இணைய இதழ்

  • Apr- 2025 -
    21 April

    கி.கவியரசன் கவிதைகள்

    கல்லொன்றை எறிந்தேன்அலைகள் எழுந்தனஒன்றையொன்றுஅடித்துக் கொண்டனபின் எப்படியோ அமைதியாகினபிரச்சினை ஓய்ந்ததெனகிளம்பி விட்டேன்அப்படியே கிடக்கிறதுகுளத்தின் அமைதிக்குள் மூழ்கிய கல். * என்னோடு இருந்தவையெல்லாம் உதிர்ந்துவிட்டன எல்லோரும்  பாவம் பார்க்கிறார்கள்  வெறுமையெனக் கூறுகிறார்கள்  வெறும் கிளையோடு நான்  எவ்வளவு லேசாக இருக்கிறேன் தெரியுமா? * துயரமொன்றுநிலவாகிக் கொண்டிருந்ததுபடபடப்புகள் நட்சத்திரங்களாகமாறிக் கொண்டிருந்தனகாற்று களைத்து விட்டிருந்ததுஎதையும் பேசாமல்என்னவென்று கேட்காமல்தலைசாய்த்து ஒரு பிடிகூடுதல் அழுத்தத்தில் வருடுகிறாள்கருமேகம் படர்கிறதுபலத்த இடிகூடவே ஒரு பெருமழைஇறுதிச் சொட்டின் சத்தம் நின்றதும்மலையொன்றுசமவெளியாக மாறியிருந்ததுதன் வருடல்களை முடித்துக்கொண்டுநெற்றியில் முத்தமிடுகிறாள்இந்த இரவுபகலெனும் தன் முகமூடியைமுழுதாய் கழற்றி வைத்திருந்தது.kaviyarasu1411@gmail.com

    மேலும் வாசிக்க
  • 21 April

    ஐந்து நுண்கதைகள் – ஷாராஜ்

    1.காகியோ கவிதை    மெட்ரோமேனியா (Metromania) என்பது கவிதை எழுதுவதற்கான கட்டுக்கடங்காத வெறி / மனநோய் / உந்துதல் ஆகும். ஒரு முறை இதன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸியோகுஷி காகியோ, “நான் ஒரு கவிதை எழுதியாக வேண்டும்; உடனே ஒரு…

    மேலும் வாசிக்க
  • 21 April

    சேர்ந்திசை நாயகன் எம்.பி.சீனிவாசன்- பீட்டர் துரைராஜ்

    MBS என அழைக்கப்பட்ட எம்.பி.சீனிவாசன் இசை அமைப்பாளர். கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியர். ‘இப்டா’, ‘இஸ்கஸ்’ போன்ற கலை, இலக்கிய அமைப்புகளில் செயல்பட்டவர். மக்களை குழுவாகப் பாட வைத்தவர். ‘இனிய மார்க்சியவாதி’ என எழுத்தாளர் சுஜாதா இவரைப் பற்றிக் கூறுகிறார். இசைக் கலைஞர்களுக்கு சங்கம்…

    மேலும் வாசிக்க
  • 21 April

    அன்னா: தாய்மன நினைவுகளும் நிலமும் – ஏர் மகாராசன்

    மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது. அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை…

    மேலும் வாசிக்க
  • 4 April

    நிவேதிகா பொன்னுசாமி கவிதைகள்

    கடைசித் துளி அரிதாய்மிகச் சமீபமாய்கேட்ட அந்தக்குருவி சத்தத்தால்எனது சிறுவயதுஞாபகத்திற்குசிறகுமுளைத்துக் கொண்டதுஅப்போதெல்லாம்குருவிகள் எத்தனைஎளிதாய் உறவுகளாய்கலந்துவிட்டன தெரியுமா?வீட்டில் ஒரு நபரைப் போலஅத்துணை உரிமைஅவற்றுக்குஅன்றெல்லாம் தனியாகஅதற்கு இடம் கிடையாதுபழசாய்க் கிடந்தஎங்கள் வீட்டுகேஸ் அடுப்புதான்அதன் உறைவிடம்அதிலும் அலைந்துதிரிந்து சேர்த்தவைக்கோல்சிறு குச்சிகளைக்கொண்டு ஒரு கூடுதயார் செய்துவிடும்வெளியில் எளிதாய்காயவைத்த தானியங்கள்தான்உணவுக்கெல்லாம்இதில்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    மதுசூதன் கவிதைகள்

