இலக்கியம்

  • கவிதைகள்

    ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

    ஞாபக நதி நீரைக் கூறிட்டு விற்கும் பெருநகரத்து விடுதியின் புத்தனின் சித்திரம் அலங்கரிக்கும் வரவேற்பறையில் அலைந்து திரியும்  வண்ணமீன் ஞாபகநதியில் நீந்தச் செய்கிறது நிலத்தைக் கூறிட்டு விற்கும் கிராமத்தின் விராலை கெளுத்தியை உளுவையை கொறவையை விலாங்கை அசரையை கெண்டையை ஜிலேபியை நளுங்கை இன்னும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இருண்மை – ஹரிஷ் குணசேகரன்

    1 பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை அவன் தங்கியிருந்த மத்திய தர அறைகள் அவனை எரிச்சல் கொள்ளவே செய்தன. தனிமையின் தடங்கள் ஆழமாகப் பதிந்து தனக்குள் வெறுமை உணர்வு நிரம்பிட அதுவும் காரணமென்று நினைத்தான். பெங்களூரில் அவன் தங்கியிருந்த புது…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    அ.ரோஸ்லின் கவிதைகள்

    இரவு இந்த மாலை  கசப்பான பானத்தைப் போல வாய்த்திருந்தது. ஒருபோதும் இறங்கமுடியாத வழுக்குப்பாறையாக விரியும் மனதை ஆட்டுக்குட்டியைப் போல கடந்தாக வேண்டும். பூச்சிகளாக  மறையும் வாகனங்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதாயில்லை. ஒற்றை முயலைத் துரத்தியோடும் ஓநாய்களென ஓடுகின்றன. மெல்லிய ஒளியின் கோடுகள்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஷிசுக்கு கவிதைகள்

    சாத்தானின் அன்பு நான் சாத்தானுடன் இணைந்துவிட்டதாக முடிவுகள் எட்டப்பட்டுவிட்ட பின் மீட்கும் பணிகளுக்கிடையில் என் அறையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் வாய் உலர்ந்து தொடர்ச்சியான உராய்வில் மேலுதட்டின் புண் விரிந்து இருந்தது. இருளின் மத்தியில் மேல்தட்டில் ஓர் உருவம் வெறுமையில் அதிர்ந்துகொண்டிருந்தது. நான்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    நம்மிடமிருந்தே விலகி.. தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னார்கள் அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு பலி உண்டு வழிகிற துளி வலியின் நுனி உறைய நிரடும் ஞாபக ரேகையின் வளைவில் புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்

    படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஓங்காரமாய் நின்ற மெய்யே – மகேஷ்குமார் செல்வராஜ்

    இரவு மழை பெய்திருக்க வேண்டும்.கங்கையின் படித்துறை கழுவி சுத்தம் செய்ததைப் போல் பளிச்சென்று இருந்தது. கங்கை இன்னும் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூன்றாவது முறை முங்கி எழுந்து அப்படியே சில நிமிடங்கள் ஆற்றில் நின்று கொண்டிருந்தான். கரையேறி வந்தவன் அப்படியே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சித்தார்த்தன் கடவுளாகின்றான் – நீலாவணை இந்திரா

    இந்தக் கதையின் பெரும்பகுதி ஜேஆர் – ராஜிவ் காந்தி இடையே நடந்த ஒப்பந்தத்தின் முன்னரான இரண்டு வருடங்களுக்குரியது. ஆனாலும் இந்தக் கதையின் மாந்தரை இன்றைய பொழுதிலேயே நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். கூட்டுப் பெட்டி காங்கையேறி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    உடன்போக்கு – கமலதேவி

    கார் முன்னிருக்கையில்  விரல்களால் தட்டிக்கொண்டு  குமரன்  அமர்ந்திருந்தான். கண்கள் சிட்டுக்குருவியின்  உடல் அசைவுகளென  படபடத்துக் கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக பிராண்டட்  பேண்ட்  சட்டையில்  பள்ளிக்கூடத்து வாத்தியார்  போல  இருந்தான். “என்ன முதலாளி நீங்க, இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாப்ல பதட்டபடுறீங்க… தங்கச்சியே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இரவை வெளிச்சமிடும் வானம் – அமுதா ஆர்த்தி

    அவள் தங்கியிருந்தது ஏரியை ஒட்டிய  உண்டு உறைவிடப்பள்ளி. கட்டிடம்  நிறங்களை இழந்து ஈர நயப்புடன் இருந்தது. ­­சுற்றுப்புறம் சதுப்பு நிலம் போல் பொதுக் பொதுக்கென்றே காணப்பட்டது. மாடியில் ஏரியைப் பார்த்தபடி நின்றாள். “பாம்பு…பாம்பு..” என்ற குழந்தைகளின் கூச்சல். சிறுவன் ஓடி வந்து,…

    மேலும் வாசிக்க
Back to top button