தமிழ் நவீன கவிதை
-
கவிதைகள்
கவிதைகள்- வா.மு.கோமு
துக்கத்தின் தனிமை என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் எனத்தான் நினைக்கிறேன்! வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான். ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும் சென்று வந்தவன் தான்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- நரன்
என் கதை எலுமிச்சையின் பழமையான அம்மாவை போலிருந்தார்கள் நர்த்தங்காயும், கடாரங்காயும். மண்ணுக்குள் சேனையையும், கருணைக்கிழங்கையும் போல் வளர்ந்தேன் வெளியே வெற்றிலைக் கொடிகளைப் போல் கூரையேறியும், மரமேறியும் மீன்கள்- அழுக்குகளையும் திண்பவன். பசி- கனியென சொல்லி எனக்கு சில கற்களை வழங்கினார்கள்- அதனாலென்ன.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கமலதேவி
முரண்களின் சமன் என்றைக்கும் அவள் அன்பை மறுதலிப்பவளாகவும், அன்பை யாசிப்பவளாகவும், திருகி நிற்கிறாள். நோக்கி வரும் அன்பை திருப்பிவிடும் காயங்களுடன் அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில் சயனிக்கும் ஆட்டுகுட்டி. அன்பின் காயங்களை அறிந்தவனின் தொடுகையில் மீள்கிறது அவள் திருப்பியனுப்பிய அனைத்தும். ***********…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மதுரா- கவிதைகள்
ஊசலாடும் நினைவுகள் 1. நிச்சயமில்லாத நாட்களை நோக்கிய நீண்ட பயணத்தில் நிகழ்தகவாய் கட்டங் கட்டுகிறது வாழ்க்கை.. சிலருக்கு வலியும் சிலருக்கு வரமுமாய். வெற்றியோ தோல்வியோ வினைகளுக்கான விளைவுகளாய் முற்றி முதிர்ந்தபின் ஊசலாடும் நினைவுகளோடு ஒவ்வொன்றாய் உதிரப்போவது நிச்சயம். நன்மரத்தின் இலையாய் துளிர்த்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ப.தனஞ்செயன்
i) எதுவுமே இல்லாமல் என் அருகில் அமர்ந்தது அந்தப்பறவை அதற்கு வயதாகிவிட்டது ஆனாலும் பறந்துதான் ஆகவேண்டும் பறத்தல் இன்றும் இளமையாகவே இருக்கிறது அந்தப்பறவைக்கு. காற்றோடு இசைத்த அதன் இறகில் என் ஒரு துளி மூச்சுகாற்றை அனைத்து கனிந்தது அதன் சிறகு. சிறகு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
நம் தேசம் இன்னும் நிறைய்ய அடிமைகளையே உருவாக்குகிறது. i) நாம் நிலக்கரிகளை வெட்டத்துவங்கினோம் சுரங்கங்களைப் பெருக்கினோம் இரும்புத்தாதுக்களை பிளந்து எடுத்தோம் அதன் வழியே தான் வனங்களையும் அதன் பழங்குடிகளையும் மூர்க்கமாகப் பிரித்தோம். இப்போது யுரேனியச் சுரங்கங்களும் அதிகரித்திருக்கின்றன ஆழ்துளை எண்ணெய் கிணறுகளும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை -தமிழ்மணி
மீட்பர் தேங்கியிருக்கும் குட்டையில் துடித்துக் கொண்டிருக்கின்றன நீந்தத் தெரியாத தூறல்கள் காக்கையின் அலகும் தெருநாயின் நாவும் அதன் மீட்பர் இச்சையின் கூட்டில் விறைத்து தனித்திருக்கும் சிசினத்தின் நரம்பு சொல்கிறது “உனக்கான மீட்பர் இன்னும் வரவில்லை” பிரம்மச்சாரியத்தின் குட்டை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் -சக்தி ஜோதி
1.கால உறக்கம் வசந்தத்திடமிருந்து விதவிதமாய் வண்ணங்களையும் வாசனைகளையும் பெற்றுக்கொண்ட மலர்கள் பருவத்தின் கொடையால் மண்ணெங்கும் மலர்ந்து நிறைகையில் தேடிவந்து தேன் குடிக்கும் தும்பிகள் அன்னிச்சையாக நிகழ்த்திடும் அயல் மகரந்தச் சேர்க்கையினால் சூல் கொள்ளத் தொடங்கும் விதையொன்றிற்குள் உறங்குகிறது முளைத்தெழுந்து வானத்தைத் துழாவிடும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை-தமிழ் உதயா
உயிர் தீண்டும் ரகசியங்கள் மண்படை வெடிக்க வெடிக்க தீண்டும் உள்ளங்கால்களில் மூச்சுவிடும் ஓசை கேட்கிறது என் பனைமரத்தீவு இருள் சூழினும் இன்னும் அழகாயிருக்கிறது கார்த்திகை மொட்டலர்த்தி விரியத்தொடங்குகிறது நீலக்கடல் தாழ தலையோடுகளில் மூளைச்சிதைவன்றி செக்கச்சிவந்து உயிர்க்கனலில் மிதிக்கிறது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் -வலங்கைமான் நூர்தீன்
1) இலவச (மனக்) கழிப்பறைகள் பேருந்து நிலையத்தின் துர்நாற்றம் பீடித்த இலவச கழிப்பறைக்குள் நுழையுமவன் அவசர அவசரமாக தன் கையிலிருக்கும் கரிக்கட்டியால் அழுக்கும், சளியும், வெற்றிலை, பான் எச்சில் கறைகளுடன் மூத்திர வீச்சமடிக்கும் சுவரில் ஆண் பெண் அந்தரங்க உறுப்புகளை வரைந்து…
மேலும் வாசிக்க