற்று போயிருக்கும் இந்த நகரத்தின் வீதியில் ஒரு வேண்டப்படாத வெம்மையாக…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
1.வேடிக்கை அருகாமைச் சுவர்கள் திறந்துகொள்கிறபோது நின்று வேடிக்கை பார்க்க கடைவீதியின் பழக்கடையொன்று கிடைத்துவிடுகிறது உடன்வந்தவராய் கைகாட்டிவிட்டு கடை மூலையில் சிக்னலாகிப் போகிறேன் வெங்காயங்களைப் புடைக்கும் கிழவி சட்டென்று கண்காட்ட அவள் கண்களில் உரிந்த சிறு வெங்காயங்கள் ஒரு பொம்மையாவது வாங்க வேண்டும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜீவன் பென்னி கவிதைகள்
ராணுவ பூட்ஸ்கள்- 1 * போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள், தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன. கடந்து வந்திருந்த வழி முழுவதிலும் அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள் தனியாகக் கிடக்கின்றன.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
சிவக்குமார் கணேசன் கவிதைகள்
1 மாலை மழையைச் சொல்லும் வெயிலில் தகிக்கிறது சமணர் மலை. உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு. பாறை விளிம்பில் அமர்ந்து வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு. யாருமற்ற படிகளில் ஏறுகையில் திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள் இளைய ஆதாமும்,ஏவாளும்.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
இனியவன் காளிதாஸ் கவிதைகள்
அணைப்பார் யாருமின்றி ஆரண்யத்தீயாய் பரவும் ஆழிசூழ் தீந்துகள் தீராப்பசி கொண்ட, ஆக்டோபஸ் கரங்கள்… மீயொலியாய்ப் பரவும் பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் , இருபது இருகாலிகள்… உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும் ஒப்பாரிகள் ஒவ்வொன்றும் குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைமேல் படிந்திடும்,…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ப.மதியழகன் கவிதைகள்
ககனம் அகண்ட வானம் வெளிர் மஞ்சள் மேகம் வடக்கு நோக்கி பறவைகள் கூட்டம் படையெடுக்கிறது எங்கிருந்தோ கேட்கிறது குயிலின் கானம் மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன கோயிலை நோக்கி கூண்டுக்குள் முடங்கிவிடாதே விசாலமான வானம் இருக்கிறது என்று பச்சைக்கிளி என்னை அழைக்கின்றது தன்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அகராதி கவிதைகள்
பார்க்கும் தூரத்தில் சிறிதும் பெரிதுமாக வளர்ந்திருக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் மரங்களுக்குமிடையே நடக்கிறாள் நெஞ்சுக்கு நேராக நிலவைப் போன்ற கோளொன்றினைப் பிடித்திருக்கிறாள் அது ஒளி வீசுகிறது சுடுகிறது சில்லிடுகிறது வெதுவெதுப்பாய் இருக்கிறது பிரதிபலிக்கிறது… வழியெங்கும் சக்கரமாகச் சுழல்கிறது தலை தேடல் சுமந்த விழிகளின்…
மேலும் வாசிக்க