கவிதைகள்
-
இணைய இதழ்
ரமீஸ் பிலாலி கவிதைகள்
எண்ணும் எழுத்தும்இரண்டு கண்கள்தொழிநுட்ப வளர்ச்சியால்பலருக்கும் இங்கேபார்வைக் கோளாறு. **** Re-search பார்வையிற்படும்பொருளைக்கண்ணுள்ளவன்தேடுவானேன்?அங்கதன்தேடுகிறான்மீண்டும்தேடுகிறான். **** கற்றுத்துறை போகியஅறிவுஎன்று ஒன்று உண்டு.துறை கற்றுப்போகிய அறிவுஎன்றும் ஒன்றுண்டு.உள்ளச்சம்வையும் பிள்ளாய்! **** பா_திதாசன்பகர்கிறார்:பிள்ளாய்!கசடறக்கல்லாய் எனில்தமிழ் உன்இளமைக்குப் பாழ்! **** தீந்தமிழ்த்துறை புக்குஇன்று கற்ற பாடம்:யானே தருமியும்யானே சிவனும்யானே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச.சக்தி கவிதைகள்
சோற்றுக்கடவுள்..! அந்தக் கடவுளைகாலையில்தான்கண்ணாரக் கண்டேன்கரடு முரடாகிப் போனஎன் காணிநிலத்தைஉழுது கொண்டிருந்தான்அரைஞாண் கயிற்றுகோவணத்தோடுதூரத்து ஏரிகண்மாயின் மீதுவீற்றிருந்தகடவுளின் கோவணம்காற்றில் மெல்லப் பறந்து கொண்டிருந்ததுகுருவிகளை விரட்டும்பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக. **** தூக்கம் என்னை நெருங்கிவர மறுக்கிறது தூக்கம்திறந்து கிடந்தஎன் வீட்டு ஜன்னலையே நோட்டமிடுகிறேன்என் வானத்திற்கு கீழேமழை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அய்யனார் ஈடாடி கவிதைகள்
வெள்ளிக்கிழமையென்றாலே அம்மையின் கால்களுக்கு ஓய்வு என்பதில்லை விரிசல் விட்ட கால்களில் அப்பிக் கிடக்கின்றன சகதிகளும் திடமான நம்பிக்கையும் வெடவெடுத்துப் போய் கூடையை இறக்கி கூவும் அவளுக்கு அவ்வப்போது கூறுக் காய்களுக்கிடையில் நீந்திப் பாய்கிறது மெல்லிய குரலின் மௌன ரீங்காரம் ஒவ்வொரு வாரச்சந்தையிலும்……
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ந.சிவநேசன் கவிதைகள்
மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கார்த்திக் பிரகாசம் கவிதைகள்
அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ம. இல. நடராசன் கவிதைகள்
எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச.சக்தி கவிதைகள்
கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குமரகுரு கவிதைகள்
சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…
மேலும் வாசிக்க