கவிதைகள்
-
Nov- 2023 -2 November
ந.சிவநேசன் கவிதைகள்
மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…
மேலும் வாசிக்க -
2 November
தேன்மொழி அசோக் கவிதைகள்
தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…
மேலும் வாசிக்க -
2 November
கார்த்திக் பிரகாசம் கவிதைகள்
அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…
மேலும் வாசிக்க -
Oct- 2023 -16 October
ம. இல. நடராசன் கவிதைகள்
எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…
மேலும் வாசிக்க -
16 October
ராணி கணேஷ் கவிதைகள்
சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…
மேலும் வாசிக்க -
16 October
ச.சக்தி கவிதைகள்
கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…
மேலும் வாசிக்க -
1 October
குமரகுரு கவிதைகள்
சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…
மேலும் வாசிக்க -
1 October
திருமூ கவிதைகள்
சிகரெட்டு முதல் பேனா வரை எனது அறையில் இருந்தபடியே அலுவல்கோப்புகளைச் சரி பார்த்துத் திருத்தியவாறு நடுவீட்டின் மேற்பரப்பில் சமரன்குட்டி பறக்கவிட்டிருந்த பொம்மை உலங்கூர்தியைப் பார்த்திருந்தேன் எதிர்பாராத விதமாக அது தன் கட்டுப்பாட்டை இழந்து செய்தித்தாள் வாசித்தவாறு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின் சிகரெட்டுப்…
மேலும் வாசிக்க -
1 October
மீ.மணிகண்டன் கவிதைகள்
சொந்த வீடு நடேசன் மிதிவண்டி நிலையத்திலிருந்து மணிக்கு ஐம்பது காசு வாடகையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கண்மாய்க் கரையில் புளியமர நிழலில் குண்டு விளையாடித் திரும்புகையில் ஒரு மணி இருபது நிமிடங்கள் கடந்திருந்தது நடேசன் இரண்டு மணி நேர வாடகையாக ஒரு ரூபாய்…
மேலும் வாசிக்க -
1 October
ரமீஸ் பிலாலி கவிதைகள்
நான் என்னும் உண்மை அறிவு மிகுதலுமில்லை குறைதலுமில்லை. *** கடலுள் மூழ்குபவன் உயர்த்திய ஒரு கை மட்டும் வெளியே காப்பாற்றக் கேட்கிறதா? விடைபெறும் சமிக்ஞையா? அபய முத்திரையா? *** எழுபிறப்பின் முன் உயிரும் மோனம் மெய்யும் மோனம் மோனம் இரண்டன்று. ***…
மேலும் வாசிக்க