கவிதைகள்

  • Sep- 2023 -
    4 September

    லஷ்மி கவிதைகள்

    குரல்கள் பெரும் சனங்களின் வதைகள் நடக்கும் பொழுதெல்லாம் உங்கள் குரல்கள் என்னை அலைகழித்துக்கொண்டேயிருக்கின்றன தலையீடுகளற்ற பெருவெளியில் என் குரல் உயர்த்த விரும்புகின்றேன் என்னால் இயலவில்லை குரலெழுப்ப முனையும் நேரங்களில் என் முதுகெலும்புகள் முறிந்துவிடும் சத்தம் கேட்கின்றது குரலை சில கரங்கள் அழுத்திப்…

    மேலும் வாசிக்க
  • 4 September

    திருமூ கவிதைகள்

    தீ ‘உன் கொள்கையையும் கோட்பாட்டையும் புரட்சியையும் புளிசோத்தையும் தூக்கிக் குப்பையில் போடு’ என்றார்கள் போன இடங்களிலெல்லாம் தூக்கிப் போட்டேன் அது பற்றித் திபுதிபுவெனத் தீயாய் எரிகிறது. **** அரசியல் போலி எனக்கு எந்தக் கொள்கையும் கோட்பாடும் கிடையாது ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2023 -
    16 August

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    காற்றின் கண் பேய்க்காற்று வீசுகிறது என்கிறார்கள் பலரும் ஆண்டுதோறும் வரும் நல்ல பருவங்களில் இதுவும் ஒன்று கூட்டிப் பெருக்கிச் சுழற்றித் தூக்கி முகத்தில் கொண்டாந்து கொட்டுகிறது புழுதியை ஈருருளை வாகனங்களில் செல்வோருக்கெல்லாம் கண்ணிலும் வாயிலும் மண் வீட்டுக்குள் அமர்ந்து செய்வதொன்றுமற்று பார்த்துக்கொண்டே…

    மேலும் வாசிக்க
  • 16 August

    ராம் பிரசாத் கவிதைகள்

    குற்ற உணர்வின் ஆலோசனை  மூன்று சென்ட் இடத்தில் இரண்டு சென்டில் வீடு கட்டினேன் எஞ்சிய ஒரு சென்டில் மரங்கள் நடுமாறு ஆலோசனை தந்துவிட்டுப் போனது தன் இரண்டு சென்ட் நிலத்தில் இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல் வீடு கட்டியிருக்கும் பக்கத்து வீட்டுக் குற்ற…

    மேலும் வாசிக்க
  • 1 August

    சீ.பாஸ்கர் கவிதைகள்

    அம்மா இல்லாத வீடு தினமும் சாமி படங்களின் முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின் முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே தினமும் சமாளித்து வருகிறார் அப்பா அக்காவிடம் அவ்வப்போது…

    மேலும் வாசிக்க
  • 1 August

    அராதி கவிதைகள்

    குள்ளம்மா ஆளுக்கும் பெயருக்கும் சம்மந்தமே இல்லை சராசரிக்கும் அதிகம்தான் குள்ளம்மாவின் உயரம் ஆயாவுக்கு குள்ளம்மா அம்மாவுக்கு குள்ளம்மாக்கா அண்ணனுக்கும் எனக்கும் குள்ளம்மாயா பின்கொசுவம் வைத்த சேலை முன்னிடுப்பில் செருகிய சுருக்குப் பை உதடு சிவக்க வெற்றிலை என ஆயா உயரமானது போலவே…

    மேலும் வாசிக்க
  • 1 August

    மகிழினி காயத்ரி கவிதைகள்

    ரணகள்ளியின் சாறாய் வழிந்தோடும் சொற்களுக்கு அடியில் பதுங்கிக் கிடக்கும் நாள்பட்ட தழும்பு சூலுற்ற மழைக்காலக் குளம் எல்லோர்க்கும் அளித்த பின் காகத்திற்கென கலயத்தில் எஞ்சியிருக்கும் ஒரு கைப்பிடிச் சோறு பள்ளி விட்டதும் ஓடி வரும் மழலைக்கென பகல் முழுவதும் காத்துக் கிடக்கும்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2023 -
    21 July

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    இரவின் ஆன்மா (தமிழ் கஜல்) எத்தனை இதயங்கள் விழுந்து கிடக்கின்றன நீ வரும் பாதையில்… காதலின் அம்புநுனி பாதம் தைக்காமல் பார்த்து நட நின் முகத்தைப் பிரதிபலித்துச் சிவக்கும் இதயங்கள் உன் பார்வையில் தீயாடித் தீர்த்து உன் கூந்தலின் நிறமாகும் நீயிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    சுபி கவிதைகள்

    யாரோ செய்த வன்மங்கள் யாரோ செய்த புறக்கணிப்புகள் யாரோ தோண்டிய குழிகள் நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக நாளங்களில் வெட்ட வெட்ட காலொடிந்த புறா ஒன்றின் நெடுநேர முனகல் சத்தம் காதில் ஒலிக்க ஒலிக்க நான் அதைத் தாண்டுகிறேன் எந்தக் குற்றவுணர்வுமற்று அந்தப்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    மிச்சமிருக்கிறது ஒரு நாழி மிச்சமிருக்கிறது ஒரு நாழி அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக அல்லது ‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற நிகழ்வு ஒன்றுக்காக மிச்சமிருக்கிறது ஒரு நாழி. *** அந்த ஓவியம் முற்றுப்பெற மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்…

    மேலும் வாசிக்க
Back to top button