    ஞாபக முடிச்சுகளாய் நான் சுமந்து கொண்டிருப்பதுஎன் பொழுதுகளைக் களவாடியஉன் ஆகர்ஷணப் பார்வைகளைசாம்பல் பூத்த தீக்கட்டியாய்என் இமைப்பீலிகளில் அதன் ஊழிக்கூத்துகள்உன் மீதான காதல் பொருட்டேதீக்கொண்டு எரியும்என் எல்லா பழைய நாள்களின் நொடிகளில்பூவொன்றின் மெல் அசைதலென உன் சிருங்கார ரூபம்என் சகல ப்ரியங்களையும்தாரை வார்த்துத்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    ப.மதியழகன் கவிதைகள்

    ப்ரம்மம் இன்னொரு முறையும் அந்தப்பாடலைக் கேட்கிறேன்அதன் இசைக்காக அல்லஅதன் வரிகளுக்காக அல்லஅந்தக் குரலுக்காக அல்லஎனக்குள் அன்பினைபூக்கச் செய்யும்ஏதோவொன்று அந்தப்பாடலில் ஒளிந்திருக்கிறதுவாழ்வு என்பதுதேடலின் நீண்ட தொடர்ச்சிஎன எனக்கு அந்தப்பாடல்புரிய வைத்ததுபிளவுண்ட சர்ப்பத்தின்நாக்குகள் போல்என்னுள்ளிருந்து புத்தனைஎட்டிப் பார்க்க வைத்ததுசபிக்கப்பட்ட இரவுகளின்கொடுங்கனவுகளிலிருந்துஎன்னை சுவர்க்கத்துக்குஅழைத்துச் சென்றதுஎன்னை எரித்துக்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    செளவி கவிதைகள்

    மனம் பிறழ்ந்தவன் அவன் எந்த வீட்டின் மீதும்கல் வீசவில்லைஅவன் எவர் வீட்டுப் பூட்டையும் உடைத்துத்திருடவில்லைஅவன் யாரோடும்சண்டை போடவில்லைஅவன் வசவு வார்த்தைகள் எதையும்பேசவில்லைஅவன் மது அருந்திவிட்டுஆடை விலக ரோட்டில் கிடக்கவில்லைஅவன் குழந்தைகளின் நடுவேபுகை பிடித்துப் புகைவிடவில்லைஅவன் யார் கையையும்பிடித்து இழுக்கவில்லைஅவன் யாரையும்பலாத்காரம் செய்யவில்லைஅவன்…

    மேலும் வாசிக்க
  • 4 April

    கண்ணன் கவிதைகள்

    மூன்று நாட்கள் அங்குநான்கு நாட்கள் இங்குநன்றாகத்தான் இருக்கிறது இந்தநாடோடிப் பிழைப்புவராத தூக்கம் இரவெல்லாம்பக்கத்தில் அமர்ந்து விடியல் வரை வெறிக்கிறதுஇடதுகாலில் புடைக்கும் நரம்பைவலதுகாலால் அழுத்திவலியுடன் கத்தியவனின் குரல்கிரிக்கெட் வர்ணனையுடன் கரைந்து போகிறதுபுகைவண்டி நிலையத்தில்வழியனுப்பி வைத்துவிட்டு“அடுத்த வாரம் மீண்டும் பார்ப்போம்”எனத் தன்மொழியில் குனுகும்புறா மட்டுமே…

    மேலும் வாசிக்க
  • 4 April

    இராஜலட்சுமி கவிதைகள்

    நிணம் பாலைவன மணலில்பாதங்கள் புதைய நடக்கிறதுஅந்த யானைவயிறு குலுங்கநாக்கு இழுக்கநீருக்குத் தவிப்பாய்உயிரின் இறுதித் துடிப்பாய்…கலகலவென சிரித்தாள்அருகில் ஒருத்திகையில் நெகிழிப் புட்டியில் நீர்“வேணுமா?” என்றாள் இளக்காரமாய்“புட்டி திறந்து ஊற்றேன்” கெஞ்சியது யானை“இல்லை. விழுங்கு அப்படியே” என்றாள்.வலப்புறம் பிணமெரியும்மசானம் பார்த்தது யானைஇடப்புறம் புட்டியோடு அவள்.வேதனையாய்…

    மேலும் வாசிக்க
Back to top button