கவிதைகள்

  • Sep- 2020 -
    22 September

    கமலதேவி கவிதைகள்

    முதல்மழை      தீ வெயிலில் காய்ந்த குன்றுகள் மேகங்கள் சூழ நிற்கின்றன… இனி மெல்ல எழுவாள் பச்சை மாமலை போல் மேனியனின் மார்பில் உறையும் தேவி. *** *** *** உலகமீன்றாள் தீ விழியனின் வெம்மையில் பொழிகிறாள், அவன் பாறைகளில் வழிகிறாள், மண்ணில்…

    மேலும் வாசிக்க
  • 22 September

    சுசித்ரா மாரன் கவிதைகள்

    தற்கொலைக் குறிப்பு குற்றவுணர்வில் சிலரைத் தள்ளவும்… மீட்கவும்… அதிர உடையும் ஆழித்தேரின் இறுதிச்சுற்று நிரந்தர தொலைதலுக்கென மனிதன் மட்டுமறிந்த உபாயத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்குறிப்பு கடந்த ஜீவனின் கடைசி நொடிகளை பதைபதைக்க வாழ்ந்து பார்க்க வைக்கும் சாகசக்கட்டுரை விடுதலை விடையாகும் உடல் உதிர்த்தது…

    மேலும் வாசிக்க
  • 22 September

    இரா.பூபாலன் கவிதைகள்

      1 அப்போதுதான் முதன் முதலில் பார்த்த அவளை அப்போதே பின் தொடர ஆரம்பித்துவிட்டேன் அவளை அழகு என்று சொல்வதற்கான சொற்களை அந்தக் கணத்திலேயே தொலைத்துவிட்டிருந்தேன் ஊரின் மிக நீண்ட வளைவுகளில் அவள் நடந்து கொண்டிருந்தாள் நான் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தேன் வெளி ஒரு கருந் திரையைப் போல திக்கற்று…

    மேலும் வாசிக்க
  • 19 September

    கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

    இறகால் வருடும் நிர்வாணம் மலரும் பூவின் கணம் நிலைத்த நிலையில் வீசும் அம்பு நிற்கும் மாளிகை ஓடும் நதி எட்டிய தூரத்தை அள்ளிவிடுவது இயல்பாய் இருப்பதற்கு ஒரு படி மேலே என் திட்டத்தின் நூறு சதவிதத்தின் அடுத்த திட்டங்கள் எனக்கான வலையை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

    1 ஒரு றப்பான் இசை ஓராயிரம் இரவுகளுக்கு முன் அவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள் அந்த றப்பான் இசையொலியை. ஓராயிரம் இரவுகளுக்குப் பின் நீயும் ரசித்திருந்தாய். இன்று ஒரு முன்னிரவில் நானும் ரசிக்க விரும்பி நின்றேன் எல்லாக் காதுகளாலும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – க.ரகுநாதன்

    வீடு எனப் பெயரிட்ட கட்டிடம் மஞ்சள் உடலில் சிவப்பு செவ்வகங்களும் ஒடிந்துபோய் ஒரு நூலில் தொங்கும் கொம்பும் கொண்டு கதவிடுக்கில் படுத்திருக்கிறது ஒட்டகச்சிவிங்கி எனப் பெயரிடப்பட்ட பப்பு. கைகளில் நடனமும் கால்களில் உதை அசைவுகளும் கண்களில் சிரிப்பும் காட்டி ஒரு கண்ணை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – விஜயக்குமார்

    காதலியின் திருமணப் புகைப்படத்தில் கூரிய ஒளி வீசும் அவள் கண்கள் வண்ண சாயத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தன மலைப் புற்களாய் புருவங்களிடையே இருந்த குட்டி குட்டி மயிர்களை அழகெனும் பெயரில் பிடுங்கி எடுத்திருந்தாள் ஆண்மைத்தனத்தைக் காட்டும் அரும்பு மீசையை அறவே நீக்கி போலித்தனமாக பெண்மையைப்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ஜீவன் பென்னி

    மீதமிருக்கும் வாழ்வுகளைக் கதைகளாக அடுக்கி வைத்தல் செங்கலை வரிசையாக அறுத்துக் கொண்டிருப்பவள் உலகினை நீளவாக்கில் கட்டி முடிக்கிறாள். 1. தினந்தோறும் கைகளைத்தட்டி இயேசுவை அழைத்தபடி யிருக்கும் அவளின் தலைமுடி வெள்ளையாகிவிட்டன அவளின் தோல் சுருக்கங்களில் வறண்டுகிடக்கிறது அவளின் பிள்ளைகள் மாதத்திற்கு ஒருமுறை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – முருகன் மந்திரம்

    – 1 – புணர்வதில் சலித்துக் கிடக்கும் யோனி! – குறிக்கு ஏங்காத யோனித்துளையொன்றும் இல்லை என்னிடம்.   ஒரே ஒருமுறை என்னை ஆடையின்றி பார்ப்பதே மோட்சம் என்றான் ஒருவன்.   ஒரே ஒருமுறை உன்னைப் புணர்ந்து முடித்த நிமிடத்தில் செத்துப்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – கீதா மதிவாணன்

    அவள் கவிதைகள்   கனியின் இனிப்பெனத் திரண்டிருப்பவளை நசுக்கிப் பிழிந்து புளிப்பின் வாடை புகுத்தி புட்டிக்குள் அடைத்துவைக்கிறது காலம். தனிமையிலும் தவறவிட்ட தருணங்களிலும் தள்ளாடிக் கொண்டிருப்பவனின் நடுங்கும் கரமேந்திய கோப்பையில் நான்காம் முறையாய் நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறாள் அவள். கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிறக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button