கவிதைகள்

  • இணைய இதழ்

    ந.சிவநேசன் கவிதைகள்

    மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கார்த்திக் பிரகாசம் கவிதைகள்

    அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ம. இல. நடராசன் கவிதைகள்

    எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராணி கணேஷ் கவிதைகள்

    சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச.சக்தி கவிதைகள்

    கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் ‌தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    நான் என்னும் உண்மை அறிவு மிகுதலுமில்லை குறைதலுமில்லை. *** கடலுள் மூழ்குபவன் உயர்த்திய ஒரு கை மட்டும் வெளியே காப்பாற்றக் கேட்கிறதா? விடைபெறும் சமிக்ஞையா? அபய முத்திரையா? *** எழுபிறப்பின் முன் உயிரும் மோனம் மெய்யும் மோனம் மோனம் இரண்டன்று. ***…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லக்ஷ்மி கவிதைகள்

    என் ஆன்மாவைத் துடைத்து வைக்கிறேன் அழுக்குகள் இல்லை யாரிடமும் யாசிக்காதே என்கிறது இதயம் எனக்கான எதிர்பார்ப்புகளை அழித்துவிடுகிறேன் அன்பைப் பெருகச் செய்கிறேன் என் கணகளை அகல விரித்து இவ்வுலகைப் பார்க்கிறேன் வெண்மையும் கருமையும் நிறைந்துள்ளது எனக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கிறது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    உமா செளந்தர்யா கவிதைகள்

    யாருமற்ற பிரகாரத்தில் சுற்றி வருகிறாள் இறைவி கையிருப்பில் இருக்கும் வரங்களை எண்ணிக்கொண்டு. *** நினைவுகளை விழுங்க முடியாமல் புரையேற அருந்த வேண்டுகிறேன் கொஞ்சம் கண்ணீர். *** என் கன்னங்களை ஊதியது பலூன் வண்ணங்களாய் முகப்பருக்கள். *** உள்ளும் புறமும் எப்படி ஓயாமல்…

    மேலும் வாசிக்க
Back to top button