தொடர்கள்

  • May- 2020 -
    18 May

    கடலும் மனிதனும்: 7- “ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி” 

    தனது கூர்மையான கத்தியை  அவர் கையில் எடுக்கிறார். விநோதமான தோற்றம் கொண்ட ஒரு மீனின் செதில்களை நீக்கி உப்பு நீரில் கழுவுகிறார்.அதன் கண்கள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு தனியாகப் பிரித்தெடுக்கிறார். அவற்றை வேறு ஒரு…

    மேலும் வாசிக்க
  • 6 May

    அடையாளம்:5- தோழர் பாலபாரதி- உமா மோகன்

    பெண்கள் அரசியல் பதவிகளில் முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீடு கூடப் பெற முடியாமல் போராடும் தேசம் இது. கிடைத்த உள்ளாட்சி இட ஒதுக்கீட்டிலும் முழுமையாக அதிகாரத்தைத் தாமே கையாள முடியாத சூழல்தான் இன்னும் நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கடலும் மனிதனும்-6 : கடற்கன்னிகள் – புனைவும் உண்மையும்

    “லூசி சுற்றி சுற்றி நீந்திக்கொண்டிருக்கிறாள் லவங்கப்பட்டை நிறத்தில் மெடூசாவைப் போல காட்டுத்தனமான கூந்தல் இன்னும் இன்னும் ஆழத்துக்குள் நீந்துகிறாள்“ என்று தொடங்கும் ஜோடி பிகோல்ட்டின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தனது சிவப்பு நிற கூந்தல் அலையடிக்க, …

    மேலும் வாசிக்க
  • 5 May

    காரிருள் நிலவு-2 – தமயந்தி

    முன் குறிப்பு : இது எழுத்தாளர் தமயந்தி நமது தளத்தில் எழுதிய ‘குவாரண்டைன்‘ https://vasagasalai.com/quarantine-shortstory/  என்ற சிறுகதையின் தொடர்ச்சி. எனவே வாசகர்கள் முதலில் அச்சிறுகதையைப் படித்துவிட்டு இத்தொடருக்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.    வீட்டின் மூடிய கதவைத் திறக்கும் போது ஒரு…

    மேலும் வாசிக்க
  • Apr- 2020 -
    21 April

    கடலும் மனிதனும்:5-கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்- சு.நாராயணி

    “அந்தக் காலத்துல வெறும் கெட்டுமரம், மோட்டார் போட்டு கிடையாது. அந்த சாதா கெட்டுமரத்துல நாங்கள் போயி ஸ்ராவு பிடிக்கும்…. எத்தனை கிலோ ஸ்ராவு கிட்டும் தெரியுமா?” என்று தூத்தூரைச் சேர்ந்த முதிய மீனவர் ஒருவர் கண்களில் பெருமிதம் பளபளக்க என்னிடம் சொன்னது…

    மேலும் வாசிக்க
  • 21 April

    அடையாளம்: 4- வசந்திதேவி

    “கல்விதான் இன்றைய உலகின் அச்சாணி. இது அறிவு யுகம்….முன்பு எப்போதையும்விட, கல்வி இன்று சமுதாய வளர்ச்சியை ,அதிகார அமைப்பை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி.“ இப்படி முழக்கத்தோடு பொதுப்பள்ளியை, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற, மேம்படுத்த இன்று தனது என்பத்தியோரு வயதில் கூடப் போராடிக் கொண்டிருக்கிறார்…

    மேலும் வாசிக்க
  • 3 April

    அடையாளம் 3- கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

    பாடப்புத்தகங்களிலோ,வரலாற்றுக் குறிப்புகளிலோ நீங்கள் படித்த,கேள்விப்பட்ட மனிதர்களோடு இணைந்தது இவர் வாழ்வு !மகாத்மா காந்தி,வினோபா பாவே ,சௌந்தரம் அம்மாள்,ஜே.சி.குமரப்பா,அம்புஜம் அம்மாள் எனப் பலரின் பெயர்களோடுதான் இவர் வாழ்வைப் பேச முடியும்!  இந்த ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் காந்தியத்தின் பழுத்த…

    மேலும் வாசிக்க
  • 2 April

    கடலும் மனிதனும் : 4 – “நீங்கள் திரும்ப தண்ணீருக்குள் போகவே மாட்டீர்கள்” – ஹாலிவுட் பரிதாபங்கள்

    இருள் கவியும் நேரம். கடற்கரை.  கடலுக்குள்  ஒரு பெண் தாவி நீந்தத் தொடங்குகிறாள். நீரில் துள்ளி,  மகிழ்வோடு நீந்துகிறாள். அவள் சிரித்து, விளையாடி, நீரைக் கலைக்கும் சத்தம். கடலுக்குள் அவள் கால்கள் அசைவது காட்டப்படுகிறது. கால்களுக்கு மிக அருகில் ஏதோ ஒன்று…. …

    மேலும் வாசிக்க
  • Mar- 2020 -
    17 March

    கடலும் மனிதனும் 3 – உலகை மாற்றிய ஒற்றை மீன்

      1992ம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி. கனடாவின் தேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறார். பத்திரிக்கையாளர்கள் கூடிய அந்த அறைக்கு வெளியில் கூச்சல், குழப்பம், அடிதடி. பூட்டியிருக்கிற அறையின் கதவை கோபத்துடன் உடைத்துத் திறக்க முயற்சி செய்கிறார்கள்…

    மேலும் வாசிக்க
  • 17 March

    அடையாளம் : 2 – உமா மோகன்

      ஒரு போராட்டம் முன்னெடுக்கப் படும்போது நடக்குமா,நடக்காதா,யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்ய என்றெல்லாம் அதன் விளைவுகள், வெற்றி,பலாபலன்கள் பற்றிக் கவலைப்படாத  செயல்பாடுதான் அதில் ஈடுபடுபவர்களின் உந்துசக்தியாக இயக்குகிறது. குறிக்கோளும் நம்பிக்கையும் மட்டுமே உயிர்நீர். மான்செஸ்டர் பஞ்சாலை ஒன்றில் பத்து வயதில்…

    மேலும் வாசிக்க
Back to top button